கண்டிப்பா பாருங்க.; மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திற்கு ரஜினி பாராட்டு

கண்டிப்பா பாருங்க.; மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திற்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படம் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’.

இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் என்பவர் இயக்கினார்.

அவர் விலகவே இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்தார்.

இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நாடே போற்றும் விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.

சில மாதங்களுக்கு பிறகு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் நம்பி.

குற்றம் சுமத்தப்பட்ட காலத்தில் சிறையில் இருந்தார்.

அப்போது பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன்.

அவரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம்.

ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படம் கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் தமிழில் நடிகர் சூர்யாவும், இந்தியில் நடிகர் ஷாரூக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர்.

நம் FILMISTREET தளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல மதிப்பெண் கொடுத்திருந்தோம்.

இந்த நிலையில் ராக்கெட்டு திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்.

பத்மபூஷன் திரு நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மிக தத்ரூபமாக இயக்கி தானும் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இணைய தன்னை நிரூபித்திருக்கிறார் மாதவன்.

இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் முக்கியமாக இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth praises ‘Rocketry’ directed by Madhavan

Rajinikanth

‘மெய்ப்பட செய்’ படம் ரிலீசானால் குற்றங்கள் குறையும்.; தமிழ் செல்வம் நம்பிக்கை

‘மெய்ப்பட செய்’ படம் ரிலீசானால் குற்றங்கள் குறையும்.; தமிழ் செல்வம் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார்.

இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சட்டம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கான நியாயம் உடனடியாக கிடைக்கிறதா? என்ற பல கேள்விகளோடு உருவாகியிருக்கும் இப்படம் பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வழியையும் சொல்லியிருக்கிறது.

தற்போது சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான மெசஜை கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இப்படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி யு/ஆ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து படத்தை வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக ‘மெய்ப்பட செய்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம், “’மெய்ப்பட செய்’ உண்மையை செய் என்று அர்த்தம். சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகத்தான் இந்த படம் இருக்கும்.

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் பல இடங்களில் பல வகையில் பெண்கள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இது ஏன்? என்ற கேள்வியை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்கும்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட ரீதியாக சரியான நியாயம் கிடைக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் சரியான தண்டனை கிடைப்பதில்லை. அதனால் தான் இதுபோன்ற குற்றங்கள் தொடர் கதையாகி வருகிறது.

‘மெய்ப்பட செய்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் சொல்லப்படவில்லை. இந்த படம் வெளியானால் நிச்சயம் பாலியல் குற்றங்கள் குறையும்.

பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு அந்த தண்டனை எப்படி இருக்க வேண்டும், என்பதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

இது நான் தயாரித்த முதல் படம், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என அனைவருக்கும் முதல் படம். இருந்தாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்துள்ளோம்.

அதே சமயம், பாடல்கள், நகைச்சுவை, காதல் காட்சிகள் என கமர்ஷியலாகவும் படம் இருக்கும். பாலியல் குற்றங்களை மையப்படுத்திய கதை என்பதால் முகம் சுழிக்கும்படியான எந்தவித காட்சிகளும் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்க கூடிய நல்ல மெசஜ் சொல்லும் படமாக இருக்கும்.

இந்த படத்தை தயாரித்து முடித்து வெளியீட்டு பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால், புதுமுகங்கள் என்று பல இடங்களில் புறக்கணிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இப்போது பெரிய நடிகர்களாக இருப்பவர்களும் ஒரு காலத்தில் ஒரு படத்தில் புதுமுகங்களாக நடித்தவர்கள் தானே.

எனவே, படத்தின் கதை மற்றும் மேக்கிங்கை பாருங்கள், நடிகர்களை பார்க்காதீர்கள் என்று நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். இன்று ஒடிடி-க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூட இப்போது பெரிய நடிகர்கள் உள்ள படங்களை மட்டும் தான் வாங்குகிறார்கள். இதனால் சினிமாவுக்கு புதிய தயாரிப்பாளர்கள் வருவது பாதிக்கப்படும். எங்கள் படத்தை என் நண்பர்கள் அபிலாஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும். படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும்.” என்றார்.

இசையமைப்பாளர் பரணி பேசுகையில்…

“’மெய்ப்பட செய்’ நல்ல கருத்து சொல்லும் கமர்ஷியல் படம். மக்களை ரசிக்க வைப்பதோடு அவர்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லும் படங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படமும் அந்த வகையில் வெற்றி பெறும். படத்தின் பாடல்களோடு பின்னணி இசைக்காகவும் நிறைய நாட்கள் பணியாற்றியிருக்கிறேன்.

காரணம், படத்தின் காட்சிகள் அந்த அளவுக்கு மிக அழுத்தமாக இருந்தது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் வேலன் பேசுகையில்,…

“தயாரிப்பாளர் தமிழ் செல்வம் சார் அனைத்தையும் சொல்லிவிட்டார். அவர் சொன்னது போல் தைரியமாக மனதில் பட்டதை செய்வதுதான் மெய்ப்பட செய். இந்த படத்தில் மிக முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறோம்.

அந்த விஷயம் நடந்தால் நாட்டில் நிச்சயம் தவறு நடக்காது. படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.

கதாநாயகன் ஆதவ் பாலாஜி பேசுகையில்…

“இந்த படம் எனக்கு முதல் படம். படத்தை பற்றி இயக்குநரும் தயாரிப்பாளரும் சொல்லிவிட்டார். நான் சொல்லப் போவது, அறிமுக நடிகர்களின் படம் என்று புறக்கணிக்கிறார்கள். அது ரொம்பவே வருத்தம் அளிக்கிறது.

இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அந்த உழைப்பை பார்க்காமல், நடிகர்களை வைத்து புறக்கணிப்பது சரியில்லை. படத்தை பாருங்கள் பிறகு சொல்லுங்கள்.” என்றார்.

கதாநாயகி மதுனிகா பேசுகையில்…

“இந்த கதை ரொம்பவே இண்டன்ஷாக இருந்தது. இதை இயக்குநர் என்னிடம் சொன்ன போது நான் பயந்துவிட்டேன். இந்த கதையில் என்னால் நடிக்க முடியுமா? என்று தோன்றியது. ஆனால், இயக்குநர் தான் எனக்கு தைரியம் கொடுத்து உங்களால் நடிக்க முடியும், நடியுங்கள் என்றார்.

இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அனைத்து பெண்களுக்கும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. பலர் பாலியல் தொடர்பான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். நானும் கூட பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். அதனால், இந்த படம் அனைவரையும் கனெக்ட் செய்யும்.” என்றார்.

இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவில் இருந்த பெண்கள் படம் எங்களை கனெக்ட் செய்கிறது, என்று கூறி பாராட்டியதோடு படத்தில் சொல்லப்பட்ட விஷயம் தற்போதைய காலக்கட்டத்திற்கு மிக முக்கியமானது என்று தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘மெய்ப்பட செய்’ படத்தை இவானியா பிக்சர்ஸ் மற்றும் ஃபிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அபிலாஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

The release of the film ‘Meipada Se’ will reduce crimes

கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை ஆபீசுக்கு ஆபத்து.; மெட்ரோ நிர்வாகம் நோட்டீஸ்

கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை ஆபீசுக்கு ஆபத்து.; மெட்ரோ நிர்வாகம் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் மக்கள் தொகை எட்டு கோடியாக இருந்தால் அதில் ஒரு கோடி மக்கள் மட்டும் சென்னையில் வாழ்கின்றனர்.

எனவே சென்னை நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். 10 நிமிடத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகும். இந்த பிரச்சினையை சென்னை வாசிகள் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநில அரசு பல்வேறு மேம்பாலங்களையும் மெட்ரோ ரயில் திட்டங்களையும் கொண்டு வருகின்றது.

தற்போது சென்னையில் இரண்டாம் கட்டமாக சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆழ்வார்பேட்டை வழியாக மெட்ரோ ரயில் பாலம் செல்கிறது.

எனவே மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருக்கும் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆழ்வார்பேட்டை பகுதியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது.

இங்கு மக்கள் நீதி மைய்யம் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அலுவலகம் போல செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில் சுமார் 170 சதுர அடி மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே மெட்ரோ ரயில் பணிக்கு இந்த இடத்திலிருந்து 10 அடி வரையிலான நிலத்தை தங்களுக்கு வழங்கும் படி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடிகர் கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த சமயத்தில் கோயம்பேட்டில் மேம்பால பணிகளுக்காக அவரது திருமண மண்டபத்தில் சில பகுதிகள் இடிக்கப்பட்டது.

அங்கு தற்போது தேமுதிக அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Metro Administration Notice to Kamal Haasan’s Alwarpet office

விஜய் பட பெயரில் ‘கோமாளி’ இயக்குனர் ஹீரோவானார்.; 2 ஹீரோயின்ஸ் ஜோடி.!

விஜய் பட பெயரில் ‘கோமாளி’ இயக்குனர் ஹீரோவானார்.; 2 ஹீரோயின்ஸ் ஜோடி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15-ல் வெளியான படம் ‘கோமாளி’.

ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகி பாபு கேஎஸ் ரவிக்குமார் சம்யூக்தா உள்ளிட்டோர் பலர் நடித்த இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தின் பாடல்களும் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

எனவே இயக்குனர் பிரதிப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு எந்த பட அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால் எவரும் எதிர்பாராத வகையில் அடுத்த படத்தில் பிரதீப் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் 2002 ஜூலை 4ம் தேதி நள்ளிரவு பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு குறித்து போஸ்டர் வெளியாகியது.

இந்த படத்திற்கு ‘லவ் டுடே’ என்று டைட்டில் வைத்துள்ளனர். யுவன் இசையமைக்கிறார்.

ரவீனா இவனா யோகி பாபு சத்யராஜ் ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ராகவ் என்பவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு மெசேஜ் செய்து கொண்டு கையில் தம் வைத்துக் கொண்டு பிரதிப் தன் கேர்ள் பிரண்டுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்புவதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை முன்னாள் காதலி (காதல் தோல்வி) க்கு அர்ப்பணிப்பதாக பிரதீப் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பாலசேகரன் என்பவர் இயக்கிய ‘லவ் டுடே’ படம் வெளியானது.

இதில் விஜய்யுடன் சுவலட்சுமி ரகுவரன் கரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது.

முதலில் காதலை ஏற்க மறுத்து பின்னர் காதலிக்க தொடங்கும் காதலிக்கு காதலன் கொடுக்கும் சரியான பாடமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் அமைந்து இருந்தது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தற்போது இந்த லவ் டுடே என்ற தலைப்பை கோமாளி இயக்குனர் தான் நாயகனாக நடிக்கும் படத்திற்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Comali’ director turns hero.; Yuvan composes music!

நிர்வாண கதாநாயகன்கள்.: அன்று அமீர்கான்..; இன்று விஜய் தேவரகொண்டா

நிர்வாண கதாநாயகன்கள்.: அன்று அமீர்கான்..; இன்று விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் மிகவும் பிரபலமான விஜய் தேவரகொண்டா நடித்து வரும் திரைப்படம் ‘லைகர்’.

குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இவருடன் இந்த படத்தில் உலக குத்துச்சண்டை நிஜ வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகியாக அனன்யா பாண்டே நடிக்கிறார்.

இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு மணி சர்மா இசையமைக்கிறார்.

கரண் ஜோகர், பூரி ஜெகந்நாத் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

ஆகஸ்ட் 25ல் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த இடத்தில் பூங்கொத்தை வைத்து மறைத்து நிர்வாணமாக நிற்கிறார் விஜய்.

அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு, ”என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டது இந்தப் படம்.

நடிப்பிலும், மனதளவிலும், உடல் அளவிலும் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம். நான் எல்லாவற்றையும் உங்களிடம் தருகிறேன்! விரைவில் வருகிறது ‘லைகர்” என குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு பிகே என்ற ஹிந்தி படத்தில் நடிகர் அமீர்கான் நிர்வாணமாக நடித்து அந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Liger Vijay Devarakonda poster creates controversy

கணவர் மரணத்திற்கு பின் நடிகை மீனா பதிவிட்ட அறிக்கை

கணவர் மரணத்திற்கு பின் நடிகை மீனா பதிவிட்ட அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி கமல்.. மலையாள சினிமாவில் மோகன்லால் மம்மூட்டி.. தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி வெங்கடேஷ்.. உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா.

மேலும் அஜித் விஜய் பிரசாந்த் ஆகியோருடனும் நடித்துள்ளார் மீனா.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்தவர் மீனா.

பின்னர் எஜமான் முத்து வீரா படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். அண்மையில் வெளியான அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார் மீனா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் நைனிகா.

மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்தசாமியின் மகளாகவும் நடித்தார் நைனிகா.

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.

கணவர் மறைவுக்கு பின்னர் பல தவறான தகவல்கள் கிளம்பியது.

இந்த நிலையில் கணவர் இறப்புக்குப்பின் நடிகை மீனா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்….

“என் காதல் கணவர் வித்யாசாகர் இறப்பினால் நான் மிகவும் கவலையாக உள்ளேன்.

இந்த கடினமான சூழ்நிலையில் அனைத்து ஊடகங்களும் எண்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். தயவு செய்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும்.

மேலும் இந்த கடினமான சூழ்நிலையில் எங்கள் குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் IAS ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Actress Meenas first statement after her husband death

More Articles
Follows