‘KGF’ பட வெற்றி எதிரொலி : முதல் படமே பான் இந்தியா படம்.; பரவசத்தில் ‘பனாரஸ்’ ஜோடி

‘KGF’ பட வெற்றி எதிரொலி : முதல் படமே பான் இந்தியா படம்.; பரவசத்தில் ‘பனாரஸ்’ ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது.

‘கேஜிஎஃப்’ டைரக்டர் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் உடன் இணையும் யஷ்

இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார்.

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’.

இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை என் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

இந்நிலையில் தமிழில் வெளியான ‘குரங்கு பொம்மை’ எனும் படத்திற்கு இசையமைத்த கன்னட திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளரான அஜனீஸ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாய கங்கா..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், ‘பனாரஸ்’ படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், இயக்குநர் ஜெய தீர்த்தா, நடிகர் சுஜய் சாஸ்திரி, கதாநாயகன் ஜையீத் கான், கதாநாயகி சோனல் மோன்டோரியோ ஆகியோருடன், தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி.கே. ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ்விழாவில் இயக்குநர் ஜெய தீர்த்தா பேசுகையில்…

” பனாரஸ் படத்திற்கு முன்பாக கன்னடத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘பெல்பாட்டம்’ படத்தை தமிழில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்து வருகிறார்.

நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. வீதியோர நாடகக் கலைஞனாக பயணத்தைத் தொடங்கி, படங்களை இயக்கி வருகிறேன். பனாரஸ் படத்தில் காசியை பின்னணியாக கொண்டு காதல் கதையை உருவாக்கி இருக்கிறேன்.

இந்த படத்தில் காதல் என்பது அழகை பார்த்து வருவதில்லை. இதயபூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் தான் காதல் உண்டாகிறது என்பதனை, மர்மங்கள் நிறைந்த காசியை கதைக்களமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருக்கிறேன்.

இதன் பின்னணியிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது. திரைப்பட படைப்புகளுக்கு மொழி பேதம் இல்லை. என்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் படம், தமிழ் ரசிகர்களின் முன்னிலையில் தான் விருதினை பெற்றது.

அந்த வகையில் சிறந்த திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிப்பதில் தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள். இதற்காக நான் பெருமிதம் அடைகிறேன். ‘பனாரஸ்’ திரைப்படம் தமிழிலும் வெளியாவதை பாக்கியமாக கருதி, உங்களின் ஆதரவை கேட்கிறேன். என்னுடைய இயக்கத்தில் தயாரான ஏழு படங்களில் ஐந்து படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

’பனாரஸ்’ படத்திலும் நடிகர் ஜையீத் கானை கதாநாயகனாக அறிமுகம் செய்திருக்கிறேன். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை தமிழில் பாடலாசிரியர் பழனி பாரதி எழுதியிருக்கிறார்.

நேற்று வெளியிடப்பட்டிருக்கும் ‘மாய கங்கா.. ’என்ற பாடலையும் அவரே எழுதியிருக்கிறார். இந்த ‘பனாரஸ்’ படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை காமராசன் எழுதியிருக்கிறார். ஒத்துழைப்பு வழங்கிய ஒளிப்பதிவாளர் அத்வைதா, இசையமைப்பாளர் அஜனீஸ் உள்ளிட்ட படக் குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நாயகன் ஜையீத் கான் பேசுகையில்…

” பனாரஸ் படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் ஜிகே ரெட்டி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரும், என்னுடைய தந்தையும் பால்யகால நண்பர்கள். நடிகனாக வேண்டும் என்று தீர்மானித்தவுடன் எதிர்ப்பு தெரிவித்த என்னுடைய பெற்றோர்களை, தயாரிப்பாளர் திலக்ராஜ் அவர்கள் தான் சமாதானம் சொல்லி, நடிப்பு பயிற்சி கல்லூரிக்கு என்னை அனுப்பி வைத்தார். அங்கு நடிப்புடன் நடனம், சண்டைக் காட்சிகளையும் கற்றுக் கொண்டேன்.

முதல் படமே பான் இந்திய அளவில் வெளியாகும் திரைப்படம் என்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ‘பனாரஸ்’ படத்தின் கதை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றது. படக்குழுவினர் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கடினமாக பணியாற்றியிருக்கிறோம்.

இதற்காக தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் சூழலில், கதாநாயகியுடன் காதல் காட்சிகளில் நடிப்பது சவாலாக இருந்தது.

காசி புதிரும், மர்மங்களும் நிறைந்த நகரம். அதனால் இந்த பாடல் காட்சியில் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் பார்த்துவிட்டு விமர்சிக்க வேண்டும்.

