தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று ஜூலை 22.. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.
அப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.
அவர் பேசியதாவது…
“இந்த யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.
நான் நடித்த படங்களில் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான்.
இந்த இரு படங்கள் ரிலீசான பின்னர் தான் எல்லோருக்கும் இவர்கள் பற்றி தெரிய வந்தது. இதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறி விட்டனர். ஆனால் நான் இன்னும் நடிகானகவே இருக்கிறேன்.
இமயமலையில் அமைந்துள்ள குகைகள் சொர்க்கம். அங்கு கிடைக்கும் சில மூலிகைகளை சாப்பிட்டால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுபோல கங்கை நதியில் பல மூலிகைகள் கலக்கும். அதனால் அது புனிதமாக உள்ளது.
உடலை பாதுக்காக்க உணவை சரியாக எடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
மனிதர்கள் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வார்கள்.. ஆனால் குழந்தைகள் அப்படியல்ல.
என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன்.
ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை” என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
No peace, no happiness..; Rajini Open Talk