பஞ்சாங்கப்படி இந்தியாவின் விண்கல சாதனை.; சர்ச்சையில் சிக்கிய மாதவன் மீண்டு(ம்) விளக்கம்

பஞ்சாங்கப்படி இந்தியாவின் விண்கல சாதனை.; சர்ச்சையில் சிக்கிய மாதவன் மீண்டு(ம்) விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மாதவன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ராக்கெட்ரி’.

இந்த ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது

அப்போது மாதவன் பேசியதாவது..

”அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30-வது தடவை, 32-வது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றனர்.

ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.

இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்த பஞ்சாங்கம் மூலம் கணித்து மற்ற கிரகங்களை எல்லாம் தட்டி நேரடியாக அனுப்பினர்.

நம்பி நாராயணின் மருமகன் அருணண் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநராக இருந்தவர்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி கதை : ‘ராக்கெட்ரி’ படமெடுக்க மாதவன் பட்ட ரணங்கள்

அவர், பஞ்சாங்க முறை வானியல் வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பினார்.

அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது. சின்ன பட்ஜெட்டில் செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் இந்த பஞ்சாங்கம் தான்” என பேசினார் மாதவன்.

மாதவனின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பொருளானது.

ஒரு சிலர் மாதவனுக்கு ஆதரவாக பேசினாலும் பலர் மாதவனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். பஞ்சாங்கம் வேறு விஞ்ஞானம் வேறு என ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிலையில் நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில்… “அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இதற்கெல்லாம் (விமர்சனங்களுக்கு) தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன்.

அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது.

அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்.” என பதிவிட்டுள்ளார்.

Madhavan controversy speech at Rocketry press meet

சிவாஜிராவ் வாழ்க்கையை திருப்பி போட்டு ரஜினியை நடிகனாக மாற்றிய முதல் தருணம்

சிவாஜிராவ் வாழ்க்கையை திருப்பி போட்டு ரஜினியை நடிகனாக மாற்றிய முதல் தருணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூன் 26-ஆம் தேதியை நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடக குழுவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக பேசிய ஒய் ஜி மகேந்திரா கூறியது பின்வருமாறு:

“உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன்.

அதை தொடர்ந்து திடீர் என்று ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நாரதகான சபாவில் நடைபெறும் சாருகேசி நாடகத்தில் ரஜினிகாந்த் பார்வையாளராக கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

சொன்னதைப் போலவே அவர், அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.

என்னை கட்டிப்பிடித்த அவர், இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை.

மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினிகாந்த் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார்.

அன்று இரவு நாடகத்தின் கதாசிரியர் வெங்கட் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெகு நேரம் பேசியுள்ளார். அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஜூன் 25-ஆம் தேதி ரஜினிகாந்த் வீட்டில் இருந்த்து ஒரு அழைப்பு வந்தது. சாருகேசி குழுவினரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறினார்கள்.

ஜூன் 26 அன்று ஒட்டுமொத்த குழுவும் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அப்பொழுது ஒவ்வொருவராக ரஜினிகாந்த் பாராட்டினார். மேலும் அவரது நாடக அனுபவங்களை பற்றி கூறினார்.

“ஒரு நாடக ஒத்திகைக்கு எனது நண்பர் ராஜ் பகதூர் அழைத்து சென்றிருந்தார். அன்று துரியோதனனாக நடிக்க வேண்டியவர் வராததால் அவருக்கு பதிலாக என்னை நடிக்கும்படி அந்த குழுவினர் கேட்டுக்கொண்டனர்,” என்று ரஜினி தெரிவித்தார்.

ஒத்திகையில் அவரது நடிப்பை கண்டு வியந்த குழுவினர் அவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவரது நண்பரின் ஊக்கத்தில் அந்த நடத்தில் துரியதோணனாக நடித்தார். அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

பாராட்டு பெற்ற அந்த ஒரு தருணம் தான் எனது வாழக்கையியை திசை திருப்பியது என்று அவர் கூறினார். அது தான் தனது நடிப்பு வாழ்க்கைக்கு ஆரம்பமாக இருந்தது என்றும் அவர் பெருமையாக கூறினார்.

(ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் என்பது குறிப்பிடத்தக்கது.)

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு ரசிகராக எங்களிடம் பழகியது எங்கள் வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்.”

இவ்வாறு ஒய் ஜி மகேந்திரா கூறினார்.

That moment Sivaji Rao’s transformation to Rajinikanth

இளையராஜாவின் A Beautiful Breakup படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக தேர்வானது

இளையராஜாவின் A Beautiful Breakup படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக தேர்வானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் பல முக்கியமான திரைக் கலைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான இசைஞானி இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது.

உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு இசைமேதை இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும்.

இசைஞானி வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ளும் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் கூட இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில் கூட, “எ பியூட்டிஃபுல் பிரேக் அப் திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார்.

“இசைஞானியின் இசை தொடரியல், முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால், மேற்கத்திய பார்வையாளர்கள் அதனை மொத்தமாக கொண்டாடுகிறார்கள்.

எனவே, இசைஞானியின் PR டீம், இந்தப் படத்தின் இசையை சாதாரணமாக விளம்பரப்படுத்தாமல், ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் போன்ற பிற பொருத்தமான, தகுதியான மன்றங்களில் போட்டிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்மூலம், 12வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசையை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் A Beautiful Breakup பெற்றது.

மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

A Beautiful Breakup is to screen on film festival

BREAKING விஜய் – சூர்யா உடன் நடித்த ‘பூ’ ராமு திடீர் மரணம்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

BREAKING விஜய் – சூர்யா உடன் நடித்த ‘பூ’ ராமு திடீர் மரணம்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு அடித்தளமான நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ராம்.
இவரின் நாடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தன.
இவரின் நாடகங்களை அறிந்து கொண்ட நடிகர் கமலஹாசன் ‘அன்பே சிவம்’ படத்தில் நாசருக்கு எதிராக வீதி நாடகங்களை போடுபவராக நடித்திருந்தார்.
அந்த காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்தவர் ராமு தான்.
இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘பூ’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ராம். அதன் பின்னர் இவரின் பெயருக்கு முன்னே பூ என்ற எழுத்தை சேர்த்து பூ ராம் என அழைக்கப்பட்டார்.
இந்தப் படத்தில் அப்பாவாக நடித்து இருந்த ராமு அவர்கள் “பூ ராமு” என்கிற அடையாளத்தை பெற்றார். “பூ” படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகர் (தமிழ் ஊடகங்கள் விருது) என்கிற விருதும் ராமு அவர்களுக்கு கிடைத்தது.
தங்க மீன்கள் படத்தில் கல்யாணி என்கிற மகனுக்கு ராமு அப்பாவாக நடித்து இருந்தார். “பூ” படத்தில் பேனா காரராக தொழிலாளியாக நடித்திருந்த “ராமு” இந்தப்படத்தில் நல்லாசிரியர் விருது வென்ற ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார்.
சீனு ராமசாமி இயக்கிய “நீர்ப் பறவை” படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் வசந்த் என்கிற பொறியியல் கல்லூரி மாணவனுக்கு, கிராமப்புறத்தில் வாழும் ஒரு அப்பாவாக நடித்து இருப்பார் ராமு.
இதில் கல்லூரி முதல்வர் சத்யராஜ் உங்கள் மகன் “கோழி மேய்ப்பதற்கு தான் லாய்க்கு..” என்று சொல்லிவிட  ராமு உடைந்து அழும் இடம் அவ்வளவு வலிகள் நிறைந்ததாக இருக்கும்.
இயக்குனர் ராமின் பேரன்பு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்வார். மனநல வளர்ச்சி இல்லாத மகனுக்கு அப்பாவாக நடித்திருப்பார்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து இருப்பார். “தான் வளர்ந்த விதத்தை சொல்லும் இடம் நிறைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய காட்சியில் நடித்து இருப்பார்.
இதைத்தொடர்ந்து “நெடுநல்வாடை” என்கிற சின்ன படத்தில் தாத்தாவாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் உயிரே நடிகர் ராமு தான் .
இந்த நெடுநல்வாடை” படத்தின் போஸ்டர்களில் கூட ஹீரோ ஹீரோயின்களின் படங்களை விட ராமு  படத்தை தான் முதன்மையாகவும், பெரிதாகவும் போட்டு விளம்பரப்படுத்தினர்.
சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார்.
இவர் நடித்த பூ, தங்கமீன்கள், நீர்ப்பறவை, பேரன்பு, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை , சூரரைப்போற்று போன்ற படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட படங்களாகும்.
தமிழின் ஆகச் சிறந்த திரைப்படங்களில்  நடித்து இருந்தாலும் மீண்டும் பழையபடி தன்னுடைய பயணத்தை வீதி நாடகங்கள் மூலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எளிய மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இன்றும் கூட தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார் பூ ராமு.
இந்த நிலையில் இன்று ஜூன் 27 காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
ரஜினி இளையராஜா முருகதாஸ் அகியோரும் உருவ கேலிக்கு ஆளானவர்களே.. – மந்த்ரா வீரபாண்டியன்

