தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெர்சல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகளை விட தற்போது ரிலீஸ் ஆகி அதைவிட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
படத்தில் விஜய் பேசி இடம்பெற்ற டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி வசனங்களுக்கு பாஜக-வினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
பாஜக.வை சேர்ந்த எச்.ராஜா சென்சார் அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதற்கு சென்சார் அதிகாரிகளும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சர்ச்சைக்குள்ளான காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மெர்சல் தயாரிப்பாளர் முரளி.
இந்நிலையில் விஜய் ரசிகரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ் தன் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
G.V.Prakash KumarVerified account @gvprakash
முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்! இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன். We don’t need recensor #mersal
என பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.