தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் பிஸியாகவுள்ள நடிகை நயன்தாரா தற்போது தான் தயாரிக்கும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகின்றனர்.
Rowdy Pictures நிறுவனம், தமிழ் சினிமாவில் பல முக்கிய திரைப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இவர்களின் தயாரிப்பில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ (Pebbles) ஏற்கனவே ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு உட்பட சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ளது. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை.
இத்தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு திரைப்படமான ‘ராக்கி’ அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் சில ரசிகர்களும் ஒரு சில பிரபலங்கள் படத்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர் ஆகியோர் நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திகில் படம் ‘கனெக்ட்’.
இதனையடுத்து மற்றும் சூரரைப் போற்று புகழ் கிருஷ்ண குமார், பின்னணிப் பாடகி ஜோனிதா காந்தி, பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” என்ற ரோம்-காம் திரைப்படமும் தயாரிப்பில் உள்ளது.
மேலும் அறிமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் கவின் நடித்து வரும் ‘ஊர்குருவி’ படமும் உருவாகி வருகிறது.
இத்துடன் விஜய்சேதுபதி நடித்து தமிழில் சூப்பர் ஹிட்டான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை குஜராத் மொழியில் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
Actress Nayanthara is busy producing films