தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.
இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.
இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.
இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இத்தனை படங்களா? பிசியாகும் புரொடியூசர் நயன்தாரா
விரைவில் திருமணம் நடைபெறப் போகிறது என்ற செய்தி நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டது.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.
இந்த படத்திற்கு பின்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று பரவலாக பேசப்பட்டது.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறும் என்று தகவல் வெளியானது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எங்கே.? எப்போ.? நடக்கப் போகுது தெரியுமா.?
ஆனால் அவர்கள் இருவரும் இது குறித்து இதுவரை பேசவில்லை.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் நயன்தாரா வழிபாடு செய்துள்ளார்.
தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள மேலவழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வக் கோயில் எனச் சொல்லப்படுகிறது.
இந்த கோயிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ வழிப்பாடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இதனையடுத்து கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயிலிலும் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
Nayanthara and Vignesh Shivan visiting their ancestral temple in Tamil Nadu