விஜய்சேதுபதியின் 50வது படத்தை இயக்கும் சூப்பர் ஹிட் டைரக்டர்.; டைட்டில் என்ன.?

விஜய்சேதுபதியின் 50வது படத்தை இயக்கும் சூப்பர் ஹிட் டைரக்டர்.; டைட்டில் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017இல் நித்திலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘குரங்கு பொம்மை’. இந்த படத்தில் விதார்த், பாரதிராஜா, டெலினா, இளங்கோ குமாரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பத்திரிக்கையாளர்களாலும் மக்களாலும் இந்த படம் பெரிய பாராட்டுகளை பெற்றதோடு நல்ல லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்தது.

இந்த படத்தில் வில்லன் குமரவேலுக்கு நாயகன் விதார்த் கொடுக்கும் தண்டனை பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் நித்திலன் வேறு எந்த படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று ஜூலை 10ஆம் தேதி 2023 தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்திலன்.

இந்தப் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டைட்டில் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விஜய்சேதுபதியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

VJS50 Title Look is releasing Tomorrow

கமல் படம் ரி-ரீலீஸ் வெற்றி விழா.; கௌதம் வாசுதேவ் – ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்பு

கமல் படம் ரி-ரீலீஸ் வெற்றி விழா.; கௌதம் வாசுதேவ் – ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’.

இப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார்.

கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படம் கடந்த ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.

சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது.

மேலும், ‘வேட்டையாடு விளையாடு’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

vettaiyadu vilayadu movie re release success party

உங்கள் மாவட்டத்தில் என்னென்ன பிரச்சனை.? மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசிய விஜய்

உங்கள் மாவட்டத்தில் என்னென்ன பிரச்சனை.? மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் இன்று சந்தித்தார்.

இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.

இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் விழாவை சிறப்பாக நடைபெற்றது.

உங்களுடைய மாவட்டங்களில் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன.? எனவும், மக்கள் மன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக விஜய் கேட்டறிந்தாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நிர்வாகிகளின் நலனை கேட்டறிந்தும் அவர்களுடன் புகைப்படங்களையும் விஜய் எடுத்துக்கொண்டார்.

கடந்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay consultation with Vijay MakkalIyakkam Administrators is complete

இது SK Special Surprise : 6 மணிக்கு ‘மாவீரன்’.. 7 மணிக்கு ‘மாவீருடு’

இது SK Special Surprise : 6 மணிக்கு ‘மாவீரன்’.. 7 மணிக்கு ‘மாவீருடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாவீரன்

இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இன்று மாலை 6.00 வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், தெலுங்கின் ‘மாவீருடு’ 7.00 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீருடு

maaveeran film team gives big reveal to fans

கூகுளும் யூடியூபும் நுழைவதற்கு முன்பு…; ‘டிராஃபிக் ராமசாமி’ இயக்குநரின் அடுத்த அதிரடி

கூகுளும் யூடியூபும் நுழைவதற்கு முன்பு…; ‘டிராஃபிக் ராமசாமி’ இயக்குநரின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போது ‘மாமன்னன்’ எடுத்த மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற குழந்தைகள் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த வரிசையில் குழந்தைகள் படம் ஒன்றை இயக்குகிறார் டிராபிஃக் ராமசாமி படத்தின் இயக்குநர் விக்கி
.
இப் படத்தைப் பற்றி அவர் கூறிய போது…

“கேள்விகளால் உலகை அழகாக்கியவர்கள் குழந்தைகள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கும் போது அவர்களின் அறிவு விரிவடைகிறது.

தொலைக்காட்சிகள் 90’களின் துவக்கத்திலும், இணையதளம் 90’களின் இறுதியிலும் தமிழகத்தில் பரவலாகத் தொடங்கின. இவை வீடு புகுந்து தமிழ்க் குடும்பங்களுக்குள் நுழைந்ததிலிருந்து புழுதியில் மண்ணுடன் மண்ணாக விளையாடிய குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

அதன் விளைவாக இப்போதுள்ள குழந்தைகளிடம் கேள்விகள் குறைந்துபோய் பதில்களாகவே நிறைந்து இருக்கிறது. இவர்களுக்கு உலகைப் பற்றி அனைத்துமே தெரிந்திருக்கிறது.

இப்படம் கூகுளும், யூடியூபும் தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்பு குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்த பொற்காலத்தையும், அவர்களின் உலகத்தையும் நகைச்சுவையாகச் சொல்லும் கிராமத்துப் பின்னணியில் அமைந்ததாக இருக்கும்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு சென்னையிலும், நடிகர்கள் தேர்வு மதுரை, சிவகங்கை வட்டாரங்களிலும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது”

இவ்வாறு இயக்குநர் விக்கி கூறினார்.

Traffic Ramasamy movie directors next project updates

காமெடியன் பாவா லட்சுமணன் கால் விரல் அகற்றம்.; அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முத்துக்காளை

காமெடியன் பாவா லட்சுமணன் கால் விரல் அகற்றம்.; அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முத்துக்காளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் பாவா லட்சுமணன். இவர் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் வடிவேலுடன் இணைந்த பின்னர் இவரது காமெடி பெரும் வரவேற்பை பெற்றது.

மம்மூட்டி, முரளி நடித்த ‘ஆனந்தம்’ படத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனாக நடித்திருந்தார். மேலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்ற படத்தில் வடிவேலுவின் உதவி வழக்கறிஞராக இவரும் அல்வா வாசுவும் நடித்திருந்தனர்.

ஒரு காட்சியில் வடிவேலு ஜாமீன் கேட்டு சிறையில் கைதியாக காத்திருப்பார். அப்போது எல்லாம் மார்க்கெட்டிலும் தேடிவிட்டோம்.

ஜாமீன் என்ற மீன் மட்டும் கிடைக்கவில்லை என காமெடி செய்திருப்பார். அவரின் அந்த காமெடியை இன்றளவு நம்மால் மறக்க முடியாது.

இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் அவர்களை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் முத்துக்காளை இரண்டாவது முறையாக சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜனும் அருகில் இருந்தார்.

பாவா லட்சுமணனுக்கு அகற்றப்பட்ட கால் கட்டை விரல் இடத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அடுத்த வாரம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாவா லட்சுமணன்

Actor Bava Lakshmanan plastic surgery treatment

More Articles
Follows