தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வடிவேலு இல்லாத சினிமா… உப்பு இல்லாத உணவாக மாறிவிட்டது.
அவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரின் காமெடி மற்றும் மீம்ஸ்களே என்றும் டிரெண்ட்டிங்கில் உள்ளது.
ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் வடிவேலு.
அப்போது ஏற்பட்ட சில கருத்து மோதல்களால் படத்திலிருந்து விலகினார் வடிவேலு.
இதனையடுத்து ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
மெர்சல், கத்தி சண்டை உள்ளிட்ட ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டினார்.
ஆனால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதால் புதிய படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.
இந்த நிலையில், வடிவேலுவை வெப் தொடரில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்காக ஆன்லைன் முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், வடிவேலுவுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க காமெடி தொடராக இது உருவாகவுள்ளதாம்.
எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.