தேவையான அரசியல்… சிம்புவின் திரைமொழி…; ‘மாநாடு’ பட வெற்றி மகிழ்ச்சியில் சீமான்

தேவையான அரசியல்… சிம்புவின் திரைமொழி…; ‘மாநாடு’ பட வெற்றி மகிழ்ச்சியில் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை பார்த்த சீமான் 2 பக்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…

அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு.

இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாகி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.

சொல்ல வந்த செய்தியை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட்பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.

எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல்மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப் பதித்திருக்கிறார்.

கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறைகொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மன மகிழ்வடைகிறேன்! அன்புச் சகோதரன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத்திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்!

தம்பி யுவன் சங்கர்ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீண் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்றுகாட்டி, வெற்றிப்படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்!

எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம்பூரிப்பு அடைகிறேன்!

நானே வெற்றி பெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்! இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

NTK leader Seeman praises STR’s Maanaadu

300 பேருடன் சதீஷ் சண்டை… 2 வருட போஸ்ட் புரடக்சன்.. 800 மணி நேர டப்பிங்….; ஜிவி. பிரகாஷின் ‘பேச்சுலர்’ பட சுவாரஸ்யங்கள்..

300 பேருடன் சதீஷ் சண்டை… 2 வருட போஸ்ட் புரடக்சன்.. 800 மணி நேர டப்பிங்….; ஜிவி. பிரகாஷின் ‘பேச்சுலர்’ பட சுவாரஸ்யங்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் GV பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில்

இசையமைப்பாளர் சித்துகுமார் பேசியதாவது…

முதலில் இப்படத்திற்காக சந்தித்த போது படத்தில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது, அதன் பிறகு ஒரு 6 மதம் கழித்து மீண்டும் என்னை தேடி இந்த வாய்ப்பு வந்தது. ஜீவி சார் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் தான் என் முதல் படம், ஜீவி இசை எனக்கு பிடிக்கும் அவருக்கு இசையமைக்க பயம் இருந்தது. அவருக்காக இசையில் சில விசயங்கள் செய்தேன். வெகு குறுகிய காலத்தில் இசையமைக்க வேண்டியிருந்தது ஆனால் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளோம். இயக்குநருக்கு முதல் படம் மாதிரியே இல்லை நன்றாக செய்திருக்கிறார் உங்களுக்கு படம் பிடிக்கும் நன்றி.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் பேசியதாவது…

என்னோட கேரியரில் ராட்சசனுக்கு பிறகு, என் வாழக்கையில் மிக முக்கியமான படம். ஜீவி கூட என்னோட இரண்டாவது படம், சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தம்பியாக வந்திருப்பார் இதில் டோட்டலாக வேறு டோனில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். இயக்குநரும் நானும் 11 வருடமாக இந்தக்கதையை பேசியுள்ளோம், அது படத்தில் வந்திருக்கிறது. எங்களுக்கு முழு திருப்தியை தந்துள்ளது. உங்களுக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசியதாவது…

3 வருடத்துக்கு முன்னாடி டில்லிபாபு சாரை ஒரு மதியத்தில் சந்தித்து கதை சொன்னேன். மூன்று மாதங்கள் வெயிட் பண்ணுங்கள் செய்யலாம் என்றார் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. நாம் நினைத்ததை திரையில் கொண்டுவருவது கஷ்டம், தயாரிப்பாளர் எப்போதும் வேறெதாவது எதிர்பார்ப்பார்கள். இப்படத்திற்கு 100 நாட்கள் டப்பிங் செய்தோம்,

தயாரிப்பாளர்களுக்கு அது என்ன மாதிரியான உணர்வை தருமென்று தெரியும். ஆனால் எங்கள் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து, இப்படைப்பை உருவாக்கியுள்ளார் அவருக்கு நன்றி. தேனி ஈஸ்வர் சார், படத்தில் பல காட்சிகளை தோளில் கேமராவை வைத்தே தான் படமாக்கி தந்தார். நாங்கள் கேட்டதை விடவும் சிறப்பாக செய்துள்ளார்.

