பிரசாந்தின் ‘அந்தகன்’ உடன் இணைந்த ‘அசுரன்’ தயாரிப்பாளர்; 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி

பிரசாந்தின் ‘அந்தகன்’ உடன் இணைந்த ‘அசுரன்’ தயாரிப்பாளர்; 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அந்தாதூன்.

இந்த படத்தை தமிழில் பிரசாந்த் நடிப்பில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்து அவரது அப்பா தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார்.

இதில் பிரசாந்த் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

இவர்களுடன் சிம்ரன், சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை அசுரன் பட தயாரிப்பாளர் தாணு பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

1992ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரஷாந்த் நடித்து வெளியான ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தை தயாரித்து வெளியிட்டவர் தாணு.

தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ‘அந்தகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Kalai Puli S Thanu to release Prashanth’s Andhagan

மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகை அனுஷ்கா

மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகை அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை அனுஷ்கா.

இவர் தமிழில் ரஜினியுடன் லிங்கா, விஜய்யுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 மற்றும் சிம்புவுடன் வானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களிலும் நடித்து இந்தியளவில் பிரபலமாகவுள்ளார்.

இந்த நிலையில் இவர் விரைவில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளதாம்.

இந்த படம் நாயகியை மையப்படுத்திய கதை என கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் அனுஷ்கா நடித்திருந்தார்.

இந்த இரு படங்களிலும் விக்ரம் தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Anushka and Vijay joins for a new film

ஆத்விக் பர்த்டே பார்ட்டியில் மிரட்டலான AK 61 லுக்கில் நடிகர் அஜித்

ஆத்விக் பர்த்டே பார்ட்டியில் மிரட்டலான AK 61 லுக்கில் நடிகர் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ல் வெளியானது. நிறைய அஜித் ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லையாம்.

இதனால் கலவையான விமர்சனங்களே வந்தன. முதல் 3 நாட்கள் மட்டுமே ஓப்பனிங் இருந்துள்ளது.

தற்போது தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் நடிகர் அஜித்,

முழுக்க முழுக்க நரைத்த தாடி… நரைத்த தலை முடி என லுக்கில் இருக்கிறார் இவர்.

இந்நிலையில் தன் மகன் ஆத்விக்கிற்கு பிறந்தநாளை தன் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் நேற்று மார்ச் 2ல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில் அஜித்தின் மச்சானும் நடிகருமான ரிச்சர்ட்டும் கலந்துக் கொண்டுள்ளார்.

தன் குடும்பத்தாருடன் அஜித் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரகீறது.

தன் அடுத்த பட AK 61 பட லுக்கிலேயே அஜித் இந்த பார்ட்டியில் கலந்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Ajith look from Aadvik birthday party

என் அப்பா பாடல்களை கேட்டால் என் மனைவி திட்டுவாள்..; போட்டுக் கொடுத்த யுவன்

என் அப்பா பாடல்களை கேட்டால் என் மனைவி திட்டுவாள்..; போட்டுக் கொடுத்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி, பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்வில்

“25 ஆண்டுகளாய் யுவன்”-நிகழ்ச்சியில் பாடகர்கள்:

விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்தில் “ஆண்டிப்பட்டி கணவாக் காத்து” பாடலை பாடிய பாடகர் செந்தில்தாஸ் வேலாயுதம், சாம்.பி.கீர்த்தன், வேலு, சுஜாதா வெங்கட்ராமன்,லேகா( Lega sri),பேபி.அதிரா ஆகியோர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜா பாடல்கள் அடங்கிய இசை நிகழ்வை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

*இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது….*

இவ்வளவு நாள் என்னோட பயணம் அனைத்தையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும், என்னோட வேலை செய்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசை கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி.

என்னுடன் பிரம்மா இருப்பார் இப்போது அவர் இல்லை அது வருத்தம் தான். என்னை இயக்கி கொண்டிருப்பது நீங்கள் தான். உங்களால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என்னுடன் இருக்கும் டீம் மிக நல்ல டீம், ராம்ஜி, கௌசிக், குரு எல்லோருக்கும் நன்றி.

நா.முத்துக்குமாருக்கு நான் கொடுத்த இடம் வேறு, அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச்சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய பாடல்களில் நிறைய வேலை பார்த்திருக்கிறேன்.

இப்போது விவேக், பா விஜய் என நிறைய பேருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்னுடன் பயணித்த பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றி.

இந்த 25 வருடம் எப்படி போனது என்பதே தெரியவில்லை. முதல் முறை நான் மியூசிக் செய்த போது இப்போது மாதிரி சோஷியல் மீடியா இல்லை. பாடல் ஹிட்டாகிறதா என்றே தெரியாது.

யாராவது வந்து சொன்னால் தான் தெரியும், ஒரு முறை அம்மாவுடன் வெளியே போன போது, சிலர் “அங்க பாரு.. யுவன் அம்மா என்றார்கள்” ஓகே நம்மை இசையமைப்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என மகிழ்ச்சியாக இருந்தது.

