KT குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’..; ஹீரோ & டைரக்டர் யார்..?

KT குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’..; ஹீரோ & டைரக்டர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gentle man 2கதை சொல்லும் சினிமா,பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்புகளில்.. கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாக தயாரித்துக் காட்டியவர் கே.டி.குஞ்சுமோன்.

வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்திய படம்.

நாயகன் அர்ஜுனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம். ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. படத்தின் வியாபாரத்தை தாண்டி பல மடங்கு செலவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுக்கு தனித்துவத்தை ஏற்படுத்தினார்.

ஒரு சிறிய காதல் கதையான “காதல்தேசம்” படத்தை பிரமாண்டப்படுத்தி ரசிகர்களிடம் ஹீரோவாக உயர்ந்து நின்றார். ” காதலன் ” படத்தின் மூலமாக பிரபு தேவாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அவர் தன்னுடைய பிரமாண்ட தயாரிப்பான , ‘ரட்சகன்’ மூலம் தமிழ் திரை உலகிற்கு தெலுகு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவை அறிமுகப்படுத்தினார்.

மேலும் அவர் மிஸ் யூனிவர்ஸ் சூஷ்மித்தாசென்யை வெள்ளி திரைக்கு அறிமுகம் செய்தார்.. மேலும் பல நடிகர் நடிகைகள் மற்றும் பல தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகப் படுத்தினார். இப்பொழுது அதே பிரமாண்டத்துடன் மீண்டும் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார்.

இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய படமான “ஜென்டில்மேன் ” படத்தின் இரண்டாம் பாகத்தை அதிரடியாக தயாரிக்கிறார். ஜென்டில்மேன்2 மூலம் மீண்டும் தயாரிப்பு வேலைகளை ஆரம்பிக்கிறேன் என்கிற அவர்
மேலும் கூறும்போது..

ஜென்டில்மேன் தமிழ் , தெலுங்கு, மொழிகளில் மெகா ஹிட் ஆக்கினார்கள் மக்கள். இந்திய மற்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட்டமாக வரவேற்றார்கள்.
ஜென்டில்மேன் படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டம் ஜென்டில்மேன்-2 வில் காணலாம்.

நவீன தொழில் நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்படும். நடிகர், நடிகை மற்றும், தொழில் நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஜென்டில்மேன்-2 பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளி வரும். இந்த திரைப்படம் முதலில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான பிறகு தான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பலரை வைத்து பல மலையாள படங்களை தயாரித்த இவர் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களை தமிழகம் கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் வெளியிட்டார்.

எந்த படத்தை வெளியிட்டாலும் பிரமாண்டமாக செலவு செய்து பப்ளிசிட்டி செய்வதால்.. கே.டி.குஞ்சுமோன் வெளியீடு ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான்.

Gentleman Producer KT Kunjumon announces sequel

நடிகை கங்கனாவின் செயலை பகத் சிங்குடன் கம்பேர் செய்த விஷால்

நடிகை கங்கனாவின் செயலை பகத் சிங்குடன் கம்பேர் செய்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதோனி படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை அடுத்து மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார்.

இவர்தான் விஜய் இயக்கும் தலைவி படத்தை ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கங்கனாவின் பேச்சை தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இனி கங்கனா மும்பைக்கு வரக்கூடாது என்று சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் கோபமடைந்த கங்கனா ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிஞ்சா என்னை தடுத்துப் பாருங்கள்’ என சவால் விடுத்தார்.

இதனையடுத்து நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

மோதலை தொடர்ந்து கங்கனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்து பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இதனிடையில் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணாவின் வீடு ஆபிஸ் கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று (செப்டம்பர் 9) மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. (இந்த செய்தியை நம் தளத்தில் நேற்று பார்த்தோம்.)

மேலும் கங்கணாவும் பலத்து பாதுகாப்புடன் மும்பை வந்தார்.

இத்துடன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மீது குற்றம் சாட்டி வருகிறார் கங்கணா ரணாவத்.

இந்நிலையில், கங்கணாவுக்கு ஆதரவு தமிழ் திரையுலகில் இருந்து ஆதரவு குரல் கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

“அன்பார்ந்த கங்கணா,

உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை.

இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருக்கிறீர்கள்.

1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது உங்களின் காரியம்.

பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.

உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்”.

இவ்வாறு நடிகர் விஷால் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Vishal compares Kangana ranaut to Bhagat Singh

அசோக் செல்வன் & மேகா ஆகாஷ் ஜோடியை இணைக்கும் இயக்குநர் ஸ்வாதினி

அசோக் செல்வன் & மேகா ஆகாஷ் ஜோடியை இணைக்கும் இயக்குநர் ஸ்வாதினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

megha akashதமிழின் மிக முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்திருக்கும் மேகா ஆகாஷ் இளமை பொங்கும் திறமையுடன் தரமான படங்களை தந்து வரும் அசோக் செல்வனின் அடுத்த காமெடி, டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J. செல்வகுமார் இது குறித்து கூறியதாவது…

மிகவும் திறமை வாய்ந்த, இளம் நடிகையான மேகா ஆகாஷ் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தின் நாயகி கதாப்பாத்திரம் கதைப்படி, நவநாகரீக ஸ்டைல் லுக்கில் இருக்கும் அதே நேரம், குடும்பபாங்கான தோற்றமும் கொண்டிருக்க வேண்டும்.

