தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரையுலகிற்குள் நுழைந்து 30 வருடத்தை நிறைவு செய்கிறார் நடிகர் அஜித்.
குக்கிங், பைக் பிரியர், கார் ரேஸ், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராஃபர் துறைகளில் அஜித்திற்கு அதிக ஆர்வம் உண்டு.
இவர் 1990களில் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் ‘அமராவதி’யில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே தெலுங்கில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அஜித்.
இவரது ஆரம்ப கால சினிமா பயணத்தில் ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ ஆகிய படங்கள் முக்கிய திருப்பமாக அமைந்தது.
‘சிட்டிசன், ‘வாலி’ & ‘அமர்க்களம்’ போன்ற படங்கள் ஆக்ஷன் ஹீரோ என்ற புதிய அடையாளத்தை அஜித்துக்கு தந்தன.
அஜித்திற்கு மிகப்பெரும் ரசிகர்கள் உருவாகினர்.
ஆனாலும் கடந்த 2011ல் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார் அஜித்.
அதன்பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் மீடியாக்களுக்கு பேட்டி தருவதையும் தவிர்க்க ஆரம்பித்தார்.
‘ஆரம்பம்’, ‘வீரம்’, வேதாளம்’ ‘விவேகம்’, ‘என்னை அறிந்தால்’ படங்கள் அவரது வெற்றி படங்கள் வரிசையில் இணைந்தது.
பொது நிகழ்ச்சிகளில் எதிலும் அஜித் தலை காட்டாமல் இருப்பதால் திரையில் மட்டுமே அவரை காண கூட்டம் அள்ளும்.
தற்போது அவரது நடிப்பில் ‘வலிமை’ உருவாகி வருகிறது.
இந்த நிலையில் சினிமாவில் 30 வருடத்தை நிறைவு செய்துள்ள அஜித் தன் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் தன்னை வெறுப்பவர்களுக்கும் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரின் நாலு வரி ஆங்கில அறிக்கை இதோ…
Mr Ajith Kumar’s message on his 30th year in the film industry
Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals.
Live & Let live!
Unconditional Love Always!!
Ajith Kumar