அம்மாவை உண்மையில் நிறைய மிஸ் செய்கிறேன். இன்று கூட நிறைய அவரை பற்றி நினைத்தேன். ஆனால் அந்த இடத்தை கடவுள் புண்ணியத்தில் என் மகள் நிறைவு செய்கிறாள், கடவுளுக்கு நன்றி. இசைத்துறையில் நான் நிறைய பேருடன் வேலை பார்க்க நினைத்தேன் லதா மங்கேஷ்கர் உடன் வேலை செய்ய நினைத்திருந்தேன் முடியாதது வருத்தம் தான்.

நான் அதிகம் கேட்பது எப்போதும் அப்பா பாடல்கள் தான், வீட்டில் அவர் பாடல்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது என் மனைவி கூட திட்டுவார் ‘போதும்பா’ என்பார். ஆனால் எனக்கு அவர் பாடல்கள் தான் பிடிக்கும்.

நடிகர் விஜய் சாருடன் இருக்கும் ஜகதீஷ், ஒரு போட்டோ அனுப்பியிருந்தார். அதில் விஜய் சார் மகன், யுவனிசம் டீசர்ட் போட்டிருந்தார், பின்னர் விஜய் சாரை சந்தித்தபோது, என் மகன் உங்களோட பெரிய ஃபேன் என்றார், அது மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் இந்தி குறித்து போட்ட டீசர்ட் குறியீடு கிடையாது, உண்மையிலேயே எனக்கு இந்தி தெரியாது அது தான், அதில் கருத்து எதுவும் இல்லை. நான் ஆன்லைனில் அதிகம் இருக்க மாட்டேன் என் மனைவி தான் இருப்பார் என்னைப்பற்றி விசயங்களை காட்டும் போது, சந்தோஷமாக இருக்கும். எனக்கு படத்தை விட ஃபேமிலி தான் சந்தோசம் தரும். அவர்களுடன் இருப்பதை தான் நான் அதிகம் விரும்புவேன்.

25 வருடங்கள் கடந்ததாக தெரியவில்லை, இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். என் அம்மாவோட இழப்பு தான் இறைவன் பற்றிய தேடல் அதிகமாக காரணம், நானா இப்படி இசையமைக்கிறேன் என தேடும்போது ஒரு புள்ளியில் போய் நிற்கும் அல்லவா, அது தான் கடவுள் என நினைக்கிறேன்.

என் தயாரிப்பில் திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன் அடுத்த வருடத்தில் நானே இயக்க போகிறேன்.

ரஜினி சார் படத்திற்கு இசையமைக்க நான் ரெடி. நிறைய சுயாதீன ஆல்பங்கள் செய்ய வேண்டும் நிறைய புது முயற்சிகள் செய்ய வேண்டும். இந்த பயணம் நல்லபடியாக தொடரும் என நம்புகிறேன் நன்றி.

Yuvan Press Meet on completing 25 years of the musical journey

தெறிக்கவிடும் போஸ்டர்கள்..; சுபாஸ்கரன் பிறந்தநாளில் ‘பொன்னியின் செல்வன் -1’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெறிக்கவிடும் போஸ்டர்கள்..; சுபாஸ்கரன் பிறந்தநாளில் ‘பொன்னியின் செல்வன் -1’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான
மணி ரத்னம் இயக்கி வருகிறார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” இந்தாண்டு 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

(இன்று மார்ச் 2ல் லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே.

இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் அடுத்தடுத்து செய்திகள் வெளிவரும்..

Official : Ponniyin Selvan release date revealed

ponniyin selvan

இசைஞானி இளையராஜாவின் ‘உலகம்மை’-க்கு கைகொடுத்த பாக்யராஜ்

இசைஞானி இளையராஜாவின் ‘உலகம்மை’-க்கு கைகொடுத்த பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக, ‘உலகம்மை’ திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா உருவாக்கியுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசையை பிரபல இயக்குநர்-நடிகர் கே பாக்யராஜ் வெளியிட்டார்.

‘சாதி சனம்’, ‘காதல் எஃப்எம்’ மற்றும் ‘குச்சி ஐஸ்’ புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்ட ‘உலகம்மை’ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார்.

மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
திருநெல்வேலி பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. ’96’ புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள ‘உலகம்மை’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், அருள்மணி, காந்தராஜ், சாமி, ஜேம்ஸ், பிரணவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் பிரகாஷ், தான் மாணவராக இருந்த காலத்திலிருந்தே சு சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.
“அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதை திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன்.
சமுத்திரம் அவர்கள் காலமாகிவிட்டதால், அவருடைய மனைவியிடம் இருந்து உரிமையைப் பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார் உலகம்மை மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழிவாங்குகிறார்கள். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை படம் சித்தரிக்கிறது.
சமூக வாழ்வியல் திரைப்படமான உலகம்மையின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும்.
டாக்டர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராகவும், வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர்.
பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர். ரெட் டிராகன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் உலகம்மையை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் பிரகாஷ் இயக்கத்தில், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வி ஜெய பிரகாஷ் தயாரித்துள்ள, சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்ட ‘உலகம்மை’-யில், கௌரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Ilaiyaraaja’s BGM from ‘Ulagammai’ released by K Bhagyaraj

More Articles
Follows