*ஓடு ராஜா ஓடு* படத்திற்காக தெருத் தெருவாக ஓடிய நடிகர் சங்க தலைவர்

*ஓடு ராஜா ஓடு* படத்திற்காக தெருத் தெருவாக ஓடிய நடிகர் சங்க தலைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor nassarவிஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் ஓடு ராஜா ஓடு.

இப்படத்தில் ஜோக்கர் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த குருசோமசுந்தரம் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் நாசர், ‘லென்ஸ்’ அனந்த்சாமி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் செட்டப் பாக்ஸ் பிரச்சினையை சொல்வதுடன் சமூக விழப்புணர்வை ஏற்படுத்தும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிடி. செல்வகுமார் பெற்றுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது விழா மேடையில் நடிகர் நாசர் பேசும்போது தன் பட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

“இப்போது சினிமாவுக்கு வரும் இயக்குநர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் வித்தியாசமான படங்கள் நிறைய வருகின்றன.

எல்லாப் படத்திற்கும் நாம் முழு உழைப்பையும் தந்துவிட மாட்டோம். ஒருசில படங்கள் மட்டுமே நாம் ஈடுபாட்டுடன் நடிக்கும் வகையில் இருக்கும். அந்தவகையில் இப்படத்தில் நான் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன்.

படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவாக ஓடினேன்.

இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம்” என நாசர் பேசினார்.

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விக்ரம் மகன் துருவ் மீது 3 வழக்கு

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விக்ரம் மகன் துருவ் மீது 3 வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhruv vikramசென்னையில் விடிய விடிய பார்ட்டி நடத்தி முடித்துவிட்டு நடிகர்கள் அதிகாலையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது.

அதுபோன்ற சம்பவம் தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தமது நண்பர்களுடன் சென்னை மந்தைவெளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 4 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் சுசுகி பலேனோ காரை ஓட்டிக் கொண்டு, ஆர்.கே. சாலை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படும் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதியதுள்ளது.

இதில், போஸ்டர் ஒட்டும் பணியை முடித்துவிட்டு, தமது ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநர் காமேஷ் படுகாயமடைந்தார்.

ஆட்டோ மீது மோதியும், வண்டியை நிறுத்தாமல் டிடிகே சாலையில் இருந்த முர்ரேஷ் கேட் சாலையில் அதே வேகத்தோடு துருவ் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீட்டருகே உள்ள பிளாட்பார்மில் மோதிய கார், பள்ளத்தில் சிக்கியதை அடுத்து நகர்த்த முடியாமல் நின்று போனது.

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். விக்ரமின் மகன் துருவ் விபத்தை ஏற்படுத்திவிட்டு வந்தது தெரியவந்ததையடுத்து, வழக்கை அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றினர்.

இதையடுத்து, துருவ் மீது அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், விபத்து மூலம் கொடிய காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அவரை கைது செய்து பின் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர். துருவ் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் காமேஷின் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு.. : கமல்

ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 10ல் ரிலீசானது.

அந்த படத்தை சென்னை கிண்டியில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் இராணுவ வீரர்களுடன் அமர்ந்து இன்று கமல் கண்டுகளித்தார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பேசியபோது, விஸ்வரூபம் படத்துக்காக தமக்கு ராணுவப் பயிற்சி அளித்ததற்காக இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்புத் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு என்று கூறிய கமல், நாடு காக்கும் வேலை முக்கியமானது என தெரிவித்தார்.

தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என சீறும் சிநேகனே இதை கவனிச்சீங்களா?

தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என சீறும் சிநேகனே இதை கவனிச்சீங்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Snehan angry attack speech on TN Govt in DhaDha 87 audio launchசாருஹாசனின் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாதா 87.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் சிநேகன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது தமிழக அரசை கடுமையாக சாடினார். எதுக்காக இந்த அரசாங்கம் உள்ளது? என அனல் பறக்க பேசினார்.

காவிரி நீருக்காக பல வருடங்களாக தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மழை வெள்ளதால் அணைகள் நிரம்பி காவிரி நீர் வந்துவிட்டது.

ஆனால் இங்கே நீரை சேமிக்க வழியில்லை. எல்லாம் வீணாக கடலில் போய் சேர்கிறது.