ரஜினி இளையராஜா முருகதாஸ் அகியோரும் உருவ கேலிக்கு ஆளானவர்களே.. – மந்த்ரா வீரபாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் படம் காம்ப்ளக்ஸ்.
படத்தின் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் படத்தை பற்றி கூறியதாவது :

என் பெயர் மந்த்ரா வீரபாண்டியன். நான் பொறியியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமா மீதான ஆர்வத்தில் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.

நிறைய குறும்படங்கள் இயக்கி இருக்கிறேன். இயக்குனர் பாலா சாரிடம்உதவி இயக்குனராக நாச்சியார் மற்றும் வர்மா ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.
அதன் பிறகு பெரிய தயாரிப்பு நிறுவனம் மற்றும் பெரிய நடிகருக்கு தான் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால், அதற்கிடையில் காம்ப்ளெக்ஸ் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஆகையால், இதை முதலில் இயக்கி விடலாம் என்று இயக்கி முடித்து விட்டேன்.

இப்படத்தின் மையக்கரு உருவ கேலி செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் கதை. அதாவது ஒருவரின் உருவத்தை வைத்து எடை போடுவது மிகவும் தவறு. எல்லா காலகட்டத்திலும்  உருவ கேலி என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது.

இதை வைத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் கூட வருகிறது. மேலும், இதை வைத்து நிறைய நகைச்சுவை காட்சிகளே எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளும் அதே தவறை செய்கின்றனர். கேலி பேசுபவர்கள் பேசி விட்டு சந்தோஷமா சிரிப்பார்கள். ஆனால், பாதிக்கப்படும் குழந்தைகள் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும், உன்னை யாராவது உருவ கேலி செய்தால் அதை பொருட்படுத்தாமல் நீ வெற்றி பெற்று விட்டால் பிறகு உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள் என்று தவறான அறிவுரையும் வழங்கப்படுகிறது. இது மிகவும் பரிதாபத்திற்குரியது.

ஆகையால், உருவ கேலி செய்வது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படத்தை எடுத்திருக்கிறேன். கேலி பேசுபவர்களுக்கு அறிவுரை கூறும் படமாக இருக்காது. மாறாக கேலிக்கு ஆளாகுபவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

இப்படம் இயக்கும்போது சமுதாயம் எனக்கு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் கொடுத்தது. அது என்னவென்றால், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பது தான். முதலில் இப்படத்தை பெரிய நடிகரை வைத்து எடுத்தால் எல்லோரிடமும் சென்று சேரும் என்பதற்காக, பெரிய நடிகரை வைத்து இயக்க தான் திட்டமிட்டிருந்தேன். அதற்கு காலதாமதம் ஆகும் என்பதற்காக அந்த திட்டத்தை கைவிட்டேன்.