இயக்குநர் ஸ்வாதினி நடிகை மேகா ஆகாஷை பரிந்துரைத்தபோது, அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவார் என அனைவக்கும் தோன்றியது. திரைக்கதையை பலமுறை படித்தவன் என்கிற முறையில் மேகா ஆகாஷ் இக்கதாப்பாத்திரதிற்கு கச்சிதமாக உயிர் தருவார் மேலும் அவர் அசோக் செல்வனுக்கு மிகச்சரியான, பொருத்தமான ஜோடியாக இப்படத்தில் மிளிர்வார் என்பதில் எனக்கு துளியளவும் ஐயமில்லை. அவருடன் இணைந்து பணியாற்றும் மிகச்சிறந்த நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார்.

படத்தின் தற்போதைய நிலை குறித்து கூறியபோது…

அரசாங்கம் கொரோனாவுக்கு எதிரான பாதுக்காப்புடன், படப்பிடிப்பை துவங்குவதற்கான, தளர்வுகளை அறிவித்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

ஒரு சினிமா தயாரிப்பாளராக, எங்களது தற்போதைய தேவையை நிறைவேற்றியதற்கு அரசாங்கத்திற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லி கொள்கிறேன். நாங்கள் இப்படத்தின் படப்பிடிப்பை, அரசு கூறியுள்ள அனைத்து முன்னெச்செரிக்கைகளையும் கடைப்பிடித்து, வரும் அக்டோபரில் துவங்கவுள்ளோம். அனைவரையும் கவரும் குடும்ப, காமெடி, டிராமாவான இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிகை மேகா ஆகாஷ் கூறியதாவது…

மிகத்தரமான, நேர்த்தியான திரைக்கதை கொண்ட படத்தில், அதிலும் பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிப்பது என்பது எந்த ஒரு ஹீரோயினுக்கும் வரமே!. அவ்வளவு எளிதில் இம்மாதிரியான வாய்ப்புகள் கிடைத்திராது.

இயக்குநர் ஸ்வாதினி படத்தின் திரைக்கதையை கூறியபோது கதாப்பாத்திரத்தின் ஆத்மாவுக்குள் கரைந்து போனேன். இப்படத்தில் பங்கு கொண்டது பெரும் மகிழ்ச்சி. அடுத்த மாதம் நடக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை எண்ணி ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

Actor Ashok selvan to romance Megha Akash

BREAKING காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

BREAKING காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை நடிகர் #வடிவேல்பாலாஜி காலமானார். அவருக்கு வயது 44.

இவர் விஜய் டிவி & சின்னத்திரையில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.

சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தில் முடங்கி பில்ரோத் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சைக்குப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் அவரை விஜயா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். பின்னர் அங்கிருந்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன் & ஒரு மகள் உள்ளனர்.

Actor Vadivel Balaji passed away

ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்

ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush gv prakash ar rahmanபுதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும் போது “ஏன் இவருக்கு இந்த வேலை” என்று பேசுவதற்கே பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே புதிய முயற்சிக்கு நாங்கள் கைக் கொடுக்கிறோம் என்பார்கள். அப்படியொரு கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது.

‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என்று தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாக பதிப்பார் என்று உறுதியாக நம்பலாம். ‘கோட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்துள்ளனர். ஆம்ல், 17-ம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜி.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், ஜெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

AR Rahman and dhanush to release gv prakash new english album

சர்வதேச விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’.; – ஆன்லைன் ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல்

சர்வதேச விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’.; – ஆன்லைன் ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pachai Vilakkuகாதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதோடு, அதன் மூலம் அவர்களது குடும்பத்தாரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்ததோடு, இந்தியாவின் முதல் சாலை விதி திரைப்படம் என்ற பெருமையோடு வெளியான படம் ‘பச்சை விளக்கு’.

டாக்டர்.மாறன் இயக்கி நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதோடு பத்திரிக்கையாளர்களிடமும் வெகுவாக பாராட்டு பெற்றது.

“மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்” என்று பல பத்திரிக்கைகள் பாராட்டிய இப்படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.

பூடான் நாட்டில் உள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ‘ட்ரக்’ என்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவில் நடைபெற்ற ‘ட்ரிப்விள்’ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருதையும் இப்படம் வென்றுள்ளது.

அதேபோல், நியூயார்க், லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வ தேர்வாக இப்படம் கலந்துக் கொண்டுள்ளது.

’பச்சை விளக்கு’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரத்தை தொடர்ந்து, ஒடிடி நிறுவனங்கள் அப்படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்துள்ளது.

முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களின் படங்களை மட்டுமே ஒடிடி நிறுவனங்கள் வெளியிட ஆர்வம் காட்டி வந்த நிலையில், அறிமுக இயக்குநர் மற்றும் நடிகரின் படத்தை வெளியிட விருப்பம் தெரிவித்திருப்பது ‘பச்சை விளக்கு’ படத்திற்கு கிடைத்த மற்றொரு கெளரவம் ஆகும். காரணம், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அப்படி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நாடகக் காதல் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த பிரச்சினை போல, நமக்கு தெரியாத பல நாடகக் காதல் பிரச்சினைகள் இங்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த நாடகக் காதலில் இருந்து பெண்கள் தங்களை எப்படி காத்துக் கொள்வது, என்பதை விவரித்திருக்கும் இப்படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

ஊடங்கள் பாராட்டிய ‘பச்சை விளக்கு’ படம் தற்போது உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது வென்றிருப்பது படத்திற்கும், படக்குழுவினருக்கும் உற்சாகத்தை கொடுத்திருப்பதோடு, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது என இயக்குநர் டாக்டர் மாறன் தெரிவித்தார்.

Doctor Marans Pachai Vilakku to release in ott

More Articles
Follows