மாறன் இயக்கத்தில் உதயநிதி-ஆத்மிகா இணையும் ‘கண்ணை நம்பாதே’

மாறன் இயக்கத்தில் உதயநிதி-ஆத்மிகா இணையும் ‘கண்ணை நம்பாதே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi Sathish and Aathmika team up for Kannai Nambatheyபுதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது.

பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான ‘கண்ணை நம்பாதே’ பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியுள்ளது.

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார்.

தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். “என் முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன்.

இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்கள் படத்தை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அது தான் “கண்ணை நம்பாதே” படத்தை எழுத என்னை உந்தியது.

உதயநிதி ஸ்டாலின் சார் ஸ்கிரிப்ட்டை கேட்டு விட்டு உடனடியாக படத்தை ஒப்புக் கொண்டார். நிச்சயமாக, அவர் இப்போது மிகப்பெரிய உயரத்தில் உள்ள ஒரு நடிகர், அவரிடம் தனித்துவமான கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என எனக்கு மிகவும் கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. புது ஐடியாக்களை திறந்த மனதுடன் வரவேற்று என் கதையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

முதல் படத்துக்கும், ‘கண்ணை நம்பாதே’ படத்துக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கூறுகள் என்பது வேண்டுமானால் பொதுவான விஷயமாக இருக்கலாம். ஆனால் கிரைம் விஷயங்கள் கலந்த இந்த களம் புதியது, வித்தியாசமானது.

அவரது படங்களின் தலைப்புகள் (இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே) கண்ணுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறதே என் கேட்டதற்கு, இயக்குனர் மு.மாறன் கூறும்போது…

“தலைப்பை பொறுத்தவரை நாங்கள் நிறைய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, இறுதியாக கண்ணை நம்பாதே முடிவு செய்தோம். நான் தலைப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினால் அது கதையை பற்றியும் சொல்ல வேண்டி வரும்” என்றார்.

தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமார் கூறும்போது, “மு மாறன் ஸ்கிரிப்ட்டை விவரிக்க ஆரம்பித்தபோது, இறுதி அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆர்வமாக இருந்தேன்.

அவரது கதை சொல்லும் திறமை மிகவும் அபாரமாக இருந்தது. இது நிச்சயமாக அனைவருக்கும் சிறந்த ஒரு படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சார் ஒப்புக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

அவரது திரை வாழ்வில் இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக நிற்கும்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதிஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது. சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார்.

Udhayanidhi Sathish and Aathmika team up for Kannai Nambathey

வாசிங்டனில் பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்து மழை

வாசிங்டனில் பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்து மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pariyerum Perumal movie got America Tamil peoples appreciationஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது.

இதன் தொடர்சியாக அமெரிக்க தமிழ்சங்கம் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரிசெல்வராஜ் க்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள்.

வாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜ் க்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.

இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது.

இது போன்ற படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் இனி முன்வருவார்கள் பரியேறும் பெருமாள் குழுவினருக்கு வாசிங்டன் தமிழ்சங்கம் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

Pariyerum Perumal movie got America Tamil peoples appreciation

லாபம் பெற கைகோர்க்கும் விஜய்சேதுபதி & ஸ்ருதிஹாசன்

லாபம் பெற கைகோர்க்கும் விஜய்சேதுபதி & ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and shruti haasanஇயற்கை, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.

இதில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘லாபம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இவையில்லாமல், சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மாமனிதன் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தலைப்பை போலவே லாபம் பெற வாழ்த்துவோம்.. !!

முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினி

முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and ar murugadossசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட வெளியாகி 25 நாட்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினிகாந்த்.

அடுத்த மாதம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இப்படத்திற்காக கிட்டதட்ட 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினிகாந்த்.

சென்னையில் தொடங்கி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் சூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

பேட்ட பாடல்கள் வெற்றியைத்தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.

‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்’.. வைரலாகும் LKG டிரைலர் & சாங்ஸ் !!

‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்’.. வைரலாகும் LKG டிரைலர் & சாங்ஸ் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LKG trailer‘நகைச்சுவை’ யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான “எத்தனை காலம் தான்’ பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.

இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, “ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், டிரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இத்தகைய நையாண்டியான விஷயங்கள் நிறைய உள்ளன. அது வெறுமனே சிரிக்க வைக்காமல், ஆழமாக சிந்திக்கவும் வைக்கும். சிவகுமார் சார் போன்ற ஒரு லெஜண்ட் LKG படத்தின் டிரெய்லரை, அதுவும் இளையராஜா 75 போன்ற ஒரு பெருமைக்குரிய விழாவில் வெளியிட்டது எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் திரைப்படத்தின் டிரெய்லர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் அதை முழுமையாக ரசித்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற ஒரு அனுபவத்தை நல்ல கதையுடன் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராம்குமார், அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

பேட்ட & விஸ்வாசத்தை விட பேரன்பு பெருசா ஓடனும்.. ; மிஷ்கின் ஆசை

பேட்ட & விஸ்வாசத்தை விட பேரன்பு பெருசா ஓடனும்.. ; மிஷ்கின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director mysskinசீயோன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொது நலன் கருதி’.

இதில் கருணாகரன், யோக் ஜபீ, இமான் அண்ணாச்சி, சந்தோஷ் பிரதாப், ஆதித், அனு சித்தரா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சற்றுமுன் சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இவ்விழாவில் மிஷ்கின் பேசியதாவது…

பொது நலன் கருதி படத் தலைப்பிலேயே இயக்குனரின் நல்ல எண்ணம் தெரிகிறது.

பத்திரிகையாளர்கள் நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவார்கள்.

அண்மையில் பேரன்பு படம் பார்த்தேன்.

இதுபோன்ற நல்ல படங்களை பார்த்து விட்டு அது போன்ற வாதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் நம் குழந்தைகளை விளையாட சொல்ல வேண்டும்.

பேட்ட & விஸ்வாசம் படங்கள் ஓடனும். அதே வேளையில் பேரன்பு படம் பெருசா ஓடனும்..” என்று பேசினார் மிஷ்கின்.

More Articles
Follows