தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டப்படவுள்ளது.
இந்த கட்டிடத்திற்கு நிதி திரட்ட கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது.
இவ்விழாவில், ரஜினி, கமல் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
ஆனால் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கவில்லை.
இதனிடையில் இதில் கலந்துக் கொண்ட கலைஞர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி சங்க டிரஸ்டி பதவியிலிருந்து எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்திருந்தார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் எஸ்.வி.சேகர் பேசும்போது….
”நடிகர் சங்க கட்டிடம் கட்ட மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை.
படம் பார்க்க மக்கள் பணம் கொடுக்கிறார்கள். அதில் சம்பாதித்த பணத்தை நடிகர்கள் சங்க நிதியாக கொடுக்கலாமே என்கிறார் அஜித்.
எனவேதான் அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.” எனத் தெரிவித்தார்.
SVe Shekar reveals Why Ajith not participated in Nadigar Sangam function