தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமா ரசிகர்களை கிட்டதட்ட 20 வருடங்களாக தன் நகைக்சுவையால் சிரிக்க வைத்து மகிழ்வித்தவர் நடிகர் வடிவேலு.
கடந்த சில வருடங்களாக சினிமாவில் இவர் நடிக்கவில்லை. கமலின் தலைவர் இருக்கின்றான் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வடிவேலுவை நாயகனாக வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் என்பவர் தனக்கு அந்த படம் மூலம் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
வடிவேலுவை வைத்து படம் எடுக்க ஒரு நிறுவனம் தொடங்கி எலி படத்தை தயாரித்தேன். ஆனால் எனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.
அந்த நஷ்டத்தை ஈடு கட்ட 2 படங்களில் நடித்து தருவேன் என கூறினார். ஆனால் அவர் செய்யவில்லை. தற்போது என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார். மேலும் வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவரது உறவினர் பணம் கேட்டு மிரட்டுகிறார்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசிலும் புகாரும் அளித்திருந்தார்.
இதனை மறுத்துள்ள வடிவேலு கூறியதாவது.. என்னை களங்கப்படுத்தவும், என் எதிர்காலத்தை வீணாக்கவும் சிலர் தவறான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.” என கூறினார் வடிவேலு.
Eli Producer Sathish complaint against Vadivelu