தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ள காப்பான் படத்தை கேவி. ஆனந்த் இயக்கியுள்ளார்.
இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிட தடை கோரி, சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த, ஜான் சார்லஸ் என்பவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்
அந்த மனுவில்…
சரவெடி என்ற தலைப்பில், ஒரு கதையை உருவாக்கினேன். விவசாயம், நதி நீர் பங்கீடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த கதையின் நோக்கம். இந்த கதையை, பதிவு செய்துள்ளேன்.
இயக்குனர், கே.வி.ஆனந்தை, 2017 ஜனவரியில் சந்தித்து, கதை பற்றி விவாதித்தேன். அவரும், பயன்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில், காப்பான் பட சில காட்சிகளை பார்த்த போது அது என் கதையை காப்பி அடித்துள்ளது தெரிய வந்தது.
என் அனுமதி பெறாமல், கதையை படமாக்கியுள்ளனர். எனவே, படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காப்பான் படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், காப்பான் படத்தின் கதையும், சரவெடி என்ற தலைப்பில் உருவான கதையும் வேறு வேறு. இரண்டும் சம்பந்தமில்லை. எனவே மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி, சதீஷ்குமார் விசாரித்தார். மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.