தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 93வது படம்.. தமிழில் விஜய்யுடன் 100வது படம்..; சூப்பர் குட் பிலிம்ஸின் சூப்பர் ப்ளான்

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 93வது படம்.. தமிழில் விஜய்யுடன் 100வது படம்..; சூப்பர் குட் பிலிம்ஸின் சூப்பர் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RB chowdhuryபிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தங்களது 90வது படமாக ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தை தயாரித்துள்ளது.

இதில் படத்தயாரிப்பாளர் ஆர்பி. சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் & மஞ்சிமா மோகன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல ஊடகத்திற்கு ஆர்.பி.சவுத்ரி அளித்த பேட்டியில்…

“இன்றைக்கு டிரண்ட் மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாங்களும் மாறி களத்தில் சந்திப்போம் படத்தை உருவாக்கி உள்ளோம்.

இதுவரை ஆண்டுக்கு 4 படங்கள் தயாரித்தோம். இனி ஆண்டுக்கு 2 படங்கள் தயாரிக்க உள்ளோம்.

மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறோம். இதை மோகன்ராஜா இயக்க சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கின்றனர்.

இது எங்களின் 93வது படமாகும்.

விரைவில் எங்கள் நிறுவனம் 100வது படத்தை எட்டிவிடும். 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிப்போம்.

அதில் விஜய் நடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விஜய் எங்கள் ஹீரோ. அவருக்கு 6 ஹிட் படங்களை கொடுத்துள்ளோம்..” என்றார்.

Super Good Films upcoming films details

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு..: ரஜினி ஆஜராகவில்லை.. வீடியோ கான்பரன்சிங்கு ரெடியாம்!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு..: ரஜினி ஆஜராகவில்லை.. வீடியோ கான்பரன்சிங்கு ரெடியாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth sterlite protestதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை அப்பகுதி் மக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களை கலைக்க துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

அதன்படி 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாம். 580 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டடுள்ளன.

மொத்தம் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டு உள்ளறது.

இதில் நேற்று 11 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இன்று காலையில் ஆணையம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் இளம்பாரதி.

“விசாரணை ஆணையத்திடம் ரஜினிகாந்திடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.

வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடத்த வசதியில்லாததால் சென்னையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று ஆனையம் தெரிவித்துள்ளது.

எனவே 2 மாத கால அவகாசத்திற்க்கு பிறகு விசாரணை நடக்கலாம்” என தெரிவித்தார்.

Super Star seeks video conference facility to take part in Thoothukudi firing inquiry

குளோபல் பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்த ‘மாஸ்டர்’..; இந்திய சினிமாவிற்கு விஜய் தந்த பெருமை.!

குளோபல் பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்த ‘மாஸ்டர்’..; இந்திய சினிமாவிற்கு விஜய் தந்த பெருமை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘மாஸ்டர்’.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் வெளியான ஒரே நாளில் ரூ. 25 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் மாஸ்டர் மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாம்.

சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய படம் குளோபல் பாக்ஸ் ஆபீஸில் ‘மாஸ்டர்’ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay’s Master becomes the number one film at the worldwide box office!

ஷாரூக்கானை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற பாலா..; பினராயி விஜயன் தலைமையில் பாராட்டு் விழா

ஷாரூக்கானை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற பாலா..; பினராயி விஜயன் தலைமையில் பாராட்டு் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bala veeram actor தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வரும் சிவாவின் தம்பி ஆவார் இவர்.

மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். அப்படியே இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்’ நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளையும் சேவைகளையும் மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்..

ஆனால் நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது..

அதிலும் இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கும், தற்போது தென்னிந்தியாவில் நடிகர் பாலாவுக்கும் என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

தென்னிந்தியாவிலேயே மனிதாபிமானத்திற்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரான நடிகர் பாலாவை, வரும் ஜன-24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் மாண்புமிகு. பினராயி விஜயன் கவுரவிக்க இருக்கிறார்.

இந்த கவுரவ டாக்டர் பட்டம் என்னவோ போகிற போக்கில் பாலாவுக்கு கொடுக்கப்பட்டுவிடவில்லை.. அவர் தொடர்ந்து மனிதாபிமானத்துடன் மேற்கொண்டு வரும் சமூக சேவை செயல்பாடுகளை எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாக கவனித்து, அவற்றை கணக்கில் கொண்டே, இந்த டாக்டர் பட்டத்திற்காக அவரைத் தேர்வு செய்துள்ளது ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்.

ஆம்.. பாலாவை பொருத்தவரை பலருக்கும் ஒரு நடிகராகத்தான் தெரியும்.. ஆனால் கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா, தனது ‘நடிகர் பாலா தொண்டு நிறுவனம்’ மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார்..

அதிலும் குறிப்பாக இந்த கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைத் தத்தெடுத்துக்கொண்ட பாலா, அந்த குடும்பங்களின் ஒவ்வொரு தேவையையையும் பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்து வருகிறார்.

