தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், நரேன், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.
ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.
மே 11ஆம் தேதி ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.
இந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியானது.
இந்த விழாவில் படக்குழுவினருடன் சிம்பு, உதயநிதி, ராதிகா, லிசி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தும் அவர் விழாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன் பேசும்போது…
“கமல்ஹாசனின் ரசிகன் என்ற ஒரே தகுதியோடு மட்டும் தான் சினிமாவுக்குள் வந்தேன்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ படத்துடன் தன் ‘இரவின் நிழல்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.
இதே நேரு உள்விளையாட்டரங்கில் ஜூன் 5ம் தேதி என்னுடைய ‘இரவின் நிழல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.” என்றார்.
அனிருத் மேடையில் இசையமைக்க ‘அன்பே சிவம்’ படத்தின் ‘யார் சிவம்’ பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடினார்.
விழாவில் இறுதியாக கமல்ஹாசன் பேசியதாவது…
“உயிரே உறவே வணக்கம்”
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என படத்தின் விழா நடக்கிறது.
தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்தவை. அதை தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை நடிகனும் இல்லை.
நான் முதன் முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்ன போது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை கட்டி பிடித்து அழுதார்.
‘எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?’ என்று கேட்டார்.
என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பி கொடுக்க வேண்டும்.
நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது.
இந்தியாவின் அழகே பன்முகம் தான். இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா? என்று கேட்காதீர்கள். நான் இந்தியும் தமிழும் சுமாராக தான் பேசுவேன். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை
என் காரை தொட்டு பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்கு தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும்.
என் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது என்பதை பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர்.
ஏன் நானும் ரஜினியும் திரையில் போட்டியாக இருந்தாலும் நண்பர்களாக இல்லையா..? அது போல தான் அரசியலும்…
இளவயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள்.
அது போல கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, ஸ்டாலின் என தொடர்ந்து அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது”
இவ்வாறு கமல் பேசினார்.
Kamal Haasan speech at Vikram audio launch