தனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்

தனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹர ஹர மஹாதேவகி பட மூலம் தமிழ் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ்.பி ஜெயக்குமார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி பலான பட இயக்குனர் என பெயர் பெற்றார்.

இந்த படத்தில் ஆபாச காட்சி வசனங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனால் அப படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருந்தார் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார்.

‘இரண்டாம் குத்து’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் வெளியானது.

இந்த படமும் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த பட தலைப்பை அறிவித்துள்ளார்.

Mr VIRGIN என்று பெயரிட்டுள்ளார்.

இதிலும் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்.

அடுத்து என்ன கொடுமையோ..??

Irandam Kuthu director’s next film is titled Mr Virgin

‘பிக்பாஸ்’ பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..; ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

‘பிக்பாஸ்’ பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..; ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss Balajiவிஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4.

இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான நடிகரும் & மாடலுமான பாலாஜி முருகதாஸ் என்பவர் மீது (M/s. Razzmatazz Group & Miss Tamil Nadu and Miss South India) ஜோ மைக்கேல் பிரவின் என்பவர் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் அறிவிப்பு.

பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக புகார்.

பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக அறிவிப்பு.

Bigg Boss fame Balaji Murugadoss in trouble as pageant owner demands apology

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்!

பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Editor Selva marriageதமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா RK.

பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்
பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

சினிமாவில் எதையாவாது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காத்திருந்திருக்கிறார்கள்.

பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக செல்வா ஒரு இடத்தை எட்டிய பிறகு திருமணம் செய்வது குறித்து இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

லட்சியத்திற்காக பத்து வருடங்களுக்கு மேலாக காத்திருந்து கரம்பிடித்துக்கொண்ட தம்பதிகளை வாழ்த்தினார்கள்.

Popular tamil film editor Selva gets married

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் ஆசிஷ் வித்யார்த்தி

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் ஆசிஷ் வித்யார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். ரஜினிகாந்தின் சொந்தப்படமான பாபாவிலேயே வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடிச்சென்றது.

கடந்த 2015ல் தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்த வருடங்களாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். வாய்ப்புகள் தேடிவந்தாலும் கூட, ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்பதால் பல படங்களை தவிர்த்துவிட்டார்.

இந்தநிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த ‘எக்கோ’வில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.

ECHO தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு: கோபிநாத்
இசை: ஜான் பீட்டர்
எடிட்டிங்: சுதர்ஷன்
கலை: மைக்கேல் ராஜ்
நடனம்: ராதிகா
சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி
தயாரிப்பு நிர்வாகம் : BM சுந்தர்
மக்கள் தொடர்பு : KSK செல்வா
ஒப்பனை: ராமச்சந்திரன்
ஆடை வடிவமைப்பு: பாரதி
பாடல்கள் : ஏக்நாத்
மக்கள் தொடர்பு: கே எஸ் கே செல்வா

Veteran actor Ashish Vidyarthi is back with Echo

With Director 01

With Director 02

ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் ஜெய்யின் ‘பிரேக்கிங் நியூஸ்’… விரைவில் திரையில்

ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் ஜெய்யின் ‘பிரேக்கிங் நியூஸ்’… விரைவில் திரையில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai in breaking newsநடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது.

அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது.

விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது…

படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற, தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் மிக அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான அவரது ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது.

இந்த படத்தின் துவக்க நாள் முதலாக, படத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன், மிக கடினமான கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி, தனது மிகச்சிறந்த நடிப்பை முழு மூச்சுடன் வழங்கினார்.

அந்த படத்தின் புட்டேஜ்களை எடிட் செய்தபோது நடிகர் ஜெய்யுடைய நடிப்பை கண்டு பிரமித்து போனேன்.

இப்படம் அவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு அழைத்து செல்லும். என்னை முழுதாக நம்பி இப்படத்திற்கு பெரிய பட்ஜெட்டை தந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இத்திரைப்படம் பெரும் உற்சாகத்தையும் அதே நேரம் படத்தை தரமான படைப்பாக ரசிகர்களுக்கு அளிக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வையும் அளித்துள்ளது. இப்படத்தின் பெரும் பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக உள்ளது. அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் 450 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடிகை பானுஶ்ரீ நாயகியாக நடிக்கிறார். ( மகதீரா, விஜய்யின் சுறா படப்புகழ் ) தேவ் கில், ( வேதாளம் புகழ் ) ராகுல் தேவ் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திருகடல் உதயம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

Jai in Breaking News is ready for release

‘மாநாடு’ பர்ஸ்ட் & செகன்ட் லுக்…. மாஷா அல்லாஹ்… மாஸான லுக்கில் சிம்பு.!

‘மாநாடு’ பர்ஸ்ட் & செகன்ட் லுக்…. மாஷா அல்லாஹ்… மாஸான லுக்கில் சிம்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஈஸ்வரன்’ பட சூட்டிங்கை 40 நாட்களில் நடித்து முடித்து கொடுத்தார் சிம்பு.

இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

புதுச்சேரியில் ‘மாநாடு’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது கிறிஸ்மஸ் வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 21) காலை 10:44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாஆனது.

மாலையில் செகன்ட் லுக் ரிலீசானது.

இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார் சிம்பு.

அரசியல் படமாக உருவாகும் இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

Maanaadu first and second look released

2020-11-21 (1)

2020-11-21

More Articles
Follows