விஸ்வரூபம்2 பாடல் வரிகளை வெளியிடும் கமல்

விஸ்வரூபம்2 பாடல் வரிகளை வெளியிடும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasaanகமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் விஸ்வரூபம்2.

இதன் முதல் பாகம் கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியானது.

இந்தாண்டில் இதன் இரண்டாம் பாகத்தை வெளியிட உள்ளார்.

இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார், இந்தி நடிகர் ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விரைவில் தான் எழுதியுள்ள இப்பட பாடல் வரிகளை வெளியிட உள்ளதாக கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Recorded last song in VR2. Hindi Lyrics by Prasoon Joshi Tamizh lyrics by me. Tune is infectious to say the least. Telugu to record soon.

‘ரஜினி வரக்கூடாது; தமிழ்நாட்டை நானே ஆள்வேன்..’ சீறிய சீமான்

‘ரஜினி வரக்கூடாது; தமிழ்நாட்டை நானே ஆள்வேன்..’ சீறிய சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Seemanரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு, தமிழகத்தில் பெருமளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ரஜினியின் ஆதரவளித்து வருகின்றன.

ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தொடர்ந்து கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.

சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது…

தமிழ்நாட்டில் வாழ்ந்தால் ரஜினி தமிழராகிவிட முடியுமா?

மராட்டியத்தில் நாம் யாரேனும் வாழ்ந்தால் மராட்டியர் ஆகிட முடியுமா? என்ன பேசுறாரு ரஜினி?

ஆங்கிலேயர் இங்க வாழ்ந்தாங்க. இந்தியர்கள் ஆகிட்டாங்களா.?

என்னய்யா ஜனநாயகம். இது என் நாடு. என் வீடு. வீட்ல என்ன பிரச்சினை என்பது எனக்குதான் தெரியும்.

இவருக்கு என் முன்னோர் பத்தி என்ன தெரியும். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது.

அவரு நடிக்கட்டும். கோடி கோடியாய் சம்பாதிக்கட்டும்.

இது என் நாடு. இந்த நாட்டை நான்தான் ஆளுவேன்.” என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

சிம்பு-தமன்னாவின் ஓவர் நெருக்கத்தால் ‘யு’ கிடைக்காதாமே.!

சிம்பு-தமன்னாவின் ஓவர் நெருக்கத்தால் ‘யு’ கிடைக்காதாமே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aaa movieதான் இயக்கிய முதல் படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலேயே அதிகப்படியான கவர்ச்சி காட்சிகளை வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதனால் பிட்டு படம் என்ற ரேஞ்சுக்கு இதற்கு பாப்புலாரிட்டி கிடைத்தது.

தற்போது சிம்பு 4 வேடங்களில் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கி வருகிறார்.

இதன் முதல் பாகம் மட்டும் அடுத்த மாதம் ஜீன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் சிம்புவின் ஒரு கேரக்டரான அஸ்வின் தாத்தா வேடத்திற்கு தமன்னா ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த காட்சிகளில் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்திருக்கிறார்களாம்.

இளைஞர்களை கவரும் வகையில் ரொமான்ஸாக படமாக்கியிருக்கிறாராம் டைரக்டர்.

இதனால் இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

Due to Over glamour of Simbu and Tamannah in AAA movie it may loose U certificate in Censor

சீமான்-வீரலட்சுமிக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம்

சீமான்-வீரலட்சுமிக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini styleகடந்த 25 வருடங்களாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த வாரம் ரஜினி பேசிய அரசியல் பேச்சு, தற்போது அதிகளவில் சூடுபிடித்துள்ளது.

இதனிடையில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பா.ஜ.க-வில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

அதுபோல் தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி தலைமையிலும் ரஜினி எதிராக போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று, ரஜினியை எதிர்ப்பவர்களை கண்டித்து ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, சீமான், வீரலட்சுமி ஆகியோர் உருவபொம்மையை எரிக்க ரசிகர்கள் முயன்றனர். இதையடுத்து ரசிகர்கள் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

Super Star Rajini fans protest against Seeman and Veeralakshmi

rajini fans protest

50 லட்சம் பேர் சிவகார்த்திகேயனை ஃபாலோ பண்றாங்களாம்.!

50 லட்சம் பேர் சிவகார்த்திகேயனை ஃபாலோ பண்றாங்களாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siva 3m followersகடந்த 2011ஆம் ஆண்டு ட்விட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரின் படம் தொடர்பான செய்திகள் மட்டுமல்லாது, சமூகம் சார்ந்த சில பதிவுகளையும் இங்கே பதிவுட்டு வருகிறார்.

தற்போது ஆறு ஆண்டுகளில் 3 மில்லியன் ஃபாலோயர்கள் அதாவது 30 லட்சம் பாலோயர்கள் ட்விட்டரில் கிடைத்துள்ளனர்.

இது தமிழ் நடிகர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது… ‘இப்போது எனது பாலோயர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளது.

எனவே என் சகோதர, சகோதரிகளுக்கும் நல விரும்பிகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் பேஸ்புக் பக்கத்தில் சுமார் 20 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தை சேர்த்து சிவகார்த்திகேயனுக்கு 50 லட்சம் பாலோயர்கள் உள்ளனர்.

Sivakarthikeyan has 3 million followers in Twitter and 2 Million in Facebook

சூர்யா-சத்யராஜ்-சரத்குமார்-விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட்

சூர்யா-சத்யராஜ்-சரத்குமார்-விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Vivek Sathyaraj Sarathkumarகடந்த 2009ஆம் ஆண்டில் சென்னையில் நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய நடிகர், நடிகைகள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த நடிகர், நடிகைள் ஆஜராவதில்லை.

இன்று (மே 23, 2017) இந்த வழக்கை விசாரித்த நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நீதிமன்றத்திலிருந்து பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜரகாததால் நடிகர்கள் சூர்யா சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவை பிறப்பித்தார்.

Arrest warrant for 8 actors including Suriya Vivek Sarthkumar Sathyaraj

More Articles
Follows