JUST IN நல்லா இல்லன்னு சொன்னாலும் 1000 கொடுக்குறாங்க.; என் படத்தைப் பார்த்து அப்பனை தேடி ஓடுவீங்க – தங்கர் பச்சான்

JUST IN நல்லா இல்லன்னு சொன்னாலும் 1000 கொடுக்குறாங்க.; என் படத்தைப் பார்த்து அப்பனை தேடி ஓடுவீங்க – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவன் மேனன், யோகி பாபு, மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா மேடையில் இறுதியாக தங்கர்பச்சான் பேசினார். அவர் பேசும்போது தன் படத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்தும் தன் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காததும் குறித்து ஆதங்கத்துடன் பேசினார்.

அவர் பேச்சில்.. “அழகி படத்தை வியாபார நோக்கத்திற்காக திரையிட்டு காட்டினேன். கிட்டத்தட்ட 100 காட்சிகள் திரையிட்டு இருப்பேன். ஆனால் ஒருவரும் வாங்க வரவில்லை. ஆனால் அதன் பிறகு மக்கள் அந்த படத்தை கொண்டாடினார்கள்.

மக்களை நம்பி தான் என் படைப்புகளை நான் கொடுக்கிறேன்.. நிறைய படங்களை பிளாக் டிக்கெட் வாங்கி பார்க்கிறார்கள்.

விமர்சனங்களில் நல்லா இல்லை என்று சொன்னாலும் அப்படி என்ன இருக்கு என்று படத்தை சென்று பார்க்கிறார்கள். ஆனால் என்னுடைய கருமேகங்கள் கலைகின்ற படம் உங்கள் அனைவரையும் அழ வைக்கும்.

இந்த படத்தை பார்த்தபின் ஒவ்வொருத்தரும் தங்கள் அப்பாவை தேடி ஓடுவார்கள். இந்த படத்திற்காக நான் அனைவரையும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன்.

யோகி பாபு என்னை எத்தனை முறை திட்டினார் என்று தெரியாது. அவரால் பத்து நிமிடம் கூட நிற்க முடியாது. அத்தனை படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் எனக்காக நடித்துக் கொடுத்தால் அவருக்காக மூன்று மாதங்கள் டப்பிங் செய்ய காத்திருந்தேன். பாரதிராஜாவும் என்னை இப்போது கூட திட்டிக் கொண்டிருப்பார்.. அவர் இங்கு வரவில்லை அவர் வந்திருந்தால்.. அவர் காலில் விழுந்து இருப்பேன்.. அதுபோல அதிதி பாலன் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஒரு காட்சி ஆறு நிமிடங்கள் ஏழு நிமிடங்கள் இருக்கும் அப்படி அசத்தியிருக்கிறார் இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.

Thankar Bachan speech at Karumegangal Kalaigindrana

‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக 3 மொழிகளில் விஷால் டப்பிங்

‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக 3 மொழிகளில் விஷால் டப்பிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இதில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசரை படக்குழு ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்டது.

டீசரில் விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் வித்தியாசமான கெட்டப்பில் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டப்பிங்கின் போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் பேசி உள்ளார்.

விஷால் டப்பிங் செய்யும் வீடியோ காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும், விஷால் பேசும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vishal dubs in 3 different languages for ‘Mark Antony’

JUST IN ‘லியோ’ சூட்டிங்கை விட்டுட்டு அண்ணனுக்காக வந்தேன் – லோகேஷ் கனகராஜ்

JUST IN ‘லியோ’ சூட்டிங்கை விட்டுட்டு அண்ணனுக்காக வந்தேன் – லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவன் மேனன், யோகி பாபு, மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா மேடையில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசும்போது..

“தங்கர்பச்சான் படங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும். அவரது ஒன்பது ரூபாய் நோட்டை நான் பார்த்து இருக்கும்..

தம்பி இந்த படத்தை கூட நீங்க பார்த்திருக்கீங்களா என்று என்னிடம் கேட்டார். அவருக்காக தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன்.

தற்போது லியோ சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த இடைவெளியில் அவருக்காக நான் வந்தேன். கருமேகங்கள் கலைகின்றன படம் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தி பேசினார் லோகேஷ்.

அதன் பின்னர் மேடை ஏறிய தங்கர் பச்சன் அவருக்கு பலாப்பழமும் பாதாம் முந்திரி பருப்பும் கொடுத்தார். அதற்கான காரணத்தை தொகுப்பாளர்கள் மோகன் மற்றும் அனிதா கேட்டபோது.. “நான் உழவன் என் விவசாய நிலத்தில் விளைந்தது.்அவருக்கு கொடுத்தேன் வேறு ஒரு காரணமும் இல்லை என்றார்.

தற்போது விஜய் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.. அந்த இடைவெளியில் இங்கே வந்திருக்கிறார்.. கண்டிப்பாக நானே அதுபோல ஒரு சூழ்நிலை வந்திருப்பேனா என்று தெரியாது அவர் வந்தமைக்கு நன்றி ” என தெரிவித்தார்.

