தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில தினங்களுக்கு முன் மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
அப்போது சில தினங்கள் மெர்சல் டீசர் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து இப்படத்தின் எடிட்டர் ரூபன் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
‘சமீபகாலமாக சினிமாவுக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. சினிமாவை பற்றி அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.
பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்கின்றனர்.
இதனால் சில படங்கள் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றன. நடிகர்களையும் வெறுக்கிறார்கள்.
இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்கள் பரவுகிறது. இது எல்லாவற்றையும் தாண்டி அஜித், விஜய், இயக்குனர்கள் அட்லீ, சிவா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோரின் நல்ல எண்ணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் மற்றொருவரின் உழைப்பை மிகவும் மதித்து வேலை செய்கின்றனர். தன் படத்தின் டீசர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்பட கூடாது என்று பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மெர்சல் டீசர் வெளியானால் விவேகம் வசூல் பாதிக்கும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.