கமலின் அரசியல் நடவடிக்கையால் இந்தியன் 2 சூட்டிங் நிறுத்தம்..?

கமலின் அரசியல் நடவடிக்கையால் இந்தியன் 2 சூட்டிங் நிறுத்தம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2 imagesகமல்ஹாசன்-ஷங்கர்-லைகா-அனிருத் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகவுள்ள படம் இந்தியன் 2.

இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் வெளியானது முதல் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இப்படத்தின் சூட்டிங்கில் சில நாட்கள் கலந்துக் கொண்டு நடித்தார் கமல். அதன் பின்னர் அரசியல் பணிகளில் பிசியாக உள்ளார்.

மேலும் வருகிற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சி பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல்.

இதனால் இந்தியன் 2 சூட்டிங் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவியது.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில்…

சென்னை அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.

தற்போது சூட்டிங்குக்கு தேவையான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and pawanபல வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷ் – வெற்றிமாறன் ஆகியோரது கூட்டணி ’அசுரன்’ படத்திற்காக மீண்டும் தற்போது இணைந்துள்ளது.

இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இதில் முக்கிய கேரக்டர்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் அவர்களும் ‘அசுரன்’ படத்தில் இணைந்துள்ளார்.

பிரபுதேவா-வின் ‘பொன் மாணிக்கவேல்’ பட டீசர் வெளியானது

பிரபுதேவா-வின் ‘பொன் மாணிக்கவேல்’ பட டீசர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pon manikka vel teaserநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.

இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். அவரின் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்டோம் நடிக்கின்றனர்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய் டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்பட டீசரை அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

குடித்து விட்டு தகராறு செய்கிறார்.; தாடி பாலாஜி மீது மீண்டும் நித்யா புகார்

குடித்து விட்டு தகராறு செய்கிறார்.; தாடி பாலாஜி மீது மீண்டும் நித்யா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nithya balajiஒரு சில சினிமா படங்களில் நடித்தாலும் டிவி நிகழ்ச்சிகள் மூலம் படு பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி.

இவருடைய மனைவி பெயர் நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்பதால் நித்யா தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நித்யா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த செய்தியை நம் தளத்தில் அப்போது பதிவிட்டு இருந்தோம்.

இதன் பின்னர் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். இருவரையும் சேர்ந்து வாழ பலரும் அட்வைஸ் செய்தனர்.

இந்நிலையில் மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார் நித்யா.

அதில், ‘மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என நித்யா தெரிவித்துள்ளார்.

தற்போது பாலாஜி வெளியூர் சூட்டிங்கில் இருப்பதால் அவர் சென்னை வந்ததும், விசாரணை போலீசார் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

அண்மையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள பெண்களுக்கான புதிய கட்சியில் நித்யா முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Digangana Suryavanshiதெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் “ ஹிப்பி “ படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஹிந்தி படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார்.

பல ஹிந்தி பாடல்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட அழகான காதல் கதை சில்லு கருப்பட்டி

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட அழகான காதல் கதை சில்லு கருப்பட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sillu karuppatti stillsஇந்த சமூகத்தில் காதல் குறைந்து கொண்டே போகிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த நம்பிக்கைகளை புதுப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. நிச்சயமாக, ஒவ்வொரு காதலர் தினத்திலும் இசை காதலர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், இந்த ‘பிப்ரவரி’யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில்லு கருப்பட்டி படத்தின் “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள்.

பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் சந்தித்திராத ஒருவரை சந்திப்போம், ஆனால் நாம் அவருடன் நீண்ட காலம் பழகியது போலவும், உரையாடியது போலவும் ஒரு வலுவான உணர்வை கொடுக்கும். அது தான் தெய்வீக காதலின் அழகு அல்லவா?. நாம் சந்திக்கும் முன்னரே ஆன்மாக்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை, இதை நம்பாதவர்களுக்கு அந்த தருணம் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை. பிரதீப்குமார் முதன் முதலில் டியூனை போட்டுக் காட்டியபோது, ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் காதலின் சாராம்சம் இருந்ததை உணர முடிந்தது. அவரது குரலின் மூலம் மயக்கும் காதல் பாடல்களை நமக்கு வழங்கிய அவர், சில்லுக் கருப்பட்டி மூலம் இசையிலும் காதலை அள்ளி தெளிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்கிறார்.

கண்ணம்மா, மாயநதி, ஆகாயம் தீப்பிடிச்சா, ஆகாசத்த நான் பாக்குறன், மோகத்திரை மற்றும் பல ஆன்மாவை தொடும் பாடல்களை பாடி புகழ்பெற்ற பிரதீப் குமார், ஹலிதா ஷமீம் எழுதிய இந்த பாடலையும் பாடியிருக்கிறார்.

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட நான்கு அழகான காதல் கதைகளை கொண்ட ஒரு தொகுப்பு தான் சில்லு கருப்பட்டி. வெங்கடேஷ் வெலினேனி தயாரித்திருக்கிறார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே மற்றும் சில பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

More Articles
Follows