பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான படம் ‘பஹீரா’.

இப்படத்தில் அமிரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி, காயத்ரி, சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார்.

இப்படம் மார்ச் 3-ம் அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தை OTT இல் வாய்ப்பு வழங்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், ‘பஹீரா’ படத்தை மார்ச் 31 முதல் பிரபலமான ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹீரா

Prabhu Deva’s ‘Bagheera’ to stream on OTT from March 31

தள்ளிப் போகும் ‘ஜவான்’..; மீண்டும் விஜய்யுடன் இணையும் அட்லி

தள்ளிப் போகும் ‘ஜவான்’..; மீண்டும் விஜய்யுடன் இணையும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் ‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை, ‘ஜவான்’ அறிவிக்கப்பட்ட வெளியீட்டு தேதியிலிருந்து ஒத்திவைக்கப்படலாம் என்று பல தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ‘ஜவான்’ படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்றும், மே மாதம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவதுமாக தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நான்காவது முறையாக விஜய்யுடன் அட்லீ கைகோர்க்கவுள்ளதாகவும் சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

ஜவான்

‘Jawan’ is all set to release on June 2

நான் ஒரு இரவு மனிதன்.; என்னை மாற்றியவர் அவர்தான்.; PS2 விழாவில் சிம்பு பேச்சு

நான் ஒரு இரவு மனிதன்.; என்னை மாற்றியவர் அவர்தான்.; PS2 விழாவில் சிம்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் சிம்பு கலந்து கொண்டனர்.

நடிகர் சிம்பு மேடையில் பேசும்போது..

“நான் ஒரு இரவு மனிதன். பெரும்பாலான என் பணிகளை இரவில் தான் கண் விழித்து செய்வேன்.

அப்படி இருந்த என்னை மாற்றியவர் மணிரத்னம். இப்பொழுது பகல் நேர முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். தற்போது அதிகாலையில் ஷூட்டிங் சென்று வருகிறேன்.

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ ஆர் ரகுமான் சிறந்த ஒரு இசையை கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

மேலும்.. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் உங்களை நடிக்க அழைத்திருந்தால் எந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் என கேட்டனர்?

அதற்கு மணிரத்னம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நான் செய்திருப்பேன்” என்று பேசினார் சிம்பு.

மணிரத்னம் இயக்கிய ‘செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில் அரவிந்தசாமி அருண் விஜய் விஜய் சேதுபதி ஆகியோருடன் நடித்திருந்தார் சிலம்பரசன் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu speech at Ponniyin Selvan 2 audio launch

திருக்கடையூரில் 64 கலச புனித நீர்.; நடிகர் செந்தில் குடும்பத்துடன் செய்த பூஜை

திருக்கடையூரில் 64 கலச புனித நீர்.; நடிகர் செந்தில் குடும்பத்துடன் செய்த பூஜை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980-90 களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில்.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து நடித்த காட்சிகள் ஆண்டுகள் கடந்தாலும் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசித்து பார்க்கும் வகையில் உள்ளது.

கவுண்டமணி – செந்தில் காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில், நடிகர் செந்தில் தனது 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பீமரத சாந்தி பூஜை நேற்று நடைபெற்றது.

இதில் செந்தில் மற்றும் அவரது மனைவி இருவரும் மாலை மற்றும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இருவர் மீதும், 64 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டது.

நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும் குடும்பத்தினர் இந்த பூஜையில் பங்கேற்றனர்.

செந்தில்

Comedy actor Senthil visited the Thirukkadaiyur Abhirami temple

எலும்பு துண்டுக்கு குரைத்த ஜேம்ஸ் வசந்தன்.. ரஜினி கமல் கண்டிக்கனும்.; இளையராஜாவுக்கு ஆதரவாக ஆதிராஜன்

எலும்பு துண்டுக்கு குரைத்த ஜேம்ஸ் வசந்தன்.. ரஜினி கமல் கண்டிக்கனும்.; இளையராஜாவுக்கு ஆதரவாக ஆதிராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான “நினைவெல்லாம் நீயடா” படத்தை எழுதி இயக்கி வரும் ஆதிராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தன்னை இசையமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்ளும் ஜேம்ஸ் வசந்தன் என்பவர் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், இசைஞானி இளையராஜாவை பற்றி மிகவும் மட்டமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். இசைஞானி இந்தியாவின் அடையாளம்.

சிறந்த ஆன்மிகவாதி. உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களில் 9 வது இடம் பிடித்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். இளையராஜாவுக்கு நிகராக இன்னொருவர் பிறக்கவும் முடியாது.. இசையில் சிறக்கவும் முடியாது.

உலகமே கொண்டாடும் ஒரு இசைஞானியை ஒரு மிகச் சாதாரணமான… மறைமுகமாக ஊழியம் பார்த்து வயிறு வளர்த்து கொண்டிருக்கும் நாகரீகமற்ற ஜேம்ஸ் வசந்தன், மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி மத அரசியல் செய்யும் நோக்கத்துடன் விமர்ச்சித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

சென்னையைத் தாண்டினால் யார் என்றே தெரியாத இவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாய்க்கொழுப்பின் வெளிப்பாடு. அவர் பயன்படுத்திய வார்த்தைகளை கவனித்து பார்த்தால் அவர் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பேட்டி எடுப்பவர்” நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?” என்று கேட்கும் போது கூட திமிர்த்தனமாக பதில் அளித்து இருக்கிறார்.

இதிலிருந்தே தெரிகிறது…. இவர் யாரோ வீசிய எலும்பு துண்டுக்குத் தான் குரைத்திருக்கிறார் என்பது. இளையராஜா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுபவர் என்பது உலகறிந்த விஷயம்.

திறமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் புகழின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் வித்யா கர்வம் இருக்கத்தான் செய்யும். உனக்கு ஏன் எரிகிறது?. குறைகுடங்கள் எல்லாம் கூத்தாடித் திரியும் போது நிறைகுடம் ததும்பினால்தான் என்ன?

உண்மையிலேயே ஒருவரை விமர்சிக்க விரும்பினால் அடிப்படை நாகரீகம் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய சாதனையாளரை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இவ்வளவு மட்டமான வார்த்தைகளால் விமர்சிக்கும் உனக்கெல்லாம் பண்பாடு பற்றியும் பக்குவம் பற்றியும் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

கோடான கோடி ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானியை இது போன்ற சில்லரைக
ள் சீண்டி பார்ப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியாவின் ஆகப்பெறும் அடையாளத்தை, விருதுகளுக்கெல்லாம் பெருமை சேர்த்த ஒரு மாமனிதரை… அவர் வாழும் காலத்திலேயே அசிங்கப்படுத்த நினைப்பவர்களை, என்னைப் போன்ற அவருடைய உண்மையான ரசிகர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஜேம்ஸ் வசந்தன் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறு பரப்பும் வீடியோவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் இளையராஜா ரசிகர்கள், ஜேம்ஸ் வசந்தன் செல்லும் இடமெல்லாம் கூடிநின்று வசைமாரி பொழியும் சூழ்நிலை உருவாகும்.

தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை சங்கங்களும் இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும். ரஜினிகாந்த் கமலஹாசன் விஜயகாந்த் பாரதிராஜா பாலா வெற்றிமாறன் சசிகுமார் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வசந்தனின் வாய்க்கொழுப்பை கண்டிப்பாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆதிராஜன் கூறியுள்ளார்.

ஆதிராஜன்

ilayaraja music composeing in ninaivellam neeyada movie

உங்க எல்லாருடைய அன்புக்கும் நன்றி.; தமிழில் பேசிய உலகழகி ஐஸ்வர்யா ராய்

உங்க எல்லாருடைய அன்புக்கும் நன்றி.; தமிழில் பேசிய உலகழகி ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, ரேவதி, ஏஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்திருந்தார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் ஐஸ்வர்யா ராய் பேசினார்.

அவர் பேசும்போது.. “பொன்னியின் செல்வன் படத்திற்கு நீங்கள் அனைவரும் தந்த அன்பு மிகப்பெரியது.

உலகம் முழுவதும் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சென்னையிலும் என ஒவ்வொரு வீட்டிலும் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

உங்களின் அன்பினால் எங்களுடைய ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது” என ஆங்கிலத்தில் பேசினார்.

அதன் பின்னர்…. “உங்க எல்லாருடைய அன்புக்கும் நன்றி” என தமிழில் பேசினார் ஐஸ்வர்யா ராய்.

Aishwarya Rai speech at Ponniyin Selvan 2 audio launch

More Articles
Follows