தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘மாயவலை’ படத்தை அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து உள்ளனர்.
அதர்மம் & பகைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரமேஷ் பாலகிருஷ்ணன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர் மற்றும் சஞ்சிதா செட்டி இணைந்துள்ள ‘மாயவலை’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நேற்று நவம்பர் 5 பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது கார்த்தி மற்றும் சூர்யாவை மீண்டும் இயக்குவீர்களா என கேட்டபோது..
சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரையும் இயக்கிய இயக்குனர் நான்தான். இன்று அவர்கள் மிக உயரத்திற்கு சென்று விட்டார்கள். அவர்கள் உயரம் அடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தான்.
விதை விதைத்து விட்டோம் அவர்கள் வளர்ந்து விட்டார்கள். மேலும் என்னால் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது. எனவே கார்த்தி சூர்யாவிடம் இருந்து நான் விலகி விட்டேன்” என்று பேசினார்
கார்த்தியை ‘பருத்திவீரன்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் நீங்கள். ஆனால் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லையே ஏன்? என்று கேட்கப்பட்டது.. எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.
Director Ameer attack on Suriya and Karthi