ஒரு காட்சி ஒகே டேக்கே 40 டேக் போகும், அதை அவ்வளவு பொறுமையாக பார்த்து, கிரியேட்டிவாக எடிட் செய்துள்ளார் ஷான். அவருக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. ஒரு நண்பனாக அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஜீவி சார், ஒரு ஆக்டராக அவர் முகத்தில் ஒரு அமைதி இருக்கிறது, அது இயக்குநருக்கு வரம், இந்த மாதிரி படத்தில் அவர் முகத்தில் காட்டும் சின்ன, சின்ன உணர்வும் படத்திற்கு அவ்வளவு பலமாக இருக்கும்.

படம் இத்தனை இயல்பாக இருக்க அவர் தான் காரணம். எல்லா நடிகர்களும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள் அனைவருக்கும் நன்றி.

திவ்யா 3 மாதங்கள் பயிற்சி எடுத்து நடித்தார். இந்தப்படம் அவர் வாழக்கையில் முக்கியமானதாக இருக்கும். ஒரு அறிமுக நடிகையாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

சித்துவை தான் அதிகமாக டார்ச்சர் செய்திருக்கிறேன் அதையெல்லாம் பொறுத்துகொண்டு சிறப்பான பின்னணி இசை தந்திருக்கிறார். அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்து, அழகாக உருவாக்கியுள்ளோம், உங்களுக்கு பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி

Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் பேசியதாவது…

இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். சாதாரண ரசிகனாக சொல்கிறேன் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். படம் பார்த்து மறுநாளும் மனதிற்குள் இந்தப்படம் ஓடிக்கொண்டே இருந்தது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் டில்லிபாபு இந்தப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம் என்றார். டப்பிங் மட்டுமே 800 மணி நேரத்திற்கும் மேலாக செய்திருக்கிறார்.

இவரைப்போல் சமீபத்தில் திரைத்துறை மீது காதல் கொண்ட எவரையும் பார்த்தில்லை. தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய கலைஞனாக இப்படத்தின் மூலம் வந்திருக்கிறார் இயக்குநர் சதீஷ்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் போல் இப்படம் இருக்கும். ஜீவி சாரோட கேரியர் பெஸ்டாக இப்படம் இருக்கும். இளைஞர்களுக்கான படமே இங்கு இல்லை அதை போக்கும் விதமாக இப்படம் இருக்கும். எல்லோரும் அனுபவித்து ரசித்து பார்க்கும் படைப்பாக இப்படம் இருக்கும், பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு பேசியதாவது…

படத்தில் வேலை செய்த 300 பேரிடமும் சதீஷ் சண்டை போட்டுள்ளார். அவர் சண்டை போடாதது என்னிடம் மட்டும் தான். 800 மணி நேரம் டப்பிங் செய்தது இது தான் முதல் முறை. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள்.

சதீஷ் உடன் வேலை பார்க்க முடியாது என ஓடியவர்கள் நிறைய பேர். நான்கு படத்திற்கான உழைப்பை இந்தப்படத்திற்கு தந்திருக்கிறது படக்குழு. போஸ்ட் புரடக்சன் மட்டுமே 2 வருடம் ஆகியிருக்கிறது.

அனைவருமே அவர்களின் பெஸ்ட்டை தந்துள்ளார்கள். படத்தை பார்த்த அனைவருமே படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். எனக்கு ராட்சசனுக்கு பிறகு பெரிய படமாக இது இருக்கும். ஜீவி தந்த உழைப்பு பிரமிப்பானது இரவு பகலாக உழைத்திருக்கிறார். அவர் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். திவ்யபாரதி அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார். ஜீவிக்கும் அவருக்கும் நடிப்பில் போட்டியிருக்கும். நான் எடுத்துள்ள 6 படத்தில் 5 பேர் அறிமுக இயக்குநர்கள் தான், ராட்சசன் இயக்குனருக்கு மட்டுமே இரண்டாவது படம்.

நான் அடுத்து எடுக்கும் 6 படமும் புதிய இயக்குநர்கள் தான். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதை பெருமையாக கருதுகிறேன். சிறந்த திரைக்கதைகள் செய்தால் அதற்கான பாதை இங்கு இருக்கிறது. 2 வருஷம் இயக்குநர் சதீஷ் கேட்ட அனைத்தையும் தந்திருக்கிறேன்.

