தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் தயாரிப்பில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு மறுத்ததால் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் இனிமேல் அந்த படத்தில் நடிக்க என்னால் முடியாது என வடிவேலு விளக்க கடிதம் கொடுத்ததை நாம் பார்த்தோம்.
இதைத் தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இனி படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தடை விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வது குறித்து வக்கீல்களுடன் வடிவேல் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் வெளியான கத்தி சண்டை, மெர்சல் படங்களில் வடிவேல் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.