தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் செம.
ஜிவி. பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அர்த்தனா நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
வருகிற மே 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இது படம் தொடர்பான விழா என்றாலும் தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்ட்லைட் ஆலை வன்முறை நடைபெற்று வருவதால், எல்லாருடைய பேச்சும் அது தொடரபாகவே இருந்தது.
இந்த போராட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல பேர் காயம் பட்டுள்ளனர்.
எனவே அவர்களுக்குகாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவ்விழாவில் ஜிவி. பிரகாஷ் பேசும்போது…
தூத்துக்குடி மக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்ட்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அங்குள்ள மக்கள் ப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் காவல்துறையும் தமிழக அரசும் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களின் உயிரை பறித்துள்ளது.
உரிமைக்காக போராடுபவர்களின் உயிரை பறிக்க எவருக்கும் உரிமையில்லை” என்று பேசினார்.
I dont know how the policemen acts ruthless Who gave them right says GV Prakash