தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜூன் மாதம் இந்தியாவை கலக்கிய திரைப்படங்களில் ஒன்று என்று சொன்னால் அது ‘விக்ரம்’ படம் தான்.
கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரிலீசான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் என அனைத்து தரப்பினரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களில் கேஜிஎப், புஷ்பா, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
ஆனால் தமிழில் ஒரு பான் இந்தியா படம் வரவில்லையே என்ற ஏக்கம் தமிழக ரசிகர்களிடையே இருந்தது.
ஆனால் விக்ரம் படம் வந்த பிறகு தமிழக ரசிகர்களின் கேள்விகளுக்கு விடையாக அமைந்தது.
‘விக்ரம்’ படத்தின் கிளைமாக்ஸ் இல் அடுத்த பாகத்திற்கான காட்சிகள் இருந்தன.
எனவே விரைவில் மீண்டும் கமல் பகத் ஆகியோர் லோகேஷ் இயக்கத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது உறுதியாகி உள்ளது. ஆனால் இயக்குனர் லோகேஷ் அல்ல. என்ன புரியலையா? சரி விஷயத்துக்கு வருவோம்.
கமலின் புதிய படத்தை மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.
இவர் கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர்.
மேலும் மலையாளத்தில் டேக் ஆப், சி யூ சீன் போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கி உள்ளார்.
கமலை வைத்து மகேஷ் இயக்கும் புதிய படத்தில் பகத் பாசில் நடிக்கக்கூடும் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டு மகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்பது தெரிய வந்துள்ளது.
கூடுதல் தகவல்..
நான் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால் நானே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சென்று அந்த நிறுவனம் சார்பாக படத்தை தயாரிப்பேன். அந்தளவிற்கு கமல் சார் எனக்கு நெருக்கமானவர் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் பகத் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது.
Fahadh Faasil reunites with Kamal a new movie.