தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.
என்னதான் இவர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றாலும், இவரின் படங்களுக்கு மட்டும் மவுசு கூடிக் கொண்டே செல்கிறது.
படத்தில் நாயகனே இல்லாவிட்டாலும் நயன்தாரா இருக்கிறாரே அது போதும் என ரசிகர்களும் சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.
அறம், டோரா ஆகிய படங்களில் இவரே முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படத்திலும் இது தொடர்ந்துள்ளது.
பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும்தான் அதிகாலை, காலை சிறப்பு காட்சிகள் இருக்கும்.
தற்போது அந்த பெருமை நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது.
கோலமாவு கோகிலா தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சில தியேட்டர்களில் காலை சிறப்புக் காட்சி நடைபெற்றுள்ளது.
இதனால் கோலிவுட்டே நயன்தாராவை ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது.
Nayantharas Kolamavu Kokila special show at early morning