தீபாவளி ரிலீஸ்.: மகேஷ்பாபு சந்தானம் சந்தோஷ் படங்கள் கன்பார்ஃம்

தீபாவளி ரிலீஸ்.: மகேஷ்பாபு சந்தானம் சந்தோஷ் படங்கள் கன்பார்ஃம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babu santhanamகொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 8 மாதங்கள் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தன.

இதனையடுத்து நவம்பர் 10ஆம் தேதி இன்று முதல் தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

வி.பி.எஃப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் அறிவித்தனர்.

இதனால் புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் விபிஎஃப் கட்டணத்தை நவம்பர் வரை தள்ளுபடி செய்கிறோம் என டிஜிட்டல் புரொஜக்சன் நிறுவனங்கள் அறிவித்தன.

இதனால் தயாரிப்பாளர்களும் படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.

அதன்படி இதுவரை 3 படங்கள் தங்கள் ரிலீசை உறுதி செய்துள்ளன.

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் – பிஸ்கோத்.

தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா, ஆடுகளம் நரேன், செளகார் ஜானகி போன்றோர் நடித்துள்ளார்கள்.

இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் தற்போது தானே நாயகனாகி இரண்டாம் குத்து என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

மகேஷ் பாபு, ராஷ்மிகா இணைந்துள்ள சரிலேரு நீக்கெவரு என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் டப்பிங் ’இவனுக்கு சரியான ஆள் இல்லை’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இவையில்லாமல் சத்யராஜ் & சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர். மகன், ஜீவா & அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட மற்ற படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Mahesh babu and Santhanam movies confirmed for this diwali

சன் டிவியில் தீபாவளிக்கு ரிலீசாகும் படத்திற்கு தடை கேட்டு வழக்கு

சன் டிவியில் தீபாவளிக்கு ரிலீசாகும் படத்திற்கு தடை கேட்டு வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

naanga romba busy sun tvபிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு குறித்த படம் மாயா பஜார் 2016.

கன்னடத்தில் வெளியான இந்த படத்தில் ராஜ்.பி.ஷெட்டி, வஷிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர்.

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்க அஸ்வினி புனித் ராஜ்குமார் தயாரித்திருந்தார்.

இந்த பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய சுந்தர்.சி ‘நாங்க ரொம்ப பிஸி’ என தலைப்பு வைத்து படத்தை உருவாக்கியுள்ளனர்.

வீராப்பு, தில்லு முல்லு படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஷ்ருதி மராத்தே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார்.

வருகிற நவம்பர் 14ல் காலை 11 மணிக்கு தீபாவளியன்று சன் டிவியில் நேரடியாக ரிலீசாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மீது வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

சினிமா தயாரிப்பாளர் விஜயா பாவண்ணன் இயக்குனர் பாவண்ணன் அவருடைய புதிய படத் தலைப்பு நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என்கிற படத்தின் தலைப்பு 2016 பதிவு செய்திருந்தாராம்.

படம் தயாரான நிலையில் கொரானோ காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.

தற்போது குஷ்பு சுந்தர் சி அவர்கள் எங்கள் படத்தலைப்பை திருடி ‘நாங்க ரொம்ப பிஸி’ என்று மாற்றி படத்தை தயாரித்து வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவுள்ளார்.

அதனை தொடர்ந்து பாவண்ணன் 14வது மாநகர உரிமையாளர் நீதி மன்றத்தில் பட தலைப்பை தடை செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதனையடுத்து தயாரிப்பாளர்கள் குஷ்பு மற்றும் சுந்தர் சி. ஆகியோர் நாளை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Case filed against Naanga Romba Busy team

ரஜினி பற்றி அப்படி பேசியிருக்க கூடாது..; ஆர்ஜே பாலாஜியின் அந்தர் பல்டி

ரஜினி பற்றி அப்படி பேசியிருக்க கூடாது..; ஆர்ஜே பாலாஜியின் அந்தர் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth RJ Balajiஆர்ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி தீபாவளி தினத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்பட புரமோஷன் பணிகளில் ஒரு பகுதியாக ஆர்.ஜே.பாலாஜி ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆர்ஜே பாலாஜி அளித்துள்ள பதிலில்… ‘நான் சூப்பர் ஸ்டாரோட ரொம்ப ரொம்ப பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படிக்கும் போது என் தாத்தா ‘ரஜினி ஒரு நல்ல மனிதர்’ என்று சொன்னார்.

