தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பத்தில் ஒருவர் இயக்குனர் வசந்த பாலன்.
‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்துள்ளார்.
இவர் தான் வெயில் படம் மூலம் ஜிவி. பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
தற்போது ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து ‘ஜெயில்’ படத்தை எடுத்துள்ளார்.
ஆனால் இந்த படம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் இப்பட ரிலீஸ் குறித்து வருத்தமாக தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்…
“ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும்.
சூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம்.
ஆனா…..இந்த எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது,” என பதிவிட்டுள்ளார்.