நடந்து வந்து நன்றி சொல்வேன்… ரசிகர்களுக்கு கமல் தகவல்..!

நடந்து வந்து நன்றி சொல்வேன்… ரசிகர்களுக்கு கமல் தகவல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal stillsகடந்த 13ஆம் தேதி மாடிப் படியில் இருந்து தவறி விழுந்த கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது ஓய்வு எடுத்து வரும் தன் உடல்நிலை பற்றி ரசிகர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது…

என்பால் எப்போதும் என் நிலையிலும் அன்பு காட்டும் என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி பல.

எனக்கு சிறு விபத்தோ, ஆபத்தோ ஏற்பட்டால் கூட கேள்விகள் பலவற்றுடன் வீறுகொண்டு எழுந்து என்னை காக்க எனக்கும் முன்னால் நின்று இவர்கள் காட்டும் அன்பை நான் பார்த்து வியப்பதென்று நான் என்ன செய்ய.

இத்தகைய அன்புக்கு பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லை.

பதிலுக்கு அன்பும், என் கலையும், அதை செய்ய நான் ஏற்ற பல பாத்திரங்களும் தான்.

எனக்கு நடக்கும் நல்லதோ, கெட்டதோ உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றிகளும், விபத்துகளும் எனக்கு விசித்திரமல்ல.

சில இடர்களை கடந்து பல பாடம் கற்றவன். ஆனால் பல விபத்துகளை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இவ்விபத்தே சான்று.

ஆயிரம் வேலைகளும், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கையில், இந்த விபத்து நேர்ந்திருக்க வேண்டாம் தான்.

ஆனால் நல்ல மருத்துவர்களும், அவர்களின் உதவியாளர்களும், என் சிறு குடும்பமும் உடன் இருக்க, எனக்கு ஒரு குறையும் இல்லாமல் நலம் பெற்று வருவேன்.

எப்படி இருக்கீங்க? எப்ப பார்க்கலாம்? என்று கேள்விகளை கேட்டு துளைக்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் தம்பிக்கு, அண்ணனுக்கு, அப்பனுக்கு, தலைவனுக்கு என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் பதில் சொல்ல நலம் பெற்று திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.

விக்ரமின் இருமுகன் புதிய தகவல்கள்…!

விக்ரமின் இருமுகன் புதிய தகவல்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumugan stillsதமிழக ரசிகர்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்த ஜோடி விக்ரம்-நயன்தாரா இணைந்துள்ள படம் இருமுகன்.

ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இப்படத்தில் விக்ரம் இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

‘ரா’ உளவுப் பிரிவு ஏஜெண்ட்டாகவும் திருநங்கை கேரக்டரிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதியை அறிவித்துள்ளர்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் இசையை வெளியிடுகின்றனர்.

இதனையடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நாளை மீண்டும் ‘தெறி’க்க விடும் விஜய் ரசிகர்கள்

நாளை மீண்டும் ‘தெறி’க்க விடும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay theri stillsஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி சூப்பர் டூப்பர் ஹிட்டத்தது.

இப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி இன்னும் ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வருகிற ஜீலை 22ஆம் தேதி 100வது நாளை தொடவுள்ள நிலையில் இப்படத்தை மீண்டும் ரசிகர்கள் தியேட்டரில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.

எனவே சென்னை ஆல்பட் தியேட்டரில் நாளை தெறி சிறப்புக் காட்சி திரையிடப்படவுள்ளது.

இதனை வரவேற்கும் வகையில் கொடி, பேனர் என உற்சாகத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

சிவகார்த்திகேயனோடு மோதும் ஜீவா..!

சிவகார்த்திகேயனோடு மோதும் ஜீவா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and jeevaசிவகார்த்திகேயன் நடித்து மிகப்பிரம்மாண்டாக தயாராகியுள்ள படம் ‘ரெமோ’.

இவருடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்நிலையில் இதே நாளில் ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் வெளியாகவுள்ளதாக சற்று முன் அறிவித்துள்ளனர்.

டிகே இயக்கியுள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

கபாலிக்காக புதிய தியேட்டர்…? கொண்டாடும் மோகன்லால் ரசிகர்கள்.!

கபாலிக்காக புதிய தியேட்டர்…? கொண்டாடும் மோகன்லால் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohanlal stillsரஜினியின் கபாலி பட கேரள உரிமையை மோகன்லால் பெற்றுள்ளதும் இதுவரை இல்லாத வகையில் அதிக தியேட்டர்களில் வெளியிட இருப்பதையும் நாம் முன்பே பார்த்தோம்.

இத்துடன் மோகன்லால் ரசிகர்களும் படத்தை வரவேற்க டிக்கெட் விற்பனைகளை தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் தான் புதிதாக கட்டியுள்ள ஆஷிர்வாத் தியேட்டரின் திறப்பு விழாவை நேற்று நடத்தியுள்ளார் மோகன்லால்.

அதில் முதன்முதலாக ‘கபாலி’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து இருக்கிறாராம்.

இவையில்லாமல் தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள ‘ஒப்பம்’ படத்தின் ட்ரைலரையும் கபாலி திரையிடப்படும் தியேட்டர்களில் திரையிட இருக்கிறாராம்.

அஜித்-விஜய்க்கே சவால் விடும் சூர்யாவின் ‘S3’ வியாபாரம்

அஜித்-விஜய்க்கே சவால் விடும் சூர்யாவின் ‘S3’ வியாபாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam suryaஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘எஸ் 3’ பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.

தற்போது அங்கு நிறைவு பெறுவதையொட்டி அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கப்படவுள்ளது.

ஆனால் இதற்கு முன்பே, இப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

தெலுங்கு உரிமை 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதை முன்பே பார்த்தோம்.

தற்போது தமிழக உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ. 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
இதனை உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இது அஜித்-விஜய் படங்களின் வியாபாரத்திற்கே சவால் விடுவதாகவும் கோலிவுட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படங்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால், இப்படம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

More Articles
Follows