அது அப்படியே என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

ரஜினி ஒரு அற்புதமான மனிதர். ஒரு சூப்பர்மேன். ‘தளபதி’ முதல் ‘தர்பார்’ வரை அவரை பற்றி நிறைய மெமரிஸ் இருக்கு.

சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி கொடுத்திருந்தேன். அந்த பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது.

நான் அப்போது அப்படி பேசியிருக்க கூடாது.

அவர் நன்றாக வாழ வேண்டும். அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என ஆர்ஜே பாலாஜி கேள்விக்கு பதிலளித்து வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

I should not spoken like that about Super Star Rajinikanth

அன்பான ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.: மீண்டும் இணையும் சூர்யா-ஜோதிகா

அன்பான ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.: மீண்டும் இணையும் சூர்யா-ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya jyothikaரீல் லைஃப்பில் இணைந்த சூர்யா ஜோதிகா ரியல் லைஃபிலும் ஜோடியாக இணைந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் கடைசியாக இணைந்து நடித்திருந்தனர்.

அதன்பின்னர் திருமண வாழ்க்கையில் செட்டிலான ஜோதிகா சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

தற்போது தன் கணவர் தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

கணவரின் தம்பி கார்த்தியுடன் ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.

ஆனால் கணவருடன் இணைந்து நடிக்கவில்லை.

எனவே சூர்யா அண்ணாவுடன் அண்ணி இணைவது எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் இவர்கள் இணைவார்கள் என கூறப்படுகிறது.

இந்த படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது தொடர்பான செய்திகளை எதிர்பார்க்கலாம்.

Suriya and Jyothika to romance again

VPF கட்டணம் தள்ளுபடி..; தீபாவளி முதல் நவம்பர் வரை புதுப்படம் ரிலீஸ்.. பாரதிராஜா அறிக்கை

VPF கட்டணம் தள்ளுபடி..; தீபாவளி முதல் நவம்பர் வரை புதுப்படம் ரிலீஸ்.. பாரதிராஜா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathi rajaதயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்!

திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.

VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் “ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை”யாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது!

திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல.

பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதே சமயம் VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!

பாரதிராஜா
தலைவர்
தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

Direcor Bharathi Raja about VPF payment issue

‘கஞ்சா’ கூட நல்லதுதான்…; தீபாவளிக்கு தியேட்டர்ல பாத்து தெரிஞ்சிக்க ஆனந்த் அட்வைஸ்

‘கஞ்சா’ கூட நல்லதுதான்…; தீபாவளிக்கு தியேட்டர்ல பாத்து தெரிஞ்சிக்க ஆனந்த் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marijuanaசுமார் 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளை இன்று நவம்பர் 10ல் மீண்டும் திறக்க அரசு அனுமதித்திருக்கும் நிலையில், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல்களை தீர்க்க திரையுலக சங்கங்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எந்த ஒரு தடையாக இருந்தாலும் சரி, யார் தடுத்தாலும் சரி ‘மரிஜுவானா’ படத்தை தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸ் செய்வோம், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Third Eye Creation சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘அட்டு’ படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் பாராட்டு பெற்ற ரிஷி ரித்விக் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ஆஷா பார்த்தலோம் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘மரிஜுவானா’ என்பது கஞ்சாவின் அறிவியல் பெயர்.

மருத்துவத் துறையில் புற்றுநோய்க்கான மருந்தாக சில நாடுகளில் கஞ்சா அங்கீகரிக்கப்பட்டாலும், போதைக்காக அவற்றில் சேர்க்கப்படும் சில தீங்கான பொருட்களாலும், அதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் பெரும் போதைப்பொருளாக உருவாகியிருக்கிறது.

இப்படி ஒரு கஞ்சா கலாச்சாரத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் குற்றங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் எம்.டி.ஆனந்த்.

படம் குறித்து இயக்குநர் எம்.டி.ஆனந்த் கூறுகையில்… “கஞ்சா என்பது சில நாடுகளில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டால் புற்றுநோயையும் குணப்படுத்தும் சக்தி கஞ்சாவுக்கு உண்டு என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமான போதைக்காக கஞ்சாவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமான போதைக்கு ஆளாகும் மனிதன் தன்னையும் மறப்பதோடு, தனது மனநிலை பாதிக்கப்பட்டு பல குற்ற செயல்களில் ஈடுபடுகிறான். அப்படி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், பெண் குழந்தைகளும் தான்.

இப்படி ஒரு போதை கலாச்சாரம் உருவாக என்ன காரணம் என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருக்கிறோம்.

இளைஞர்களுக்கான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், பெற்றோர்களுக்கான ஒரு பாடமாகவும், சமூகத்திற்கு நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இருக்கும்.

நாட்டில் குற்றம் நடந்தால், அந்த குற்றத்தை செய்பவர்கள் பெரிய ஆட்களாக இருந்தால் அவர்களை சட்டம் எப்படி கையாளும், அதே சமயம் குற்றம் செய்பவர்கள் சாதாரணமானவர்களாக இருந்தால் அவர்களை சட்டம் எப்படி கையாளும், என்பது பற்றியும் படத்தில் பேசியிருக்கிறோம்.

மொத்தத்தில், போதை மூலம் ஏற்படும் விளைவுகள் மற்றும் குற்றவாளிகளில் கூட ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பது, என்ற இரண்டு விஷயத்தையும் சாட்டையடியாக சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தமிழ் தாய் கலைக்கூடம் எஸ்.ராஜலிங்கம் பேசுகையில், “ஒரு நல்ல படத்தை மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலிஸூக்கு தயாரான போது தான் கொரோனா பிரச்சினை வந்தது.

தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுவதால் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சில கட்டுப்பாடுகளை விதிக்க, புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தை மதிக்கிறோம்.

அதே சமயம், மீண்டும் படத்தின் ரிலீஸை தள்ளிப்போடும் சூழலில் நாங்கள் இல்லை. கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து படம் தயாரித்திருப்பதோடு, விளம்பரத்திற்காகவும் பெரும் தொகையை செலவு செய்துவிட்டு படத்தை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டும்.

இனியும் நாங்கள் காத்திருக்க போவதில்லை. அதனால், படத்தை நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.

ஹீரோ ரிஷி ரித்விக் பேசுகையில், “’அட்டு’ படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். அதற்காக எனக்கு ஊடகம் மற்றும் ரசிகர்களிடம் இருந்து தற்போது வரை பாராட்டு கிடைத்து வருகிறது.

மக்கள் மனதில் நிற்கும் அப்படிப்பட்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த போது தான் ‘மரிஜுவானா’ கதை என்னிடம் வந்தது.

கதை மற்றும் கதாப்பாத்திரம் வித்தியாசமாகவும், புதுஷாகவும் இருந்தது. இதில் நான் ஒரு போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கட்டுப்பாடுகளை மதிக்காத ஒரு அதிரடி போலீஸ். சைக்கோ போலீஸ் என்று கூட சொல்லலாம். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் ஒரு சைக்கோ.

ரெகுலரான போலீஸ் வேடம் என்றால் ஒகே. ஆனால், இந்த போலீஸ் வேடம் சற்று வித்தியாசம் என்பதால், இந்த கதாப்பாத்திரத்திற்காக சில மாதங்கள் பயிற்சி எடுத்தேன்.

எனக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் சிலரிடம் பயணித்து, போலீஸ் எப்படி இருப்பார்கள், என்பதை தெரிந்துக் கொண்டதோடு இயக்குநர் ஆனந்தின் போலீஸ் கதாப்பாத்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டு நடித்தேன்.

’அட்டு’ மூலம் எனக்கு எப்படி பாராட்டுகள் கிடைத்ததோடு அதை விட பல மடங்கு அதிகமாக ‘மரிஜூவானா’ போலீஸ் வேடம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

Tamil film Marijuana to release on Diwali

More Articles
Follows