தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.
இவர் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.
குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிபட்டபோது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.
உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.
மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.
மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.
கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்
சிலையை வடிவமைத்த சிற்பியை கொண்டே உள்ளூர் மக்கள் இந்த கோயிலை திறந்துள்ளனர்.
கோயில் சிலைக்கு பிரதிஷ்டை செய்து
ஆரத்தி எடுத்து வழிபட்டு வருகின்றனர்.
உதவி தேவைப்படுபவோர்க்கு வாரிக் கொடுத்த கர்ணன்.. இவர்தான் எங்கள் கடவுள்.
சினிமாவில் வில்லனாக நடித்தாலும் ஏழைகளுக்கு உதவும் இவரே நிஜ ஹீரோ என்று அந்த கிராமவாசிகள் தெரிவித்தனர்.
கூடுதல் தகவல்…
மக்கள் ஆதரவு இவருக்கு பெருகி வருவதால் சினிமாவில் ஹீரோ கேரக்டர்கள் இவரை தேடி வருகிறதாம்.
தற்போது வரை 5 படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
Dubba Tanda village People in Andhra Pradesh build a temple dedicated to Actor Sonu Sood