‘பனாரஸ்’ படத்தின் தெலுங்கு பதிப்பை ‘புஷ்பா’ பட புகழ் இயக்குநர் சுகுமார் வெளியிட்டார். ஹைதராபாத்திலும் ‘பனாரஸ்’ படக்குழுவினருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

தமிழிலும் ‘பனாரஸ்’ படக்குழுவினருக்கு பேராதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி பேசுகையில்…

” தயாரிப்பாளர் திலகராஜ் என்னுடைய நீண்டகால நண்பர். அவருடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கை தமிழில் வெளியிடுவதற்கு பெருமிதம் கொள்கிறேன்.

இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகன், கதாநாயகியின் நடிப்பு நேர்த்தியாக இருக்கிறது. காட்சிகளும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன.

இதற்காக இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் என்பது அவசியம். ஆரோக்கியத்தை பேணி காப்பது நம் கையில்தான் இருக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

அதனை இன்றிலிருந்து தொடங்கினால்.. மூன்று மாதத்திற்குள் உங்கள் உடலில் மாற்றம் தெரியும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஒழுக்கம் இதனை கடைப்பிடித்தால், ஆரோக்கியத்துடன் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்.” என்றார்.

இந்த விழாவில் நாயகன் ஜையீத் கான் மற்றும் நாயகி சோனல் மோன்டோரியோ மேடையில் “ரவுடி பேபி….” பாடலுக்கு நடனமாடியது வருகைத் தந்திருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

‘KGF’ film success reverberations: First film is Pan India film.; ‘Banaras’ couple in ecstasy

‘கேஜிஎஃப்’ டைரக்டர் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் உடன் இணையும் யஷ்

‘கேஜிஎஃப்’ டைரக்டர் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் உடன் இணையும் யஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே ஜி எஃப் 1, கேஜிஎஃப் 2 படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல்.

இந்த இரு படங்களிலும் யஷ் நாயனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக அறியப்பட்டார் யஷ்.

இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றி அடைந்தது.

மீண்டும் இவர்கள் கேஜிஎஃப் 3 படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்க சென்று விட்டார் பிரசாந்த் நீல்.

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இப்படத்தில் ‘கேஜிஎப்’ நாயகன் யஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Yash joins Prabhas in ‘KGF’ director Prasanth’s direction

ஆரம்பிக்கலாங்களா.. பாத்துக்கலாம்..; ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறவிப்பு

ஆரம்பிக்கலாங்களா.. பாத்துக்கலாம்..; ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது.

திரைத்துறையின் உச்சபட்ச ஆக்‌ஷன் த்ரில்லர்”, “ஆண்டவரின் வெற்றி மேஜிக்”, “தென்னிந்தியாவின் பவர் ஹவுஸ் திறமைகளின் நடிப்பு கண்காட்சி”, “ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம்’ இன்னும் இன்னும் பல பாராட்டுக்கள்!!!

கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிப்படமான ‘விக்ரம்’ படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்றும் விமர்சகர்களின் பாரட்டுக்களும் நிற்காமல் இன்னும் கனமழை போல, பொழிந்து கொண்டு இருக்கிறது.

இந்திய அளவில் அனைத்து திரைச் சாதனைகளையும் உடைத்துள்ளன.

சூர்யாவுக்கு 1.. பஹத்துக்கு 1 கார்த்திக்கு 1.; விக்ரம் படத்தை பிரித்து மேயும் லோகேஷ்

இந்த திரைப்படம் இந்திய வர்த்தக வட்டாரங்களை மட்டும் ஆச்சரியப்படுத்தவில்லை, சர்வதேச சந்தைகளையும் பிரமிக்க வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, கமல்ஹாசன்-விஜய் சேதுபதி-ஃபஹத் பாசில்-சூர்யா நடித்துள்ள “விக்ரம்” திரைப்படம் ஜூன் 3, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் பிரமாண்ட விளம்பரங்கள், நட்சத்திர கூட்டம், என ‘விக்ரம்’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் திரையுலக ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.

முதல் டீசரில் கமல்ஹாசன் உச்சரித்த ‘ஆரம்பிக்கலாமா’ என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து, டிரெய்லரில் வரும் ‘பாத்துக்கலாம்’ வரை ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் ரசிகர்களின் கொண்டாட்ட ஆரவாரமாக அமைந்தது.

விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து 100% நேர்மறையான விமர்சனங்களுடன் இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஓப்பனிங்கை பெற்றது.

வெளியான வேகத்தில் திரையரங்குகள் திருவிழா கோலமாக மாறியது, வெளியான மூன்று-நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்படம் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.

‘விக்ரம்’ இந்திய திரையுலகின் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் சாதனைகளை முறியடித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் டாப் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது, இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், அட்டகாசமான கவர்ச்சியும், ஃபஹத் ஃபாசிலின் அசத்தலான நடிப்பும், விஜய் சேதுபதியின் அதிபயங்கரமான வில்லத்தனமும், சூர்யாவின் வெறித்தன கேமியோவும் ரசிகர்களை உச்சக்கட்ட பரவசத்தில் ஆழ்த்தியது.

தவிர, இயக்குநர் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) கட்டமைப்பும், ‘கைதி’ திரைப்படத்தில் இருந்து சில கதாபாத்திரங்களை வரவழைத்து, எதிர்காலத் திரைப்படங்களுக்கு அவற்றை விரிவுபடுத்தியது என இப்படம் பன்மடங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கிரீஷ் கங்காதரனின் கண் கவர் ஒளிப்பதிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் மனம் மயக்கும் இசையமைப்பும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது.

விக்ரம் திருவிழாவை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் முதன்முதலில் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட்-கோர் ஆக்சன் திரைப்பட ஆர்வலர்கள் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படத்தை புகழ்பெற்ற டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் திரையரங்குகளில் ‘விக்ரம்’ என்ற பிரம்மாண்டமான ஆக்‌ஷன்-பேக் த்ரில்லரைப் பார்ப்பதற்கு முன்பாக பார்த்தார்கள், இது இரு திரைப்பட உலகங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள நிறைய பங்களித்தது என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தினை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜூலை 8, 2022 முதல் கண்டுகளிக்கலாம்.

OTT release date of ‘Vikram’ announced

JUST IN மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு ரஜினி குஷ்பூ சரத் நேரில் அஞ்சலி

JUST IN மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு ரஜினி குஷ்பூ சரத் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி கமல்.. மலையாள சினிமாவில் மோகன்லால் மம்மூட்டி.. தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி வெங்கடேஷ்.. உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா.

மேலும் அஜித் விஜய் பிரசாந்த் ஆகியோருடனும் நடித்துள்ளார் மீனா.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்தவர் மீனா.

பின்னர் எஜமான், முத்து, வீரா படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். அண்மையில் வெளியான அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார் மீனா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் நைனிகா.

மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்தசாமியின் மகளாகவும் நடித்தார் நைனிகா.

இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு பெசண்ட் நகர் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

எனவே வித்யாசாகர் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீனாவின் கணவர் உடலுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் & பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் சற்றுமுன் மீனாவின் வீட்டிற்கு சென்று வித்யாசாகர் உடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

சரத்குமார், நிழல்கள் ரவி, குஷ்பூ உள்ளிட்டோரும் வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ரஜினிகாந்த், பிரபுதேவா, ரம்பா குடும்பத்தார், விஜயகுமார் குடும்பத்தார், சேரன், மன்சூர் அலிகான், பழம்பெரும் நடிகை லட்சுமி, சங்கீதா, கிரிஷ், குஷ்பு, சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், நாசர், ரமேஷ் கண்ணா, பிரசன்னா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வித்யாசாகரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு வைத்து தனது கணவருக்கு இறுதிச்சடங்குகளை மீனா செய்தார்.

பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் கலா மாஸ்டர், நடிகைகள் ரம்பா, சங்கீதா கிரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Rajini, Khushboo, Sarath Kumar paid homage to Meena husband Vidyasagar’s mortal remains

ஆஸ்கர் விருது உறுப்பினரான ஒரே தென்னிந்திய நடிகர் சூர்யா.; கஜோலும் இடம்பெற்றார்

ஆஸ்கர் விருது உறுப்பினரான ஒரே தென்னிந்திய நடிகர் சூர்யா.; கஜோலும் இடம்பெற்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமாவின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

இந்த விருதுக்காக உலகெங்கிலும் உள்ள பல மொழி திரைப்படங்கள் பல ஆண்டுகளாக போட்டியிட்டு வருகின்றன.

இந்திய சினிமாவை பொறுத்தவரை ஒரே சமயத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர் கமலஹாசனின் ஓரிரு திரைப்படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் விருதுகள் எதுவும் பெறவில்லை.

அதே போல.. அண்மையில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கெடுத்தன.

இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார் நடிகர் சூர்யா.

அதேபோல் இந்தியாவிலிருந்து நடிகை கஜோலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் ‘மின்சார கனவு’ படத்தில் அரவிந்தசாமி மற்றும் பிரபுதேவா உடன் நடித்தவர் நடிகை கஜோல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையில் இருந்து ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் தேர்வு குழு உறுப்பினராக உள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Suriya and Kajol have been invited by The Academy to join as the member of Oscars 2022

‘சந்திரமுகி 2’ அப்டேட்: வாசு லாரன்ஸ் வடிவேலு கூட்டணியில் பிரபல நடிகை

‘சந்திரமுகி 2’ அப்டேட்: வாசு லாரன்ஸ் வடிவேலு கூட்டணியில் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

முதல் பாகத்தில் ரஜினியுடன் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, விஜயகுமார், வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இசையமைத்த இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரித்து இருந்தார்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டதால் நடிகர் ராகவா லாரன்சை நாயகனாகியிருக்கிறார் பி வாசு.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் நாயகியாக த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

எனவே விரைவில் இது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

trisha

‘Chandramuki 2’ Update: Popular actress joins the team

More Articles
Follows