அடித்தட்டு மாணவர்களுக்கான கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுதல், வீடு கட்டிக் கொடுத்தல், மருத்துவ உதவிகள் மற்றும் தேவைப்படுவோருக்கு மிக உயர்ந்த கட்டண செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்வது என நடிகர் பாலா செய்துவரும் உதவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது..

இந்த டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி நடிகர் பாலா கூறும்போது, “யாருமே நூறு வயது வரை வாழப்போவது கிடையாது.. இந்த வயதில் நாலு பேருக்கு நம்மால் நல்லது பண்ண முடியும் என்பதற்கு எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.. இப்போது என் பொறுப்பு இன்னும் கூடுதலாகி இருப்பதாக நினைக்கிறேன்..

முன்னைவிட இன்னும் முழு வீச்சில் எனது சமூக சேவைகள் தொடரும்.. மேலும் இதை பார்க்கும்போது இதுபோன்று மனிதாபிமானத்துடன் உதவி செய்ய நினைக்கும் பலருக்கும் இது உத்வேகம் தருவதாக இருக்கும்” என்கிறார் தன்னடக்கத்துடன்.

IMG-20210119-WA0020

Veeram actor Bala gets this prestigious award

தல அஜித்தை அடுத்து தளபதி விஜய்க்கும் வில்லனாகும் பிரபல ஹீரோ.!?

தல அஜித்தை அடுத்து தளபதி விஜய்க்கும் வில்லனாகும் பிரபல ஹீரோ.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay ajithநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தளபதி 65’ (தற்காலிக பெயர்) படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்பட முதற்கட்ட பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் நாயகி யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் தளபதி 65 படத்தில், விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து அருண் விஜய் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Team Thalapathy 65 approached this actor for Villain role

‘நவரசா’ ஆந்தாலஜி மூலம் 10000 திரையுலகத்தினருக்கு உதவும் மணிரத்னம் & ஜெயேந்திர பஞ்சபகேசன்

‘நவரசா’ ஆந்தாலஜி மூலம் 10000 திரையுலகத்தினருக்கு உதவும் மணிரத்னம் & ஜெயேந்திர பஞ்சபகேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Navarasaகொரோனா அச்சுறுத்தலால் தமிழ் திரையுலகானது கடுமையான பாதிப்பினால் திணறி வருகிறது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் இருவரின் முயற்சியால் தமிழ் திரையுலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் ஆதரவையும் மறுவாழ்வையும் பெற்றிருக்கிறார்கள்.

இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, கடந்த 2020 அக்டோபரில் இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் ஆகியோர்கள், தமிழ் சினிமாவின் படைப்பாளர்களை ஒன்றிணைத்து, தனித்துவமான ஒரு திட்டத்தை அறிவித்தனர்.

முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கான ஒன்பது திரைப்படங்கள் கொண்ட ஆந்தாலஜியாக ‘நவரசா’ உருவாகி வருகிறது.

இந்த ஆந்தாலஜி மூலம் திரையுலகை உயிர்ப்பிக்க தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.

அதோடு, தமிழ் திரையுலகில் தேவைப்படுபவர்களுக்கு உதவ பல கோடி நிதி திரட்டப்படுகிறது.

இந்த புதுமுயற்சிக் குறித்து இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் இருவரும் குறிப்பிடும்போது,…

“ எதிர்பாராத இச்சூழலின் போது ஆதரவை வழங்குவதற்காக தொழில்துறையை ஒன்றிணைத்ததால் ‘நவரசா’ ஆந்தாலஜியானது உண்மையிலேயே ஒற்றுமையின் ஒரு பிரதிபலிப்பு என்றே கூறலாம்.

இத்திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் தொகையானது தகுதியுடைய 10,000-க்கும் மேற்பட்ட திரையுலக கலைஞர்களுக்கு ஆதரவாகவும், உதவியாகவும் சென்றடைய இருப்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இப்பணியானது வருகிற 2021 பிப்ரவரி மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் திறம்பட அடையாளம் காணவும், அடையவும், தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் உதவியை நாடினோம்.

இந்த நிவாரணத்தை ஒவ்வொரு தொழிலாளி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் வழங்குவதற்காக உதவித் திட்டத்திற்காக, பேரழிவு நிவாரணத்தில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள பூமிகா டிரஸ்டுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்.

அதோடு, இந்த நிவாரணம் மூலம் தொழில் மீண்டும் வலுவாக வளரும் என நம்புகிறோம். மேலும், எல்லா இடங்களிலும் ரசிகர்கள் விரும்பப்படும் படைப்புகள் தொடர்ச்சியாக உருவாக உதவும் என்றும் நம்புகிறோம் ” என்றனர்.

Over 10000 people from the Tamil film industry will receive support from the initiative helmed by Directors Mani Ratnam and Jayendra Panchapakesan

More Articles
Follows