‘கன்னி மாடம்’ வளினா & ‘திரெளபதி’ காயத்ரிக்கு ‘கம்பெனி’ கொடுக்கும் ‘கோலி சோடா’ பாண்டி

‘கன்னி மாடம்’ வளினா & ‘திரெளபதி’ காயத்ரிக்கு ‘கம்பெனி’ கொடுக்கும் ‘கோலி சோடா’ பாண்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக் களத்தோடு உருவாகியுள்ள படம் ‘கம்பெனி’.

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக
வைத்து உருவாகியுள்ள இப்படத்தை தங்கராஜு இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் மிகப்பெரிய பொருட்
செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் தெரிஷ் குமார், பிரித்வி ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.

நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் ‘திரெளபதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.

பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு
பயணிக்கிறார்கள்.

அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்,
என்பது தான் படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை மையமாக இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதோடு, இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத பஸ்
பாடிபில்டிங் தொழிற்சாலையையும், அதன் பணிகளையும் படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவே இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளாராம்.
அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு ரசிக்கும்படியும் வந்திருக்கிறதாம்.

படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நான்கு இளைஞர்களில் ஒருவரான அறிமுக நடிகர் தெரிஷ் குமார்,
சண்டைக்காட்சிகளில் டூப் ஏதும் போடாமல் ரியலாக நடித்தாராம்.

ஒரு சண்டைக்காட்சியில் மிக உயரமான இடத்தில் இருந்து தெரிஷ்
குமார் கீழே விழுவதுபோன்ற காட்சியை படமாக்க முடிவு செய்த படக்குழு, அந்த காட்சியை டூப் போட்டு எடுக்க முடிவு செய்ய, நடிகர்
தெரிஷ் குமாரோ, டூப் வேண்டாம், நானே நடிக்கிறேன், என்று கூறி ரியலாக குதித்தாராம். ஆனால், எதிர்பாரத விதமாக அவர் பாதுகாப்பு
வளைத்தை தாண்டி விழுந்ததால், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அங்கு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பிறகு சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட தெரிஷ் குமார்,
அதேபோல் ரியலாக சண்டைக்காட்சிகளில் நடிக்க, அவரை பார்த்து ஸ்டண்ட் மாஸ்டர் மிரண்டு போய் விட்டாராம்.

சண்டைக்காட்சிகளில் மட்டும் இன்றி நடிப்பிலும் படக்குழுவினரை மிரள வைத்திருக்கும் தெரிஷ் குமாரின் நடிப்பை பார்க்கும் போது,
அவருக்கு இது தான் முதல் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார், என்று ஒட்டு மொத்த
படக்குழுவே அவரை பாராட்டுகிறது.

தெரிஷ் குமாருடன் மற்ற மூன்று பேரும் அவர் அவர் கதாப்பாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கராத்தே
வெங்கடேஷ், ரமா, சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில்
நடித்திருக்கிறார்கள்.

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக
அமைந்திருக்கிறது.

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜுபின் நிச்சயம் பாராட்டு பெறுவார், என்று இயக்குநர் தங்கராஜு நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.

செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.சசிகுமார் கவனிக்கிறார்.

மிராக்கல் மைக்கேல்
சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பெஞ்சமின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். எம்.ஜி.பஞ்சாட்சரம் இணை தயாரிப்பு பணியை
கவனிக்கிறார்.

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி
வேலைகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்க உள்ள படக்குழு திரையரங்குகளில் படத்தை
வெளியிட திட்டமிட்டுள்ளது.

Goli Soda Pandi’s new film is titled Company

இளவரசே.. நீங்கள் அதற்குள் விடை பெற்றுக் கொள்ள முடியாது.; ஜெயம் ரவி & கார்த்தியின் ட்விட்டர் ட்விஸ்ட்

இளவரசே.. நீங்கள் அதற்குள் விடை பெற்றுக் கொள்ள முடியாது.; ஜெயம் ரவி & கார்த்தியின் ட்விட்டர் ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான #பொன்னியின்செல்வன் படபிடிப்பு குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது. படத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளார்கள்.

நேற்று, #பொன்னியின்செல்வன் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ஜெயம் ரவி,
“பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன்.

மணிரத்தினம் சாரின் காமெடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன்.

இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்”.. என்று ரவி டிவிட் செய்து இருந்தார் ஜெயம் ரவி.

இதை படித்த கார்த்தி,

“இளவரசே @actor_jayamravi நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .

இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம்.
– வந்தியத்தேவன் ” என்று
கார்த்தி டிவிட் செய்து , #பொன்னியின்செல்வன் படத்தில் தனது கேரக்டர் வந்தியதேவன் என்பதை உறுதி செய்துள்ளார்.

இப்படி கார்த்தி டிவிட் செய்ததை ரசிகர்கள் ரசித்து கொண்டாடுகிறார்கள்.

Actor Karthi confirms that he’s playing Vandhiyathevan in Ponniyin Selvan in funny tweet to Jayam Ravi

நடிகை ரோகிணியின் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த சசிகுமார்

நடிகை ரோகிணியின் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரோகிணி கோடிட்ட இடங்களை நிரப்புக, எல் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள ‘3சி சென்னை கார்ஸ் கேர்’ எனும் கார் கேர் நிறுவனத்தின் இரண்டாவது கிளையை நடிகர் சசிகுமார் இன்று திறந்து வைத்தார்.

