நானும் ஹீரோதான் ‘மீசையை முறுக்கு’ம் ஹிப்ஹாப் ஆதி

நானும் ஹீரோதான் ‘மீசையை முறுக்கு’ம் ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hip hop thamizha aadhiதிரையுலகில் ஒரு துறையில் இருக்கும் பிரபலமானவர் மற்றொரு துறையில் நுழைவது வழக்கமான ஒன்றுதான்.

பிரபல இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தற்போது முன்னணி ஹீரோ வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

தற்போது இவர்களுடன் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இணைந்துள்ளார்.

பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வந்த இவர், விஷால் நடித்த ‘ஆம்பள’ படம் மூலம் திரையுலகில் நழைந்தார்.

தற்போதும் படங்களுக்கும் இசையமைத்து வரும் நிலையில், ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கபாலி-தெறி புரொடியூசருடன் சிவகார்த்திகேயன்?

கபாலி-தெறி புரொடியூசருடன் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyanரெமோ படத்தை தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தையும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா.

இதனையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் பொன்ராம் இணைய உள்ள படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு கபாலி, தெறி என அதிரடி ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற செய்திகள் வலம் வருகின்றன.

மேலும் இதுகுறித்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக இரவு நேரத்திலும் வரலாம் என சொல்லப்படுகிறது.

அஜீத்தை மீட் பண்ணியே ஆகணும்; அடம் பிடிக்கும் கிரிக்கெட் வீர்ர்

அஜீத்தை மீட் பண்ணியே ஆகணும்; அடம் பிடிக்கும் கிரிக்கெட் வீர்ர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor ajithரசிகர்களைத் தாண்டி அஜித்துக்கு திரையுலகிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது கிரிக்கெட் துறையிலும் ஒரு தீவிர ரசிகர் உருவாகி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீர்ர் பிரெட்லீ.

இவர் இசைத் துறையிலும் அதிக ஆர்வமாக உள்ளவர்.

சமீபத்தில் இவர் கலந்துக் கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியில் அஜித்தின் ஆளுமா டோலுமா பாடல் ஒலிப்பரப்ப பட்டுள்ளது.

இந்த தாளத்திற்கு அங்குள்ள அனைவரும் ஆரவாரம் செய்து ஆடிபாடியுள்ளனர்.

அதன்பின்னர் இப்பாடல் விவரங்களையும் அஜித்தையும் கேட்டு அறிந்திருக்கிறார் பிரெட்லீ.

எனவே, தற்போது ஒரு தடவையாவது அஜித்தை மீட் பண்ணியே ஆகணும் என்று அடம் பிடிக்கிறாராம்.

‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…’ என்பதை செய்து காட்டுவாரா ரஜினி?

‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…’ என்பதை செய்து காட்டுவாரா ரஜினி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie latest stillsகாவேரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போராட்டங்கள் நடைபெறுவதால் பதட்டம் நிலவி வருகிறது.

தன்னுடைய ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த், கர்நாடகாவில் இருந்தார் என்பதற்காக ஒவ்வொரு முறையும் இப்பிரச்சினை வரும்போதெல்லாம் ரஜினியின் பெயர் அடிப்படும்.

இந்நிலையில் 25 வருடங்களுக்கு முன்பு ரஜினி கூறியதாக கூறப்படும் பேட்டி இணையங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில்…”தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். காவிரி பிரச்சினை தொடர்பாக தயவு செய்து யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்.

அப்படி ஈடுபட்டால், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஒருவேளை இது தொடருமானால் எனது ரசிகர் படையுடன் நான் கர்நாடகா செல்வேன்” என்று தெரிவித்திருந்திராம்.

கபாலி படத்தில் நான் 25 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன் சொல்லு என்று ரஜினிகாந்த் பன்ச் டயலாக் பேசி நடித்திருப்பார்.

தற்போது இதுபோன்று செய்து காட்டுவாரா? என கேட்கின்றனர்.

‘நடிப்பதற்காகவே வாழ்கிறவர் விக்ரம்’ – VJ அஞ்சனா வாழ்த்து

‘நடிப்பதற்காகவே வாழ்கிறவர் விக்ரம்’ – VJ அஞ்சனா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram vj anjanaஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த ‘இருமுகன்’ கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பட்டைய கிளப்பி வருகிறது என விநியோகிஸ்தர்களே தெரிவித்துள்ளனர்.

படம் வெளியாகி ஒரு வாரத்தில் ரூ. 70 கோடி வசூலை நெருங்கியுள்து.

இந்நிலையில் இதன் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

அப்போது வெற்றிக்கு காரணமாக ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம், இயக்குனர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சனா பேசும்போது…

“சிலர் பணத்துக்காக வாழ்கிறார்கள். நான் சாப்பிடுவதற்காக வாழ்கிறேன்.

விக்ரம் சார் நடிப்பதற்காகவே வாழ்கிறார்.” என்று பேசினார்.

விஜய்சேதுபதி கதையில்தான் சூர்யா நடிக்கிறாரா?

விஜய்சேதுபதி கதையில்தான் சூர்யா நடிக்கிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriya 35th movie updatesநானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என செய்திகள் வந்தன.

இதில் விஜய்சேதுபதியுடன் இரண்டு நாயகிகள் நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

திடீரென சூர்யா படத்தை இயக்க ஒப்புக் கொண்டார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் விஜய்சேதுபதிக்காக எழுதப்பட்ட கதையில்மாற்றம் செய்துதான், சூர்யா நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின.

ஆனால் இதை மறுத்துள்ள படக்குழுவினர் சூர்யா 35 படத்தின் கதை முற்றிலும் புதியது. என தெரிவித்துள்ளனர்.

இதன் சூட்டிங் செப்டம்பர் இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

More Articles
Follows