தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கியவர் மாறன்.
இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.
இந்த படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் ஸ்ரீகாந்த் பிரசன்னா சென்ட்ராயன் சுபிக்ஷா வசுந்தரா மாரிமுத்து உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.
சித்து என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை மார்ச் 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட உள்ளது.
இந்த நிலையில் இன்று மார்ச் 11ஆம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர்களை பட குழுவினர் சந்தித்தனர்.
அப்போது மேடையில் நடிகர் பிரசன்னா பேசும் போது..
“கொரோனா காலகட்டத்திற்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் உதயநிதி திமுகவின் இளைஞர் அணி தலைவர்.. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தற்போது தமிழக அமைச்சர் என படிப்படியாக உயர்ந்துள்ளார்.
சினிமாவில் ஒரே பாடலில் நாயகன் பெரிய ஆளாகி விடுவார் அதுபோல இந்த படம் முடிவதற்குள் உதயநிதி உயர்ந்து நிற்கிறார்” என பேசினார்.
அதன் பிறகு உதயநிதி பேசும் போது பிரசன்னாவின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார் ய.
“சினிமாவில் காட்டப்படுவது போல் ஒரே பாடலில் நான் உயர்ந்துவிடவில்லை.. அது நான்கு நிமிடத்தில் ஒரு பாடலில் நாயகன் வாழ்வில் உயர்வதாக காட்டப்படும்.
நான் நான்கு ஆண்டுகளில் திமுக பொறுப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் தற்போது அமைச்சர் என உயர்ந்து நிற்கிறேன்” என கலகலப்பாக பேசினார் உதயநிதி.
Udhayanidhi speech at Kannai Nambathe press meet