தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2022 ஆண்டில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியானது.
இதில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் திரைத்துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது பார்க்கப்படுகிறது.
இந்த பாடல் காட்சி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வீட்டின் முன்னால் படமாக்கப்பட்டது.
இந்த விருதை பெற்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல் தன் ட்விட்டரில்…
தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. @ssrajamouli இயக்கிய #RRR படத்தின் #NaatuNaatu பாடலுக்காக #GoldenGlobes விருது வென்று தந்திருக்கிறார் @mmkeeravaani முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்.
நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய சினிமாவுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுகொடுத்து பெருமைபடுத்திய இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் ராஜமவுலிக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
கீரவாணி மற்றும் ராஜமவுலி ஆகிய இருவரும் கமல் மற்றும் ரஜினிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
கூடுதல் தகவல்..
கீரவாணி தற்போது பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜென்டில்மேன் 2’ படத்திற்கும் கீரவாணி இசை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Golden Globe Award for Keeravani.; Kamal – Rajini wishes to him