இயக்குநருக்கான சுதந்திரத்தை தர வேண்டும் என்று நினைப்பவன் நான். நான் கண்டுபிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் சதீஷ். எல்ல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும் தியேட்டரில் படம் பாருங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகை திவ்யபாரதி பேசியதாவது…

2 வருடமாக இந்த தருணத்திற்காகத்தான் உழைத்திருக்கிறோம். தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நினைத்திருந்தால் பெரிய நடிகைகளை நடிக்க வைத்திருக்கலாம் ஆனால் என்னை நம்பி நடிக்க வைத்ததற்கு நன்றி. முதலில் ஷீட் செய்யும்போது நான் பயந்துவிட்டேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது.

க்ளைமாக்ஸ் எல்லாம் என்னால் பண்ண முடியாது என நான் அழுதுவிட்டேன் இயக்குநர் சதீஷ் தான் ஆறுதல் தந்து நடிக்க வைத்தார். ஜீவி சார் மிக இயல்பாக இருந்து, எனக்கு டயலாக் எல்லாம் சொல்லி தந்தார். என் அம்மா சிங்கிள் பேரண்ட் எப்பவும் என் கூடவே இருந்தார். எல்லோரும் படம் பாருங்கள் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் GV பிரகாஷ் குமார் பேசியதாவது…

இந்தப்படம் ஆண் பெண் உறவை பேசும் படமாக இருக்கும். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஶ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் செய்ததை இப்படத்தில் சதீஷ் செய்திருக்கிறார். இது ரெகுலரான படமாக இருக்காது. என் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து இப்படத்தில் நடித்திருக்கிறேன். டில்லிபாபு சார் உடன் மேலும் 3 படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். மிக நம்பிக்கையுடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது போல், சதீஷுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைவார். முதல் படத்தில் பெரிய பாத்திரம் கிடைப்பது அரிதானது அது திவ்யபாரதிக்கு கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு காட்சியும் நடிக்கும் போது, அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார். ஈஸ்வர் சார் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஷான் லோகேஷின் எடிட்டிங்கிற்கு ரசிகன் நான். நான் தப்பிச்சிட்டேன் சித்துகுமார் மாட்டிக்கொண்டார் ஆனால் பராவாயில்லை அருமையான மியூசிக் தந்திருக்கிறார்.

இந்தப்படத்தில் கோவையின் உண்மையான சிலாங்கை கொண்டு வந்திருக்கிறோம் அனைவருககும் பிடிக்கும். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

‘பேச்சிலர்’ திரைப்படத்தில் GV பிரகாஷ் குமார், திவ்யபாரதி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், முனீஷ்காந்த், பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர் இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் பெற்றுள்ளார்.

GV பிரகாஷ்குமார் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். திபு நினன் தாமஸ், காஷ்யப் மற்றும் சிகப்பு மஞ்சள் பச்சை படப்புகழ் சித்து தலா ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளனர், மேலும் படத்தின் பின்னணி இசையை சித்து செய்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளராக ஷான் லோகேஷ், கலை இயக்குநராக M.லட்சுமி தேவா, ஸ்டண்ட் இயக்கத்தில் PC பணியாற்ற, நடன இயக்குனராக அசார், K. பூரணேஷ் (நிர்வாகத் தயாரிப்பாளர்), SS.ஸ்ரீதர் (தயாரிப்பாளர் நிர்வாகி), விக்னேஷ் தங்கராஜூ (இணை இயக்குநர்), Sync Cinema (ஒலி வடிவமைப்பு), சுபையர் (உடை வடிவமைப்பு), Prism & Pixels VFX Studio (DI), கிரண் R (VFX), மணி தாமோதரன் (தயாரிப்பு மேலாளர்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைன்), இ.ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) பணிகளை செய்துள்ளனர்.