நீரை சேமிக்க முடியாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும். எதுக்குடா? நீங்க இருக்கீங்க என்றார்.

அவர் மேலும் பேசும்போது…

தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் வாழட்டும். ஆனால் தமிழன்தான் இந்த தமிழகத்தை ஆள வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

அங்கேதான் அவருடைய கருத்துக்கள் முரண்பாடாக உள்ளது.

தற்போது தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தமிழர்கள் தானே. அவர்கள் ஆளும் தமிழகம் எப்படியுள்ளது?

தமிழக அரசை குறை சொல்லும் சிநேகனுக்கு அவர்கள் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இருவரும் தமிழர்கள் என்பது தெரியாதா?

தமிழர்கள் ஆளும் தற்போதைய தமிழகத்தின் நிலை அவருக்கு தெரியாதா?

ஐயா சிநேகன் அவர்களே. இதற்கு உங்கள் பதில் என்னவோ..?

Lyricist Snehan angry attack speech on TN Govt in DhaDha 87 audio launch

தமிழன் என்று முழங்கும் ஜாக்குவார் தங்கமே இதெல்லாம் ஓவரா இல்ல.?

தமிழன் என்று முழங்கும் ஜாக்குவார் தங்கமே இதெல்லாம் ஓவரா இல்ல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jaguar Thangam may act work in Many languages But he will not allow others to work in Tamilநீண்ட இடைவெளிக்கு பின்னர் சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தாதா 87.

இதில் ஜனகராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீவிஜய் ஜி இயக்கிள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள காசி திரையரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை கௌதமி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் சிநேகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது வழக்கம்போல ஜாக்குவார் தங்கம் தமிழன் தமிழன் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் தமிழன்தான் இயக்குனராக வேண்டும். தமிழ் சினிமாவில் தமிழன்தான் நாயகனாக நடிக்க வேண்டும்… இப்படியாக தமிழன் மட்டும்தான் தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும் என்பது போல ஆவேசமாக பேசினார்.

இறுதியாக தமிழன் வென்றே தீருவான் என தொண்டை கிழியும் வகையில் உரக்கமாக பேசினார்.

அவருடைய தமிழ் உணர்வை நிச்சயம் பாராட்ட வேண்டும்தான். ஆனால் இப்படி தமிழன் மட்டுமே தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும் என்றால் இவர் எதற்காக மற்ற மொழி படங்களில் பணி புரிந்தார்.

ஜாக்குவார் தங்கம் அவர்கள் இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்துள்ளார்.

அதில் 500 படங்கள் மட்டுமே தமிழ் படங்கள். மற்ற அனைத்தும் மற்ற மொழி படங்களே.

அப்படி என்றால் இந்த தமிழ் உணர்வு இவருக்கு இந்த 60 வயதில்தான் வந்ததா? அல்லது இனி சினிமாவில் நாம் பணி புரிய போவதில்லை என நினைத்து பேசுகிறாரா?

மொழி மதம் அனைத்தையும் கடந்ததுதான் கலை என்பார்கள். ஆனால் இவர் இப்படி மேடைக்கு மேடை பேசுவது எந்த விதத்தில் நியாயம் சாரே..?

Jaguar Thangam may act work in Many languages But he will not allow others to work in Tamil

ஆராஸ் சினிமாஸ் தயாரிப்பில் *RX 100* தமிழ் ரீமேக்கில் ஆதி

ஆராஸ் சினிமாஸ் தயாரிப்பில் *RX 100* தமிழ் ரீமேக்கில் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Aadhi plays the lead in the Tamil remake of RX 100சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற “ஆர் எக்ஸ் 100″ என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி நடிக்க உள்ளார்.

இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் 100 ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.

” விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா – ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது.

நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.

இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார்.எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது.

தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது. ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

அதிவிரைவில் உருவாகி ரசிகர்களின் உள்ளத்தில் சீறி பாயும் ” ஆர் எக்ஸ் 100″ ஏன்று உற்சாகத்துடன் சொன்னார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

Actor Aadhi plays the lead in the Tamil remake of RX 100

More Articles
Follows