தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.
இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவன் மேனன், யோகி பாபு, மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழா மேடையில் வைரமுத்து பேசும்போது..
“கருமேகங்கள் கலைகின்றன படத்தின் தலைப்பே ஒரு கவிதையாக இருக்கிறது.
இந்த படத்தில் ஒரு பாடலை எழுதும்போது இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன்? அப்போது யோகி பாபுவை சொன்னார் தங்கர் பச்சான்.
அவரது முடி அப்படியே இருக்கிறதா ஏதாவது சிகை அலங்காரம் செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டேன் ஒன்றுமில்லை என்றார்.
அவரின் அடையாளமே அந்த முடி தானே என்றார்.
ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருக்கு அவர்களது முகம் அடையாளமாக இருக்கலாம். ஆனால் யோகி பாபுவுக்கு அடையாளம் அவரது முடி தான். எனவே அவரது முடியை குறிப்பிட்டு அந்த பாடலை எழுதினேன்..
குருவிக்கூட்டுக்குள்ளே பரட்டை தலைக்குள்ளே.. என்ற வரிகளை அமைத்தேன்.” என்றார்.
ஜிவி பிரகாஷ் ஓய்வு இல்லாமல் நடித்தும் இசையமைத்துக் கொண்டிருந்தார். அப்படி இருக்கும்போது இந்த போடு போடுறாரே.. ஒருவேளை அவர் தன்னுடைய முழு கவனத்தையும் இசையில் செலுத்தினால் அவர் இன்னும் பெரிய இடத்தை அடைத்திருப்பார்” என பேசினார் வைரமுத்து.
Lyricist Vairamuthu talks about Yogibabu and Gv Prakash