கௌதமி பிரிவு… கமல்-ஸ்ருதி என்ன சொல்கிறார்கள்?

கௌதமி பிரிவு… கமல்-ஸ்ருதி என்ன சொல்கிறார்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal gautami shruthihassanகமலுடன் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நான் இப்போது பிரிகிறேன். இது என் வாழ்க்கையில், நான் எடுத்த பேரழிவு முடிவு என கௌதமி நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து, கமல் கூறியதாக ஒரு அறிக்கை வெளியானதும், அதற்கு கமலின் மக்கள் தொடர்பாளர் மறுப்பு வெளியிட்டதையும் நாம் முன்பே பார்த்தோம்.

தற்போது கமலே தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

‛‛இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல்.
நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர்களின் பிரிவுக்கு கமலின் கமள் ஸ்ருதியும் காரணம் என கூறப்பட்டது.

இது தொடர்பாக ஸ்ருதிஹாசனின் தன்னுடைய செய்தி தொடர்பாளர் வழியாக அனுப்பிய அறிக்கை இது…

“யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்.” என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடி தமன்னா? ஹன்சிகா?

சிவகார்த்திகேயன் ஜோடி தமன்னா? ஹன்சிகா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanரெமோ படத்தை தொடர்ந்து, மோகன்ராஜா இயக்கத்தில் ஒரு படம், அதன்பின்னர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் என நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

முதலில் தமன்னா ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது மான்கராத்தே படத்தில் நடித்த ஹன்சிகாவே மீண்டும் கார்த்திகேயனுடன் இணைகிறாராம்.

ரெண்டு ‘வேதாளம்’… அசத்திய அஜித் ரசிகர்கள்

ரெண்டு ‘வேதாளம்’… அசத்திய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

two special shows will be screened for ajith fansகடந்தாண்டு அஜித் நடித்த வேதாளம் நவம்பர் 10ஆம் தேதி வெளியானது.

இது வெளியாகி ஓராண்டு நிறைவடைய உள்ளதால், ரசிகர்களுக்காக இப்படத்தை அதே தினத்தில் இந்தாண்டு சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிடுகின்றனர்.

முதலில் ஒரு காட்சிதான் திரையிடப்பட இருந்ததாம்.

ஆனால் ரசிகர்களின் பேராதரவு கிடைத்துள்ளதால், இரண்டு காட்சிகளை திரையிட உள்ளனர்.

தற்போது இரு காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாம்.

‘மறக்க முடியாத மரபு கவிதை கௌதமி…’ கமல் கடிதம்.?

‘மறக்க முடியாத மரபு கவிதை கௌதமி…’ கமல் கடிதம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal hassan gautamiதமிழ்நாட்டிற்கு 60 வயது, சென்னை மவுலிவாக்கம் கட்டிடம் தகர்ப்பு என்ற பல செய்திகள் இடையே திடீரென சினிமா ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்திதான் கமல்-கவுதமி பிரிவு.

இந்த செய்தியை நம் தளத்தில் நேற்று பார்த்து இருப்பீர்கள்.

இதற்கு கமல் தரப்பில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற தேடலில், ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

அது கமல் மூலம் எழுதப்பட்டதா? என்பதற்கான விடை தெரியவில்லை.

காரணம் அதில் எந்த ஒரு முன்னுரையும் கமலின் நேர்த்தியும் தென்படவில்லை.

இருந்தபோதிலும் அதை இங்கே பகிர்கிறோம். அப்படியே…

 

kamal-letter

சற்றுமுன் கமலின் மக்கள் தொடர்பாளர் இக்கடிதத்தை மறுத்துள்ளார். கமலுக்கும் இக்கடிதத்திற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை அடுத்து விஜய்சேதுபதியுடன் இணையும் கலைஞர்கள்

சிவகார்த்திகேயனை அடுத்து விஜய்சேதுபதியுடன் இணையும் கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi‘ஆரண்ய காண்டம்’ படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கவுள்ள படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பஹத்பாசில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பிசி. ஸ்ரீராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள பஹத் பாசிலும், ரெமோவில் பணியாற்றிய பி.சி.ஸ்ரீராமும் அடுத்து விஜய்சேதுபதி படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் பொன்ராம் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்ட சமந்தா, விஜய்சேதுபதியுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

இளையராஜா இசையில் ரஜினி வில்லனும் நாயகியும் ஜோடியாம்

இளையராஜா இசையில் ரஜினி வில்லனும் நாயகியும் ஜோடியாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director illayaraja

தென்னிந்திய ரசிகர்களை தன் இசையால் தாலாட்டி வருபவர் இளையராஜா.

ஆயிரம் படங்களை முடித்தபின்னும் அவரது இசைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தற்போது புதிதாக ஒரு இந்திப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

பிரபல இந்தி இயக்குனர் இப்படத்தை பால்கி இயக்குகிறார்.

அமிதாப், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தை இயக்கியவர் இவர்.

இப்படத்தில் அக்ஷய்குமார் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கின்றனர்.

அக்ஷய்குமார் ரஜினி 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே ரஜினியின் கபாலி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows