தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின் தற்போது சூப்பர் டீலக்ஸ், ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படங்களில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து சாந்தனுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
நாயகிகளாக நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில் படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சூட்டிங் மே மாதம் துவங்கவுள்ளது.