தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அதர்வா நடித்து, தயாரித்துள்ள செமபோத ஆகாதே வருகிற மே 25ந் தேதி வெளிவருதாக இருந்தது.
அதற்கான விளம்பரமும் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அந்த தேதியில் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி தரவில்லை.
இதனால் பட வெளியீடு ஜுன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:
அதர்வா, தான் தயாரித்துள்ள செமபோத ஆகாதே படத்தை 25ந் தேதி வெளியிட விரும்பினார். தயாரிப்பாளர் சங்கம் அமைத்துள்ள பட வெளியீட்டு குழு, மாதத்தில் ஒரு வாரம் சிறிய படங்கள் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளது.
மே 11ந் தேதி வெளிவர வேண்டிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் 17ந் தேதி வெளிவந்ததால், 18ந் தேதி வெளிவருவதாக இருந்த செமபோத ஆகாதே படத்தை 25ந் தேதிக்கு தள்ளி வைத்தோம்.
ஆனால் 25ந் தேதி செம, பொட்டு, ஒரு குப்பையின் கதை, திருப்பதிசாமி குடும்பம், காலக்கூத்து, கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, பேய் இருக்காக இல்லியா, கள்ளச்சிரிப்பழகி போன்ற சிறிய படங்கள் வெளிவருகிறது.
அன்று செம போத ஆகாதே வெளிவந்தால் இந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது, என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அதர்வாவிடம் தெரிவித்தபோது தனது படத்தை ஜூன் 14ந் தேதி வெளியிட்டுக் கொள்வதாக அவரே பெருந்தன்மையுடன் உறுதியளித்தார்.
என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.