ஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

ஜூன்-25ல் மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்றெல்லாம் சில செய்திகளை பரப்பி வந்தனர் ஆனால் படப்பிடிப்பை துவங்குவதற்கான பக்காவான முன்கட்ட தயாரிப்பு பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவந்ததை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

அவர்களின் நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக, வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கே படமாக்கப்பட உள்ளன.

ரெஜினா கசான்றா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “ எவரு “ !

ரெஜினா கசான்றா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “ எவரு “ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி , பரம் வி பொட்லூரி , கவின்அன்னே தயாரிக்கும் திரைப்படம் “ எவரு “. சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா கசான்ரா , “ சனம் “ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கொடைக்கானல் , ஹைதரபாத்
உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகமுழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம் – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம் – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectபார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் ‘Boy Next Door”. அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே “நம்ம வீட்டு பசங்க” என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார்.

இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா? படத்தை தயாரிப்பாரா? என நான் சற்று சந்தேகத்திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது” என்றார்.

மேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அவர்களை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சேட்டிலைட் சேனல்களில் சாதித்து பிரபலங்களாக இருக்கிறார்கள். ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பயில்வான் மூலம் அகில இந்தியாவை கலக்க இருக்கும் கிச்சா சுதீப்

பயில்வான் மூலம் அகில இந்தியாவை கலக்க இருக்கும் கிச்சா சுதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)வழக்கமான வெற்றிகளுடன் திருப்தி அடைந்து அங்கேயே தேங்கி கிடக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அங்கேயே நின்று விடாமல் உழைக்கும் கலைஞர்களும் பலர் இருக்கிறார்கள். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து தங்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதன் மூலம் அவர்கள் தங்களை வெளிப்படையாக நிரூபித்துள்ளனர். ஆனால் ஒரு சில கலைஞர்கள் மட்டும் வெறுமனே தங்கள் வெற்றியையும் தாண்டி, தங்கள் சினிமாத்துறையை அடுத்த நிலைக்கு உயர்த்துகிறார்கள். கிச்சா சுதீபா அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக பல ஆண்டு காலமாக இருந்து வருகிறார். கிச்சாவாக தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர், ராம் கோபால் வர்மாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி பாலிவுட்டிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகராக மாறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘நான் ஈ’ படத்தில் வில்லத்தனமான நடிப்பால் வெகுஜன ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது அவர் பயில்வான் என்ற அகில இந்திய படத்தின் மூலம் மிகவும் மிகப்பெரிய அலைகளை உருவாக்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது பயில்வான்.

ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிக்க, கிருஷ்ணா இயக்கும் இந்த திரைப்படம் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமா. இதில் கிச்சா சுதீபா ஒரு மல்யுத்த வீரராக, தன் கனவுகளை நனவாக்க அவர் மேற்கொள்ளும் பயணத்தையும், அதில் அவர் சந்திக்கும் சவால்களை பற்றிய கதை. அகான்ஷா நாயகியாக நடிக்க, மிகவும் திறமையான மற்றும் பிரபலமான நடிகர் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் கிருஷ்ணா இது குறித்து கூறும்போது, “பயில்வான் கதையை செல்லுலாய்டில் உருவாக்கும் இந்த பயணம் ஒரு சிறந்த கற்றல் அனுபவம். இது போன்ற மிகவும் பிரமாண்டமான படத்தை உருவாக்குவதையும் தாண்டி ஹாலிவுட், பாலிவுட், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக நான் கருதுகிறேன். முன்னணி நடிகர்களை தவிர, சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங், ஷரத் லோகித்ஸவா, அவினாஷ் மற்றும் பலருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரில், கிச்சா சுதீபாவின் சட்டையில்லா தோற்றம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அது பற்றி எஸ்.கிருஷ்ணா கூறும்போது, “ஆம், படத்தை வடிவமைக்கும்போதே, நான் தனிப்பட்ட முறையில் சுதீபா ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், அப்படி உருவானது தான் சட்டையில்லாத தோற்றம். நிச்சயமாக, அவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு முற்றிலும் ஆதரவாக இருந்தது. அவரது அபாரமான உடலமைப்பு எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இருந்தது” என்றார்.

கிச்சா சுதீபாவின் குத்துச்சண்டை போஸ்டர்கள் 5 மொழிகளிலும் அந்தந்த துறையின் மிகப்பெரிய ஆளுமைகளால் வெளியிடப்பட்டது. இந்தியில் சுனில் ஷெட்டி, தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தமிழில் விஜய் சேதுபதி, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர்.

அர்ஜூன் ஜான்யா இசையமைக்க, கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம், ஹர்ஷா ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். இந்திய சினிமாவின் கொண்டாடப்படும் ராம் லக்‌ஷ்மண் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். கே ரவி வர்மா, லார்னெல் ஸ்டோவால் ஆகியோர் குத்துச்சண்டை காட்சிகளை வடிவமைக்க, ஏ விஜய் குஸ்தி காட்சிகளை வடிவமைத்துள்ளார். கிருஷ்ணா, மது, கண்ணன் (திரைக்கதை), நிதின் லுகோஸ் (ஆடியோகிராஃபி), யோகி-சேத்தன்-கணேஷ் (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில், சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” படத்தில் இணையும் சரத்குமார்

