தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விரைவில் முழுமையாக அரசியல் களம் காணப்போகிறார் கமல்ஹாசன்.
இதனிடையில் பாதியில் நிறுத்திவைக்கப்பட்ட விஸ்வரூபம்2 படத்தை சூட்டிங்கில் மீண்டும் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார்.
இதனால் சிறிது நாட்களுக்கு அரசியல் கருத்துக்கள் இருக்காது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென மீண்டும் ட்விட்டரில் அரசியல் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த ட்விட்டர் பதிவு…
Kamal HaasanVerified account @ikamalhaasan
கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது.