லீடர் படத்திற்கு முன்பே இரு படங்களை முடிக்கும் கமல்

லீடர் படத்திற்கு முன்பே இரு படங்களை முடிக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan stillsகமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளார் என்பது தமிழகம் அறிந்த ஒன்று.

எனவே தன் கைவசம் உள்ள படங்களை விரைவாக முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

ஜனவரி முதல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்

இதன் தலைப்பை லீடர் என மாற்றியுள்ளனர்.

இதற்கு முன்பே, பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட `சபாஷ் நாயுடு’ படத்தை தொடங்கவிருக்கிறாராம்.

இதனையடுத்து `விஸ்வரூபம்-2′ பட மீதமுள்ள காட்சிகளையும் எடுத்து முடிக்கவிருக்கிறாராம்.

இதனிடையில் தலைவன் இருக்கிறான் என்ற படத்தலைப்பை அறிவித்தார் கமல். அது என்னாகும்? என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.

Kamalhassan plans to complete 2 movies before Leader Shooting

கையெடுத்து கும்பிடுறேன்; நான் சொல்றத கேளுங்க ப்ளீஸ்… சூர்யா

கையெடுத்து கும்பிடுறேன்; நான் சொல்றத கேளுங்க ப்ளீஸ்… சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya glassவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் டூயட் பாடி வருகிறார் சூர்யா.

இந்நிலையில் சென்னையில் தன் சூட்டிங்கை முடிந்துவிட்டு, காரில் வீடு திரும்பியிருக்கிறார் சூர்யா.

காரில் சூர்யா இருப்பதை உறுதிக் செய்துக் கொண்ட சில ரசிகர்கள் காருக்கு இணையாக வேகமாக தங்களை பைக்கை ஓட்டி அவரை படம் பிடித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்களின் வேகத்தை பாரத்த சூர்யா தன் காரை நிறுத்தி, அவர்களோடு பேசியுள்ளார்.

அப்போது…

உங்களுடைய அன்புக்கு நன்றி. இப்படி வேகமாக நீங்கள் பைக் வண்டி ஓட்டுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.

தயவு செய்து வேகத்தோடு விளையாடாதீர்கள். உங்களை கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்.

அன்புக்கு நன்றி. என் மீது அன்பிருந்தால் நான் சொல்வதை கேளுங்கள். என்று சொல்லியிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Suriya request his fans not to ride bike in over speed

 

கபாலி-பாகுபலிக்கு பிறகு மெர்சலுக்கு கிடைத்த உலக கௌரவம்

கபாலி-பாகுபலிக்கு பிறகு மெர்சலுக்கு கிடைத்த உலக கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay smileஅட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெர்சல்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படம், அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில் பாரீஸ் நகரில் உள்ள ‘லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)’ திரையரங்கில் திரையிடப்படவுள்ளதாம்.

இத்தியேட்டரில் சுமார் 2,200 பேர் அமர்ந்து இப்படத்தை பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளிலேயே ‘லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டர்தான் மிகப்பெரியது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

தென்னிந்திய படங்களில் இதற்கு முன்பு இங்கு ‘கபாலி’ மற்றும் ‘பாகுபலி’ ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை ‘லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்க நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

After Kabali and Baahubali movies Mersal to be screened at Le Grand Rex Paris

mersal at paris

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal shankarஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தை ஏஎம். ரத்னம் தயாரித்திருந்தார்.

தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை தில் ராஜு என்ற பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.

‘இந்தியன் 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் தலைப்பை ‘லீடர்’ என்று மாற்றம் செய்துள்ளனர்.

தெலுங்கில் பாரதியூடு 2 என பெயர் வைக்கவுள்ளதாக தெரிகிறது.

விரைவில் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழக அரசியல் நிகழ்வுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இதன் சூட்டிங் 2018 ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Kamal Shankar movie Indian2 title will be changed as Leader

bigg boss indian 2

அக். 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

அக். 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal producer councilதமிழக படங்களுக்கு 10 சதவீதமும், மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதித்துள்ளது தமிழக அரசு.

சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி 28% வரி இதற்கு முன்பே அமலில் உள்ளது.

தற்போது உள்ளாட்சி அரசின் 10% வரிக்கும்  மத்திய அரசின் ஜிஎஸ்எஸ் வரி சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கேளிக்கை வரி தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கனவே Piracy முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% / 28% ஜிஸ்டி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27.09.2017 அன்று தமிழ்ப்படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம்.

இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்.

இது சம்பந்தமாக இன்று (அக்டோபர் 3) தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதனால், வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From 6th Oct 2017 new tamil movies will not be released Producer Council announced

ரஜினி அரசியல் கட்சி குறித்து லதா ரஜினி பேட்டி

ரஜினி அரசியல் கட்சி குறித்து லதா ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajinikanth with super starஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பாக கேர் பாஃர் சில்ட்ரன்ஸ் நிகழ்ச்சி லதா ரஜினி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

அப்போது குழந்தை கடத்தல், குழந்தை பாதுகாப்பு, குழந்தை தற்கொலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு லதா ரஜினி கூறியதாவது…

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்.

மக்களுக்கான பல நல்ல திட்டங்களை வைத்துள்ளார்.

அவர் அரசியலுக்கு வருவதை அவரே அறிவிப்பார் என்றார் லதா ரஜினிகாந்த்.

More Articles
Follows