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில், சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” படத்தில் இணையும் சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான “தயாரிப்பு எண் 3” உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை ‘சலீம்’ வெற்றிப்படத்தை இயக்கி, தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்த என்.வி.நிர்மல்குமார் இயக்க, சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் சாகச பொழுதுபோக்கு படமான இந்த படத்தின் ஒவ்வொரு அம்சமும், படத்தை முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு செல்வதோடு, சசிகுமார் நடித்த முந்தைய படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. குறிப்பாக, அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆடம்பரமான மும்பை மாநகரத்தில் தொடங்குகிறது, மேலும் சரத்குமார் இதில் கலந்து கொண்டு நடிப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்டபடியே, எல்லா வேலைகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும், நிலையான வேகத்திலும் தொடர்ந்து நடக்கின்றன. நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல. முக்கிய நடிகர்கள் நடிக்கும் படத்தை எந்த கால தாமதமின்றி குறித்த நேரத்தில் நிறைவு செய்யும் ஒரு இயக்குனர் அமைவது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பேரின்பம். எங்கள் படம் உருவாகி வரும் விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. சரத்குமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், இந்த படத்தில் அவரின் புதிய தோற்றம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஜூன் 6ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்கள் நடக்கிறது. இந்த மும்பை மாநகரத்தின் அழகிய இடங்களில் சில முக்கியமான காட்சிகளை படமாக்க இருப்பதால், இந்த கட்ட படப்பிடிப்பு உண்மையில் முக்கியமானதாக இருக்கிறது” என்றார்.

சரத்குமார் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கேட்டால், “வழக்கமாக, படக்குழுவினருக்கு ஒரு தயாரிப்பாளர் போடும் மிக கடுமையான விதி, படத்தை பற்றிய எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்பது தான், அதை நானே மீறக்கூடாது. ஆனால் படத்தில் அவரை பார்க்கும் பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். குறிப்பாக, சரத்குமார் – சசிகுமார் என்ற ஒரு வழக்கத்துக்கு மாறான, அழுத்தமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டணி, அனைவரின் கவனத்தையும் திருப்புகின்றன. ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிக ஆர்வத்துடன் உள்ளனர், இது ஒரு தயாரிப்பாளராக எனது தன்னம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கிறது” என்றார்.

கணேஷ் சந்திரா (ஒளிப்பதிவாளர்), ஆனந்த் மணி (கலை) மற்றும் சக்தி சரவணன் (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்

தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)இயக்குனர் சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் உருவாகும் இசை ஆல்பங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறுவதேயில்லை. இந்த கூட்டணியில் சமீபத்தில் உருவான ‘ஏஞ்சலினா’ படத்தின் இசை இரு நாட்களுக்கு முன்பு FMல் வெளியானது. பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. மறுபுறம், திரை ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் வினியோக உரிமைகளை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்ஸாண்டர் பெற்றிருப்பதால், படம் மிகப்பெரிய அளவில் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து அலெக்ஸாண்டர் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்துவதும், பெரிய அளவில் வெளியிடுவதும் ஒரு நல்ல படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என்ற ஒரு வழக்கமான அனுமானங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் ஒரு நல்ல படம் தான் தயாரிப்பாளரையோ அல்லது வினியோகஸ்தரையோ உயர்த்தும். இயக்குனர் சுசீந்திரன் திரைப்படங்கள் எப்போதுமே திரை வணிகர்களின் பட்டியலில் ஒரு வலுவான நிலையை அடைய தவறியதே இல்லை. அழுத்தமான கருவை மிக நேர்த்தியாக வழங்கும் அவரது சூத்திரம் தான் அவரை தொடர்ந்து வெற்றியாளராக வைத்திருக்கிறது. புதுமுகங்களை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து, சிறப்பான திரைப்படங்களை தொடர்ச்சியாக வழங்கிய இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இருக்குறார். அந்த வகையில் “ஏஞ்சலினா” படம் தொடக்கத்தில் இருந்தே கவனத்தை ஈர்த்துள்ளது, நான் தனிப்பட்ட முறையில் அதன் ஒவ்வொரு செய்தியையும் கவனித்து வருகிறேன். வண்ண மயமான, இளமையான விஷயங்களை காட்டும் அதே நேரத்தில், திகிலூட்டும் அம்சங்களை கொண்ட அற்புதமான கதையையும் கொண்டுள்ளது” என்றார்.

ஏஞ்சலினாவின் இசை வெற்றியை பற்றி அலெக்ஸாண்டர் கூறும்போது, “சுசீந்திரன் – டி இமானின் அசத்தல் கூட்டணி, அவர்கள் பயணத்தின் துவக்கத்திலிருந்து மிகப்பெரிய வெற்றியை பெறறு வருகிறது. ஏஞ்சலினா இசைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது, இசை ரசிகர்களின் தற்போதைய ஃபேவரைட் பாடலான ‘ஒரு நாள்’ பாடல் எனக்கு பிடித்தமான பாடல். விரைவில் எங்கள் விளம்பர பணிகளை துவங்க இருக்கிறோம், சரியான ஒரு ரிலீஸ் தேதியை முடிவு செய்த பிறகு அதை அறிவிப்போம்” என்றார்.

க்ரிஷா குரூப், சரண் சஞ்சய், சூரி, தேவதர்ஷினி மற்றும் பிரபல நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இந்த ஏஞ்சலினா, காதல் அம்சங்களை கொண்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வகை படம். ஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கே.வி.சாந்தி தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.சூர்யா (ஒளிப்பதிவு), தியாகு (படத்தொகுப்பு), ஜிசி ஆனந்தன் (கலை), டி இமான் (இசை), விவேகா & கபிலன் (பாடல்கள்), அன்பறிவ் (சண்டைப்பயிற்சி) மற்றும் ஷோபி (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

More Articles
Follows