மேலும் ரோபோ சங்கர், நடிகர்கள் ஹரிஷ் & கயல் தேவராஜ், இயக்குநர் மோகன் ஜி , இசையமைப்பாளர் ஜூபீன், நடிகை ரேகா நாயர், விஜய் டிவி அஸார் & நவீன், ஆதித்யா டிவி அகல்யா மற்றும் பாரதிய ஜனதா அறிவுசார் பிரிவு தலைவர் ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார்,

“ரோகிணி எனக்கு நீண்ட நாள் நண்பர். அவரின் இந்த முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. இவர் மேலும் பல கிளைகளை தொடங்கி வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

பின்னர் நிறுவனர் ரோகிணி பேசும் போது, சசிகுமார் அண்ணன் வந்து திறந்து வைத்து வாழ்த்தியதற்கு நன்றி.

பொதுவாகவே ஒவ்வொருவரும் தனது வழக்கமான வேலையுடன் கூடுதல் வருமானம் வரும் மற்றொரு தொழிலை செய்ய வேண்டும்.

அப்படி யோசித்து தான் கடந்த வருடம் எனது இந்த கார் கேர் நிறுவனத்தை அண்ணன் விஜய் சேதுபதி அவர்களை வைத்து துவங்கினேன்.

அதன் வெற்றியைத் தொடர்ந்து இன்று இரண்டாவது கிளையை துவங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வந்திருந்து வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர் களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.

Grand Opening of Chennai Cars Care to be Inaugurated by Actor SasiKumar

டூப்ளிகேட் ஆர்யா.. 70 லட்சம் மோசடி பார்ய்யா..; சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு ஆர்யா நன்றி

டூப்ளிகேட் ஆர்யா.. 70 லட்சம் மோசடி பார்ய்யா..; சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு ஆர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா என்பவர், ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத்துறையில் பணிப்புரிந்து வந்துள்ளார்.

இவர் நடிகர் ஆர்யா மீது கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.

அதாவது நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகாரளித்தார்

அந்த பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தும் பணக்கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னிடம் 70 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாக பெற்று கொண்டு ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு, மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் நடிகர் ஆர்யா கடந்த 10ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது.

இதனால் விசாரணை மேலும் விறுவிறுப்பானது்.

சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் ஒருவர் போலி வலைத்தளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த நபரை (சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக்) போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா,

“சென்னை காவல் ஆணையருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

Actor Arya thanks cops for nabbing conmen who duped a woman using his name

ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தளிக்கும் விஜய்சேதுபதி

ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தளிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘லாபம்’.

இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்பி. ஜனநாதன். இவர் அண்மையில் காலமானார். எனவே மற்ற படக்குழுவினர் இணைந்து படத்தின் மீத பணிகளையும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்தனர்.

லாபம் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

ஆறுமுகக்குமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியதாக கூறப்பட்டது.

தற்போது தியேட்டர்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் முடங்கியிருந்த படங்கள் அனைத்தும் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்ற நிலையில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியை (செப்டம்பர் 10) முன்னிட்டு லாபம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Vijay Sethupathi’s Laabam Grand Release On September 9th

பெண்களுக்காக ‘பூமித்ரா’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்

பெண்களுக்காக ‘பூமித்ரா’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கீர்த்தி சுரேஷ் தனது புது நிறுவனம் குறித்து ரசிகர்களுக்கு சமீபமாக பல யூகங்களை அறிவித்து வந்திருந்தார்.

இன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் பூமித்ரா என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான பிராண்டா இருக்கும், மேலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் பல நன்மைகளைப் ஊக்குவிப்பதாக, இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான நுகர்வோரின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்நிறுவனம்.

பூமித்ரா சரும தயாரிப்புகள் , ஒவ்வொரு நவீன சருமத்திற்கும் ஏற்ற சரும பராமரிப்பு பொருட்களை, நம் பண்டைய கால அழகு பராமரிப்பை தழுவி, நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்குகிறது.

தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒவ்வொருவரின் தோல் மற்றும் கூந்தலுக்கும் பொருந்தும் வகையில் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

சரும தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முழுமையான ஆய்வுக்குப் பிறகு, மிகுந்த கவனத்துடன் கலவை செய்யப்படுகிறது.

பூமித்ராவின் தயாரிப்புகள் சுத்தமானவை, பாதுகாப்பானவை, சைவ பொருட்கள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுபவை. மேலும் இத்தயாரிப்ப்புகள் சுற்றுசூழல் சுழற்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுபவை.

தனது இந்த புதிய பயணத்தை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது…

“ஒரு குழந்தையாக, என் பாட்டி முதலான பெண்கள் அவர்களின் அழகை பராமரிக்க இயற்கை பொருட்களை நம்பியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன், அது இன்றுவரை என் மனதில் பசுமையாக இருக்கிறது.

பண்டைய இயற்கை பொருட்களின் செயல்திறன் எனது தோலுக்கு முழுமையான மற்றும் நீடித்த நன்மைகளை மட்டுமே வழங்கியது.

பூமித்ரா மூலம், இயற்கையான தோல் பராமரிப்பின் இந்த நன்மையை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்த்னமை மிக்க தயாரிப்புகள் கொண்டு அழகை பராமரிக்கலாம்.

இன்று வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் சுகாதாரம் பற்றிய விழிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் தோல் பராமரிப்பில் தேர்வுகள் செய்யும் போது சுற்றுசூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

பூமித்ரா அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு சரியான தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்கும், அதே நேரத்தில் பெரிய எண்ணிக்கையிலான மக்களிடையே இயற்கை பொருட்களின் பயன்பாட்டை பரிந்துரைக்கும் புதிய தயாரிப்பாகவும் இது இருக்கும்

கீர்த்தி சுரேஷ் பூமித்ரா தயாரிப்புகள் குறித்து கூறியதாவது. “இயற்கையானது, நிலையானது மற்றும் சிறப்பான பயனை தருவது” என்றார்.

Actress Keerthy Suresh new venture as an entrpreneur with boomithra

More Articles
Follows