க்ரீன் சிக்னல் கிடைச்சுடுச்சி.; ‘பேச்சுலர்’ இசையமைப்பாளர் சித்து இனிமே ‘பேச்சுலர்’ இல்லை

க்ரீன் சிக்னல் கிடைச்சுடுச்சி.; ‘பேச்சுலர்’ இசையமைப்பாளர் சித்து இனிமே ‘பேச்சுலர்’ இல்லை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சித்து குமார்.

சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த சித்து குமார் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக உருவெடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும், “அடி போலி…” என்ற தனியிசை வீடியோ பாடலை இசையமைத்து இயக்கிய சித்து குமார் அப்பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.

தமிழ் சினிமாவின் பிஸியான இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ’கண்ணை நம்பாதே’, சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறுகோடி வானவில்’, விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 13, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம், அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் சித்து குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி ராஜி என்பவரை சித்து குமார் மணக்கிறார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனிதவளம் மேம்பாட்டு (HR) அதிகாரியாக பணியாற்றுகிறார்.

பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட சித்து குமார் – ராஜி திருமணம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

சித்து குமார்

Music Director Siddhu Kumar to get married on september 9

இராமநாதபுரத்தில் இறால் வளர்ப்பு தொழிலில் நடிகர் நிதின் சத்யா

இராமநாதபுரத்தில் இறால் வளர்ப்பு தொழிலில் நடிகர் நிதின் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார்.

ராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை.

பேச்சலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார் உடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் ‘ஐங்கரன்’ கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் M செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

தயாரிப்பு – துவாரகா புரொடக்‌ஷன்ஸ் (பிளேஸ் கண்ணன்)
இயக்கம் – சுரேஷ் சாத்தையா
ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து
இசை – தரண் குமார்
படத்தொகுப்பு – சாபு ஜோசப்
கலை – சுரேஷ் களரி
தயாரிப்பு மேற்பார்வை – அன்பு மோகன் ரத்தினவேலு, K.சக்திவேல்
நடனம் – அசார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

கொடுவா

Actor Nithin Sathya starts  farming business in Ramanathapuram

‘விருமன்’-ல் வராத காட்சியை பகிர்ந்து சூரியை வாழ்த்திய ரோபோ சங்கர் மகள்

‘விருமன்’-ல் வராத காட்சியை பகிர்ந்து சூரியை வாழ்த்திய ரோபோ சங்கர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அண்மையில் வெளியான விருமன் படத்தில் நாயகி அதிதியின் தோழியாக நடித்திருந்தார்

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 27ஆம் தேதி நடிகர் சூரியன் பிறந்தநாளை முன்னிட்டு ‘விருமன்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில்…

சூரியை தன் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டிருப்பது போன்ற படம் உள்ளது.

பிறந்தநாள் வாழ்த்துகள் சூரி மாமா. உங்களின் கைகளில் வளர்ந்து, இன்று உங்களுடனேயே நடித்திருப்பது பாக்கியம்.. குத்துக்கல்லு.. கொலவிக்கல்லு…’ என குறிப்பிட்டுள்ளார்.

குத்துக்கல்லு.. சூரி கேரக்டர் பெயர்.. கொலவிக்கல்லு.. இந்திரஜா பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி மீண்டும் வருகிறார்.; ‘த்ரிஷ்யம்’ பட ரசிகர்கள் குஷி

கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி மீண்டும் வருகிறார்.; ‘த்ரிஷ்யம்’ பட ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள்… அது போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்.

ஆனால் அரிதாக ஒரு சில படங்களுக்கு மட்டுமே ரசிகர் இருப்பார்கள். எனவேதான் அந்தப் படத்தின் தொடர்ச்சி பாகங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கும்.

அந்த வரிசையில் மலையாளத்தில் சிபிஐ டைரி குறிப்பு மற்றும் த்ரிஷ்யம் ஆகிய படங்களை சேர்க்கலாம்.

கடந்த 2015ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இதில் ஜார்ஜ் குட்டி என்ற கேரக்டர் பெயரில் மோகன்லால் நடித்திருந்தார்.

இப்படம் சூப்பர் ஹிட் ஆகவே தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றிகளைப் பெற்றது.

எனவே ‘த்ரிஷ்யம் 2’ உருவாகி கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படமும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து த்ரிஷ்யம் 3 பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ’த்ரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாக அப்பட தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி இஸ் பேக் என இப்பட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

‘கேப்டன்’ விஜயகாந்த் பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த நல்ல விஷயம்

‘கேப்டன்’ விஜயகாந்த் பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த நல்ல விஷயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.

சினிமாவில் பல சாதனைகளை படைத்த இவர் தற்போது அரசியலில் இருக்கிறார்.

ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் முன்பு போல ஆக்டிவாக செயல்பட முடியவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடிகர் விஜயகாந்த் தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பொதுவாக விஷால் தனது நண்பர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த மதிக்கத்தக்க பெரியோர்களின் பிறந்தநாள் என்றால் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்த்து அவர்களின் பெயரில் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்து அவர்களின் வாழ்த்தை நண்பர்களுக்கும் மதிக்கத்தக்க பெரியவர்களுக்கும் பரிசாக வழங்குவது வழக்கம்.

அதேபோன்று விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளிலும் பல ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்தது குறிப்பிடத்தக்கது.

இச்செயல் அனைவரையும் வியப்படைய செய்தது. மேலும் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களும் விஷால் செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த தலைமுறையை காப்போம்.; செல்வராகவனை மானசீக குருவாக ஏற்ற மோகன் ஜீ

அடுத்த தலைமுறையை காப்போம்.; செல்வராகவனை மானசீக குருவாக ஏற்ற மோகன் ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார்.

‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

’பகாசூரன்’ உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் பேசியபோது…

“வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான் இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதை களமும் அப்படிதான் அமைந்துள்ளது.

கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசூரன்’ கதை நகர்கிறது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மகாபாரத கதாபாத்திரங்களுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.

படத்திற்கு ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் என்னுடன் கைக்கோர்க்கும் மூன்றாவது படம் இது. ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ படங்களுக்கு இசையமைத்த சாம் சி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவரது இசையில் பாபநாசம் சிவனின் ஒரு பாடல், படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.”

இயக்குனரான செல்வராகவனை பற்றி…

“செல்வராகவன் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின் தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது..

யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்..

என் முதல் படமான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம்தான்.

பின் ’திரெளபதி’ படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன்.. குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

அவருடன் ‘பகாசூரன்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டும் இருந்தாரே தவிர ஒரு நொடிகூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை..

சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார்.
பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’ படங்களில் கவனம் ஈர்த்த செல்வராகவன் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக வருகிறார்.
அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட டீசர் பார்த்து நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு ‘பகாசூரன்’ கதைக்காக இதில் நடித்த செல்வராகவன்க்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

செல்வராகவன்க்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த ’பகாசூரன்’ திரைப்படம்.”

என நெகிழ்கிறார் மோகன்.ஜி.

Protect our Next Generation ?

Here is the Teaser of #Bakasuran

▶️ https://youtu.be/ClpvXCV2QFo

@selvaraghavan @natty_nataraj @mohandreamer @SamCSmusic @Gmfilmcorporat1 @ProBhuvan @Mrtmusicoff

More Articles
Follows