என் கதையில் உள்ள கேரக்டருக்கு பொருந்தக் கூடியவரை நடிக்க வைத்தால் யதார்த்தமாக இருக்கும் என்பதற்காக, உருவம் குறைவுள்ள மனிதரை வைத்து இயக்கி இருக்கிறேன்.

இந்த யோசனை கூட இயக்குனர் பாலா சாரிடம் நான் கற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில்தான் இப்படம் உருவாகியுள்ளது. மேலும், பாலா சாரிடம் முக்கியமாக நான் கற்றுக் கொண்டது மேக்கிங் டிஸிப்பிலின் தான். சில விஷயங்களை இப்படி தான் எடுக்க வேண்டும் என்றால் அப்படி தான் எடுப்பார். நானும் அதைப் பின்பற்றி தான் இயக்கியுள்ளேன்.

விருதுக்கான கலை படமாக இல்லாமல், மக்களுக்கான கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறேன்.

மேலும், உருவ கேலி என்பது நம் நாட்டில் மட்டுமல்லாது, உலகளாவிய அனைத்து இடங்களிலுமே உள்ளது. மற்ற சமுதாய பிரச்சனைகளை விட முக்கியமாக முதலில் பேச வேண்டிய பிரச்சனை இது தான். உருவ கேலி மட்டுமல்ல, அவர்கள் அணியும் உடைகளில் இருந்து அனைத்து விஷயங்களிலுமே இந்த கேலி இருக்கிறது.

உருவ கேலிக்கு ஆளானவர்கள் பலரை நேரடியாக நான் சந்தித்துப் பேசினேன். அந்நேரத்தில் அவர்களுக்கு ஏற்படும் மனவலி, வேதனை, அழுகை னு அவர்களோடு பேசியதில் தெரிந்து கொண்டேன். பிறகு இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பல புத்தகங்கள் படித்திருக்கிறேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதுபோன்ற விஷயங்களை தானே ஊக்குவிக்கிறார்கள் என்பதை ஆழமாக யோசிக்கும்போது, ஒருவர் குண்டாக இருக்கிறார் அல்லது ஒல்லியாக இருக்கிறார் என்றால் அவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தன்னுடைய உடலை குறைத்துக் கொள்ளலாம் அல்லது எடையை கூட்டிக் கொள்ளலாம்.

மற்றும் கருமை நிறத்தில் இருப்பவர்கள் தங்களை சிகப்பாக்கி கொள்ள சிகப்பழகு கிரீம் பூசிக் கொள்ளலாம். அந்த நிகழ்ச்சியின் இடையில் வரும் விளம்பரங்கள் தான் இதனை ஊக்குவிக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.

மக்களை உளவியல் ரீதியாக பயன்படுத்தி இதற்குப் பின் ஒரு பெரிய வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.

திருநெல்வேலியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தேன். பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முதல் மதிப்பெண் வாங்கும் வரை நானும் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்.

இங்கு வெற்றி பெற்ற அனைவருமே ஒரு காலத்தில் உருவ கேலி செய்யப்பட்டவர்கள் தான். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, ஏ ஆர் ரகுமான், இயக்குனர் முருகதாஸ் ஆகிய வெற்றியாளர்கள் அவர்களின் சாதனைக்கும் உருவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கதையின் நாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடிக்கிறார். நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர் நாச்சியார் படத்தில் ஜீவி பிரகாஷ் ஜோடியாக நடித்தவர்.

இவானாவிடம் கதையை கூறும்போது இரண்டு கதாபாத்திரங்கள் இருக்கின்றது. இதில் நீங்கள் விருப்பப்பட்டதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவர் அக்கா பாத்திரத்தை தேர்வு செய்தார்.
அவர் வாழ்க்கையில் ஒன்றிய பாத்திரமது என்று கூறினார். ஆரத்யா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். எம்எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் வேறு ஒரு அரசியல் பேசும்.
இப்படத்தில் அவர் ஞான தகப்பன் என்றே கூறலாம். இப்படம் மூலம் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும், பாவா செல்லதுரை நடித்திருக்கிறார். பாவா செல்லதுரை சாரை வாசகர் வட்டத்தில் தெரியாத ஆளே கிடையாது. இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால், மிக முக்கிய கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டபோது, ஆர்வத்துடன் நடித்து கொடுத்தார்.