Lokesh Kanagaraj speech at Karumegangal Kalaigindrana

LIVE ரஜினி கமல் அஜித் விஜய்க்கு அடையாளம் முகம்.; ஆனால் யோகி பாபு? – வைரமுத்து

LIVE ரஜினி கமல் அஜித் விஜய்க்கு அடையாளம் முகம்.; ஆனால் யோகி பாபு? – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவன் மேனன், யோகி பாபு, மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா மேடையில் வைரமுத்து பேசும்போது..

“கருமேகங்கள் கலைகின்றன படத்தின் தலைப்பே ஒரு கவிதையாக இருக்கிறது.

இந்த படத்தில் ஒரு பாடலை எழுதும்போது இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன்? அப்போது யோகி பாபுவை சொன்னார் தங்கர் பச்சான்.

அவரது முடி அப்படியே இருக்கிறதா ஏதாவது சிகை அலங்காரம் செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டேன் ஒன்றுமில்லை என்றார்.

அவரின் அடையாளமே அந்த முடி தானே என்றார்.

ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருக்கு அவர்களது முகம் அடையாளமாக இருக்கலாம். ஆனால் யோகி பாபுவுக்கு அடையாளம் அவரது முடி தான். எனவே அவரது முடியை குறிப்பிட்டு அந்த பாடலை எழுதினேன்..

குருவிக்கூட்டுக்குள்ளே பரட்டை தலைக்குள்ளே.. என்ற வரிகளை அமைத்தேன்.” என்றார்.

ஜிவி பிரகாஷ் ஓய்வு இல்லாமல் நடித்தும் இசையமைத்துக் கொண்டிருந்தார். அப்படி இருக்கும்போது இந்த போடு போடுறாரே.. ஒருவேளை அவர் தன்னுடைய முழு கவனத்தையும் இசையில் செலுத்தினால் அவர் இன்னும் பெரிய இடத்தை அடைத்திருப்பார்” என பேசினார் வைரமுத்து.

Lyricist Vairamuthu talks about Yogibabu and Gv Prakash

JUST IN நடிகர் இசையமைப்பாளர் பாடகர் எந்த ஜிவி பிரகாஷ் பிடிக்கும்?; சைந்தவி சூப்பர் பதில்

JUST IN நடிகர் இசையமைப்பாளர் பாடகர் எந்த ஜிவி பிரகாஷ் பிடிக்கும்?; சைந்தவி சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த படத்தில் பாரதிராஜா அதிதி பாலன் கௌதம் வாசுதேவன் மேனன் யோகி பாபு மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா மேடையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற இதுபோல உறவு உலகத்தில் இல்லை என்ற பாடலை பாடகி சைந்தவி பாடினார்.

அதன் பின்னர் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

பாடகர் நடிகர் இசை அமைப்பாளர் இவர்களில் ஜிவி பிரகாஷ் உங்களுக்கு எப்படி பிடிக்கும் என்று கேட்டனர்.

ஜி வி பிரகாஷ் என்னுடைய நண்பர் என்று பதில் அளித்தார்.

அதன் பின்னர் இந்த மூன்றில் யாருக்கு எத்தனை மார்க் போடுவீர்கள்? என்று கேட்டனர்.. எல்லாவற்றிற்கும் முழு மதிப்பெண் கொடுப்பேன் 100 என்றார்.

கணவராக ஜிவி பிரகாஷ் பிரகாசுக்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள்.. அதற்கும் முழு மதிப்பெண் கொடுப்பேன் அவரைப் போன்ற கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என சைந்தவி பேசினார்.

https://www.youtube.com/shorts/wfj60owtDRE

Singer Saindhavi about GV Prakash at Karumegangal Kalaigindrana event

விபத்தில் சிக்கிய PS & VTK பாடகி ரக்‌ஷிதா உருக்கமான பதிவு

விபத்தில் சிக்கிய PS & VTK பாடகி ரக்‌ஷிதா உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதோடு சொல்’ பாடல் பாடியவர் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.

இவர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடலையும் பாடியுள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் சிறு வயது முதலே பாடத் தொடங்கி புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.

தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும், பல மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

இந்த நிலையில், பாடகி ரக்ஷிதா மலேசியாவில் தான் கார் விபத்தில் சிக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இன்று ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். மலேசியாவில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நான் இருந்த கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி கடும் சேதமடைந்தது. அந்த 10 நொடிகளில் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்வும் என் கண்முன்னே தோன்றி மறைந்தது. ஏர்பேகுகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவை இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும். இன்னும் எனக்கு நடுக்கம் குறையவில்லை. நல்லவேளையாக நான், ஓட்டுநர் மற்றும் முன்சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி ஆகிய மூவரும் சிறிய உள்காயங்கள் மற்றும் வெளிக்காயங்களுடன் தப்பித்தோம். அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருக்கிறேன்.” என கூறியுள்ளார்.

ponniyin selvanbsinger Rakshita Suresh met accident

More Articles
Follows