மிஷ்கின்-சாந்தனு-பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் ஆஸ்கர் நாயகன்..?

மிஷ்கின்-சாந்தனு-பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் ஆஸ்கர் நாயகன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskin and shanthanuதுப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின் தற்போது சூப்பர் டீலக்ஸ், ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சாந்தனுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

நாயகிகளாக நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சூட்டிங் மே மாதம் துவங்கவுள்ளது.

காலா ரிலீசுக்காக காத்திருக்கும் விஸ்வரூபம்-2

காலா ரிலீசுக்காக காத்திருக்கும் விஸ்வரூபம்-2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala and viswaroopam 2கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்’ படம் மாபெரும் வெற்றியடைய ‘விஸ்வரூபம்-2’ படத்தை உருவாக்கினார் கமல்ஹாசன்.

இதில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சென்சாரில் விஸ்வரூபம்-2 படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனை முன்னட்டு அடுத்த ஏப்ரல் மாதம் இதன் பாடல்கள் வெளியிட உள்ளனர்.

ரஜினி நடித்த ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. எனவே அந்த படத்துக்கு பிறகு விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக்கால் ஒருவேளை காலா தாமதமானால் விஸ்வரூபம் 2 படமும் தள்ளிப் போகும் எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ‌ஷங்கர் டைரக்‌ஷனில் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவுள்ளார் உலகநாயகன்.

கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் பட ரிலீஸ் அப்டேட்ஸ்

கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் பட ரிலீஸ் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadigaiyar thilagamநடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார் நாக் அஷ்வின்.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என தலைப்பிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்து வருகிறார்கள்.

அண்மையில் இப்பட கேரக்டர் போஸ்டர் வெளியானது. அதை பார்த்த எல்லோரும் சாவித்ரி போல் கீர்த்தி இருப்பதாக கூறியிருந்தனர்.

இவர்களோடு சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் வருகிற மே 9ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சந்தானத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் இணையும் ராஜேஷ்

சந்தானத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் இணையும் ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam and rajeshகடவுள் இருக்கான் குமாரு படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்தை எம்.ராஜேஷ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுநாள் வரை சந்தானத்தை ஒரு காமெடியன் ஆகத்தான் ராஜேஷ் இயக்கியிருந்தார்.

ஆனால் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ளார்.

சிவா மனசுல சக்தி, பாஸ்கர் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் அமோக வெற்றியால் சந்தானம், ராஜேஷின் இந்த புதிய கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில், சந்தானம் நடிப்பில் உருவாகவுள்ள படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் எம்.ராஜேஷ்.

காமெடி கதைக்களத்தில் ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகவுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

தியேட்டர்கள் மூடல்; சூட்டிங் நிறுத்தம்; 410 கோடி ரூபாய் முடக்கம்

தியேட்டர்கள் மூடல்; சூட்டிங் நிறுத்தம்; 410 கோடி ரூபாய் முடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nearly Rs 400 Crores loss due to Tamil film industry strike for 20 daysசினிமா தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டது.

தற்போது மூன்றாவது வாரமாக எந்த புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை.

இதுவரை 20 படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.100 கோடி வரை முடங்கியுள்ளது.

மேலும் தமிழ் தயாரிப்பாளர்கள் துவக்கியுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மார்ச் 16 முதல் கிட்டதட்ட 42 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னையைத் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் ரூ.410 கோடி முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இதுவரை இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிடவில்லை.

தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Nearly Rs 400 Crores loss due to Tamil film industry strike for 20 days

நொடிக்கு நொடி என்ற குறும்படம் இரண்டு வாரத்தில் படைத்த சாதனை

நொடிக்கு நொடி என்ற குறும்படம் இரண்டு வாரத்தில் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nodikku Nodi short film made record in Youtubeசில குறும்படங்களும் இன்று ஓசைப்படாமல் உலகளவில் கவனிக்கப்படுகின்றன. பார்வையாளர்களால் ஆராதிக்கப்படுகின்றன.

‘நொடிக்கு நொடி’ என்கிற அரைமணி நேரக் குறும்படம் இரண்டு வாரத்தில் முகநூலில் ஒரு மில்லியன் ரசிகர்கள் பார்த்து குறும்படத்தில் ஒரு சாதனை படைத்துள்ளது. பல வி.ஐ.பிக்களும் படம் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.

இதை ‘காமன் மேன் மீடியா’ சார்பில் சதீஷ் குமார் எழுதி இயக்கிக் தயாரித்துள்ளார்.

அது மட்டுமல்ல இதில் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இது இவரது இயக்கத்தில் வந்துள்ள 2வது குறும்படமாகும். முதல் குறும் படம் ”இந்தியன் டூரிஸ்ட்”

‘நொடிக்கு நொடி’யில் சதீஷ் குமார் , சஞ்சய் , கிஷோர் ராஜ்குமார் , ஸ்வாதிஷா நடித்துள்ளனர்.

இது வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலில் ,சுழலில் சிக்கிக் கொண்ட மூன்று பாத்திரங்களில் மையம் கொள்ளும் கதை.

படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒருவன், விருப்பமில்லாத வேலையில் இருக்கும் இன்னொருவன், காதலித்து ஈகோ மோதலால் பிரச்சினையில் பிரிந்துள்ள மற்றொருவன் என மூன்று பாத்திரங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை.

இக்காலத்துக்கு ஏற்றபடி நகைச்சுவை முலாம் பூசி உள்ளீடாக நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கடந்தகாலத்தின் துயரத்தை எண்ணி கவலையைத் தூசு தட்டி வருத்தப்படுவதும் எதிர்காலம் பற்றி அச்சப்படுவதும் என்று காலத்தை வீணடித்து நிகழ்கால நிம்மதியையும் அன்றாட ஆனந்தத்தையும் இழந்து விடாதீர்.

இதைப் புரிந்து கொண்டால் நொடிக்கு நொடி வரும் நேரம் எல்லாமே அனுபவிக்கத் தக்க இன்பமான தருணங்கள் தான் என்று உணர வைக்கிறது கதை.

இதைப் பார்த்து விட்டு நடிகர்கள் ராகவா லாரன்ஸ் , அருள்நிதி , சிபிராஜ் . ஆரி , இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, ‘கணிதன்’ சந்தோஷ் .’திருடன் போலீஸ்’ கார்த்திக் ராஜ், ‘அம்புலி ‘ ஹரிஷ் ,’ டிக் டிக் டிக்’ சக்தி ராஜன் , தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி , டிரை டண்ட் பிக்சர்ஸ் ரவீந்திரன் போன்ற திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர்.

இக் குறும்படத்திற்கு ஒளிப்பதிவு – பிரவீன் பாலு, இசை – எம்.. எஸ் ஜோன்ஸ் , எடிட்டிங் ரிச்சர்டு , சப் டைட்டில் ‘பாகுபலி’ புகழ் ரேக்ஸ். எழுத்து இயக்கம் ‘காமன் மேன்’ சதீஷ்குமார் .

‘நொடிக்கு நொடி’ குறும்படத்துக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.

Nodikku Nodi short film made record in Youtube

More Articles
Follows