குக்கு வித் கோமாளி சுதர்சன் நடித்திருக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தவர் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 80களில் இருந்த இளையராஜா ட்ரெண்டியாக இசையமைத்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. 4 பாடல்களுக்கும் நன்றாக வந்துருக்கிறது.

முழு படத்தையும் முடித்துவிட்டு தான் அவரிடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு என்னுடைய இசைப்பயணத்தில் மிகச்சிறந்த படம் என்றால் அது இந்த படம்தான் என்றார். இந்த மாதிரி படங்களுக்கு இசையமைக்க தான் நான் சில காலம் ஒதுங்கி இருந்தேன் என்றும் கூறினார். பாடல்களும் பின்னணி இசையும் உணர்வுபூர்வமாக இருக்கும்.

பாடல்களை ஞானகரவேல், பாலா சீத்தாராமன் எழுதியுள்ளார்கள்,
படத்தொகுப்பை சதீஷ் சூர்யா செய்கிறார். மாய பாண்டியன் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவு பர்வேஷ் செய்கிறார்.
இப்படத்திற்கென சில லென்ஸ்களை மும்பையில் இருந்து வர வைத்து உபயோகப் படுத்தியிருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் ஒளிப்பதிவு பெரிய அளவில் பேசப்படும்.

திருநெல்வேலி மற்றும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு முழுவதும் முடித்துவிட்டோம்.. மற்ற பணிகளை இன்னும் 50 நாட்களில் முடித்து விடுவோம். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும்.

இவ்வாறு படத்தைப் பற்றி இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் கூறினார்.

மல டா.. மாஸ் காட்டும் ரஜினி.; 30 வருட ‘அண்ணாமலை’-யை கொண்டாடும் ரசிகர்கள்.; நடிகர்கள் அதிர்ச்சி

மல டா.. மாஸ் காட்டும் ரஜினி.; 30 வருட ‘அண்ணாமலை’-யை கொண்டாடும் ரசிகர்கள்.; நடிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீட்டின்போது அந்த படங்களின் டைட்டில் கார்டில் அவர்கள் பெயர் திரையில் வரும்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அளவில்லாமல் இருக்கும்.
இந்தக் கொண்டாட்டங்களுக்கு முதன்முதலாக தமிழ் சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டது ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை திரைப்படம் தான்.
சரியாக முப்பது வருடங்களுக்கு முன்பு இதே ஜூன் 27 -1992 வெளியான அண்ணாமலை திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க கவிதாலயா சார்பாக கே பாலச்சந்தர் தயாரித்திருந்தார்.
தேவா இசையில் உருவான இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு சரத்பாபு ரேகா ஜனகராஜ் மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் முதல் பாதியில் ரஜினி  ஏழையாகவும் பின்னர் நண்பனின் துரோகத்தால் ஏழையாகி பின்னர் உழைப்பால் முன்னேறி பெரும் பணக்காரரான மாறுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும்.
இந்த படத்தில் சென்டிமென்ட் காமெடி ஆக்ஷன் பஞ்ச் வசனங்கள் என அனைத்தும் பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில் இன்று 30 வருட அண்ணாமலை கொண்டாடும் வகையில் நடிகர் ரஜினிகாந்தை இப்படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா சந்தித்து ஆசி பெற்றார்.
மேலும் இந்த முப்பது வருட விழாவை சிறப்பிக்கும் வகையில் ரஜினி ரசிகர்கள் சுரேஷ் கிருஷ்ணா சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இதே மாதத்தில் ஜூன் 15ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் 15 வருட நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
அப்போது அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உள்ளிட்டோர் ரஜினிகாந்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகி பல வருடங்களை கடந்தும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இது மற்ற நடிகர்களுக்கும் பல்வேறு அதிர்ச்சிகளைஏற்படுத்தி உள்ளது எனலாம்.
More Articles
Follows