தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.
பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.
குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிபட்டபோது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.
உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.
மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.
மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.
கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.
தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்
எனவே பொதுமக்கள் இவரை ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாகவே பார்த்தனர்.
இந்த நிலையில் இவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
பஞ்சாப் சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என தகவல்களும் ஒரு பக்கம் பரவியது.
மேலும் புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்தின் தூதராக சோனு சூட் டை நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூ 20 கோடி அதிகமாக வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது.
அவரது அறக்கட்டளை18 கோடி ரூபாய் வசூலித்ததில் ஒரு கோடியே 90 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாகவும், மீதித் தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் வருமானவரித்துறை தெரிவித்தது.
விதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து சோனு சூட் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வாங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிவிட்டரில் சோனு சூட் கூறியதாவது..
“தமது அறக்கட்டளையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது. ” என பதிவிட்டுள்ளார்.
Actor SonuSood speaks out over allegations of tax evasion after the Income Tax department conducted