தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குக்கூ என்ற தனது முதல் படத்திலேயே ஒரு அழகான காதல் கதையை சொன்னவர் ராஜூமுருகன்.
எனவே இவரது அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அண்மையில் வெளியான இவரது ‘ஜோக்கர்’ எதிர்பாராத வகையில் பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வருகிறது.
அரசியலை நையாண்டி செய்த இப்படத்திற்கு இதுவரை எந்தெவொரு எதிர்ப்பும் எழவில்லை. மாறாக அரசியல்வாதிகளே பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தன் அடுத்த படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…
அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். விரைவில் அப்படம் அறிவிப்பேன். இது முற்றிலும் வேறு களத்தில் இருக்கும்.
நான் என்னுடைய இயக்குநர் லிங்குசாமியிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். என்றார்.
‘ஜோக்கர்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்தியில் தானே ரீமேக் செய்ய விரும்புவதாக ராஜூமுருகன் கூறியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.