GV Prakash in Bachelor press meet highlights

என் கண்ணீரை தரையில் விழாமல் தாங்கிய உள்ளங்களே..; சிலிர்க்கும் சிலம்பரசன்

என் கண்ணீரை தரையில் விழாமல் தாங்கிய உள்ளங்களே..; சிலிர்க்கும் சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய ‛மாநாடு படம் நவம்பர் 25ல் ரிலீசானது.

படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அதில்…

‛‛இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் மாநாடு. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.

‘மாநாடு’ படம் உலகம் முழுக்க மிகப்பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்கு காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட்பிரபு, அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், மாநாடு படக்குழுவும், என் தாய், தந்தை, படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என் ரத்தமாகிய அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால், பதிலுக்கு தெரிவிக்க வேறு வார்த்தை இல்லையே… ஆடியோ விழாவில் நான் சிந்திய (கண்ணீர்) சிறு துளிகளை தரையில் விழ விடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள், அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகர் சிலம்பரசன் டிஆர்.

STR’s emotional thanks note on Maanaadu post release

விஸ்கி விளம்பரத்தில் விஜய் பட ஹீரோயின்.; ரசிகர்கள் கண்டனம்

விஸ்கி விளம்பரத்தில் விஜய் பட ஹீரோயின்.; ரசிகர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய கவர்ச்சி படங்களை அடிக்கடி தன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.

மாலத்தீவுக்கு சென்று வந்தபோது எடுத்த படங்களை பதிவிட்டு இருந்தார் பூஜா ஹெக்டே.

இந்த நிலையில் ஒரு மது விளம்பர வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஒரு பிரபல நிறுவனத்தின் மதுவை கிளாசில் ஊற்றி வைத்து விட்டு அதனருகே கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டுள்ளார் பூஜா.

மது குடிப்பதே தவறு. அதை இப்படி நீங்கள் செய்யலாமா? என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Vijay film heroine in controversial liquor ad

சிம்பு பட வில்லனுக்கு ஜோடியாகிறார் சூர்யா பட ஹீரோயின்

சிம்பு பட வில்லனுக்கு ஜோடியாகிறார் சூர்யா பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிவி. பிரகாஷ் உடன் சர்வம் தாளமயம் மற்றும் சூர்யா உடன் சூரரைப்போற்று ஆகிய படங்களில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி.

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் அபர்ணா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எந்த பட அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மலையாளத்தில் காமெடி நடிகர் நீரஜ் மாதவ்க்கு ஜோடியாக நடித்து வருகிறாராம் அபர்ணா. இந்த படத்திற்கு சுந்தரி கார்டன்ஸ் என்ற டைட்டில் வைத்துள்ளனர்.

கௌதம் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்து வருபவர்தான் இந்த நீரஜ் மாதவ் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Aparna Balamurali joins Neeraj Madhav next film

திருமணத்திற்கு தடை.; மீண்டும் அம்மன் சீசனை தொடங்க வரும் ‘உத்ரா’

திருமணத்திற்கு தடை.; மீண்டும் அம்மன் சீசனை தொடங்க வரும் ‘உத்ரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

25 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்திய சினிமாவில் அம்மன் பட சீசன் இருந்தது. தமிழகத்தில் இத்தனை விதமான அம்மன் சாமிகள் இருக்கிறார்களா? என்பதே அப்போதுதான் தெரிய வந்தது.

அதன்பின்னர் அம்மன் சீசன் முடிந்துவிட்டதோ என்னவோ.? தமிழ் இயக்குனர்கள் அம்மனை கண்டுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு உத்ரா என்ற பெயரில் அம்மன் படம் ஒன்று வெளியாகவுள்ளது-

இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரிக்க நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். சாய்தேவ் இசை அமைக்க, ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் கௌசல்யா அம்மனாக நடிக்க உத்ராவாக ரக்ஷா நடிக்கிறார்.

இந்த படம் அடுத்த மாதம் டிசம்பர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கதைக்சுருக்கம்..

வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை. அங்கு திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.

அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன-? என்பதை சொல்ல இந்த படம் வருகிறது.

உத்ரா ரிலீசுக்கு பிறகு மீண்டும் அம்மன் சீசன் தொடங்குமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Uthraa new tamil film will release on dec 10

More Articles
Follows