தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ள படம் ஹீரோ.
சமுமூகத்தில் நடக்கும் அவலங்களை அடையாளம் கண்டு அதற்கு காரணமானவர்களை தோலுரிக்க முகமூடி அணிந்த ஒருவனாக வருகிறார் இந்த ஹீரோ.
இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.
கிறிஸ்மஸ் விருந்தாக அடுத்த மாதம் டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில்கடந்தாண்டுடி.ஆர்.எஸ். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜ 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
அதற்குரிய வட்டியையும், அசல் பணத்தையும் அவர் திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதோடு, இந்த படத்தை கேஜேஆர் நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளார்.
எனவே டிஆர்.எஸ். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதாவது ஹீரோ உள்பட 24 ஏ.எம்.நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று டிஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த வழக்கில் ஹீரோ படத்திற்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஹீரோ படத்தை தயாரிக்கும் கேஜேஆர் நிறுவனம் நிச்சயம் படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவித்துள்ளது.